Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
பழனி முருகன் வரலாறு அழகிய படங்களுடன்
Page 1 of 1
Re: பழனி முருகன் வரலாறு அழகிய படங்களுடன்
தேவர்கள் சிவபெருமானின் துணையை நாடினார்கள்
கையில மலையில் பரமசிவனும் பார்வதியும் அமர்ந்து இருந்தார்கள். அப்போது
இந்திரன் முதலியன தேவர்கள் ஒன்றாகக் கூடி அங்கு வந்து 'சூரபத்மனால்
சொல்லோண்ணா துயரை தாங்கள் அனுபவிப்பதினால் அவனிடம் இருந்து தம்மைக்
காத்தருள முருகப் பெருமானை அனுப்ப வேண்டும்' என்று அவர்களிடம் முறையிட,
அவ்வாறே செய்கிறோம் என அம்மையும், அப்பனும் ஆசி தந்து அருள் புரிந்தார்கள்.

கையில மலையில் பரமசிவனும் பார்வதியும் அமர்ந்து இருந்தார்கள். அப்போது
இந்திரன் முதலியன தேவர்கள் ஒன்றாகக் கூடி அங்கு வந்து 'சூரபத்மனால்
சொல்லோண்ணா துயரை தாங்கள் அனுபவிப்பதினால் அவனிடம் இருந்து தம்மைக்
காத்தருள முருகப் பெருமானை அனுப்ப வேண்டும்' என்று அவர்களிடம் முறையிட,
அவ்வாறே செய்கிறோம் என அம்மையும், அப்பனும் ஆசி தந்து அருள் புரிந்தார்கள்.

Re: பழனி முருகன் வரலாறு அழகிய படங்களுடன்
சிவபெருமான் ஆறு குழந்தைகளைப் பெற்று எடுத்தார்
எல்லாம் வல்ல சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய ஆறு
அருட்சுடர்களும் ஆறு குழந்தைகளாக சரவணப் பொய்கையில் இருந்த தாமரை மலர்களில்
தோன்றின

அருட்சுடர்களும் ஆறு குழந்தைகளாக சரவணப் பொய்கையில் இருந்த தாமரை மலர்களில்
தோன்றின
Re: பழனி முருகன் வரலாறு அழகிய படங்களுடன்
தேவர்கள் சிவன், பார்வதி மற்றும் முருகனை வணங்கினார்கள்
சிவபெருமானும் பார்வதியும் தனித்தனியாக சரவணப் பொய்கையில் தவழ்ந்தக்
குழந்தைகக்ளைக் கண்டு மகிழ்ந்தார்கள். அன்னை பார்வதி அந்த ஆறு
குழந்தைகளையும் எடுத்து அணைத்தாள். உடனே அவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து ஆறு
முகம் கொண்ட முருகப் பெருமானாக மாறி, அன்னையின் மடியில் அமர்ந்துகொண்டு
தேவர்களுக்குக் காட்சி தந்தார்.

குழந்தைகக்ளைக் கண்டு மகிழ்ந்தார்கள். அன்னை பார்வதி அந்த ஆறு
குழந்தைகளையும் எடுத்து அணைத்தாள். உடனே அவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து ஆறு
முகம் கொண்ட முருகப் பெருமானாக மாறி, அன்னையின் மடியில் அமர்ந்துகொண்டு
தேவர்களுக்குக் காட்சி தந்தார்.
Re: பழனி முருகன் வரலாறு அழகிய படங்களுடன்
நாரத முனிவர் ஞானப் பழத்தை தந்தார்
நாரத முனிவர் தனக்குக் கிடைத்த அரிய மாதுளம் பழத்தைக் கொண்டு வந்து அதை
சிவபெருமானுக்கு வழங்கினார். அதனை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் நாரத
முனிவருக்கு நல்லாசிகளை வழங்கினார். அங்கிருந்த பிள்ளையாரும், முருகனும்
அவர்களில் யாருக்கு அந்தக் கனி கிடைக்கும் என சிவபெருமானை ஆவலுடன்
பார்க்கின்றார்கள்.

சிவபெருமானுக்கு வழங்கினார். அதனை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் நாரத
முனிவருக்கு நல்லாசிகளை வழங்கினார். அங்கிருந்த பிள்ளையாரும், முருகனும்
அவர்களில் யாருக்கு அந்தக் கனி கிடைக்கும் என சிவபெருமானை ஆவலுடன்
பார்க்கின்றார்கள்.
Re: பழனி முருகன் வரலாறு அழகிய படங்களுடன்
ஞானப் பழத்தை யாருக்கு கொடுக்க வேண்டும்?
சிவபெருமானிடம் இருந்த கனியை தனக்கு வேண்டும் எனத் தனித்தனியாக முருகப்
பெருமானும் பிள்ளையாரும் அவரை வேண்டுகிறார்கள். ஒரு கனியை இருவருக்கும்
கொடுக்க முடியாது என்பதினால் அதை யாருக்குத் தருவது என்பதற்காக சிவ
பெருமான் ஒரு எற்பாட்டை செய்தார். அதற்கேற்ப அவர்களிடம் சிவபெருமான் 'ஒரு
நொடியில் இந்த உலகை சுற்றிவிட்டு யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கே
இந்த அரிய மாதுளைக் கனியைத் தருவேன் ' என்று கூறினார்.

பெருமானும் பிள்ளையாரும் அவரை வேண்டுகிறார்கள். ஒரு கனியை இருவருக்கும்
கொடுக்க முடியாது என்பதினால் அதை யாருக்குத் தருவது என்பதற்காக சிவ
பெருமான் ஒரு எற்பாட்டை செய்தார். அதற்கேற்ப அவர்களிடம் சிவபெருமான் 'ஒரு
நொடியில் இந்த உலகை சுற்றிவிட்டு யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கே
இந்த அரிய மாதுளைக் கனியைத் தருவேன் ' என்று கூறினார்.
Re: பழனி முருகன் வரலாறு அழகிய படங்களுடன்
ஞானப் பழத்திற்கான போட்டி துவங்கியது
சிவபெருமான் சொல்லி முடிப்பதற்குள் மயில் மீது ஏறிக் கொண்ட முருகப்
பெருமான் உலகை சுற்றி வரக் கிளம்பிச் சென்றார். பிள்ளையாரோ நன்றாக யோசனை
செய்து விட்டு அங்கிருந்த நாரதரிடம் தாயும் தந்தையும்தானே உலகம் என்று
கேட்டார். நாரதரோ அதற்கு விடை கொடுக்க முடியாமல் திகைத்து நின்றார்.

பெருமான் உலகை சுற்றி வரக் கிளம்பிச் சென்றார். பிள்ளையாரோ நன்றாக யோசனை
செய்து விட்டு அங்கிருந்த நாரதரிடம் தாயும் தந்தையும்தானே உலகம் என்று
கேட்டார். நாரதரோ அதற்கு விடை கொடுக்க முடியாமல் திகைத்து நின்றார்.
Re: பழனி முருகன் வரலாறு அழகிய படங்களுடன்
பிள்ளையாரின் யுக்தி
தாயும் தந்தையும்தானே உலகம் என்று மீண்டும் கேட்ட பிள்ளையார் சற்றும்
தாமதிக்காமல் அவர்கள் இருவரையும் சுற்றி வலம் வந்தப் பின்னர் தான்தான்
முதலில் உலகை சுற்றி விட்டு வந்துள்ளதால் எனக்கு அந்தப் பழத்தை தாருங்கள்
என்று கேட்டார்.

தாமதிக்காமல் அவர்கள் இருவரையும் சுற்றி வலம் வந்தப் பின்னர் தான்தான்
முதலில் உலகை சுற்றி விட்டு வந்துள்ளதால் எனக்கு அந்தப் பழத்தை தாருங்கள்
என்று கேட்டார்.
Re: பழனி முருகன் வரலாறு அழகிய படங்களுடன்
பிள்ளையார் வெற்றி பெற்றதும், ஞானப் பழத்தை பெற்றுக் கொண்டார்
உலகமே தாயும் தந்தையும்தான் என்று தன்னையும் பார்வதியையும் வேகமாக சுற்றி
விட்டு வந்த பிள்ளையாரே போட்டியில் வெற்றி பெற்றதாகக் கூறி விட்டு அந்தப்
பழத்தைப் பிள்ளையாருக்கு கொடுக்க உமையவளும் நாரதரும் பிள்ளையாருக்கு ஆசி
வழங்கினார்கள்.

விட்டு வந்த பிள்ளையாரே போட்டியில் வெற்றி பெற்றதாகக் கூறி விட்டு அந்தப்
பழத்தைப் பிள்ளையாருக்கு கொடுக்க உமையவளும் நாரதரும் பிள்ளையாருக்கு ஆசி
வழங்கினார்கள்.
Re: பழனி முருகன் வரலாறு அழகிய படங்களுடன்
தான் உலகை சுற்றியது போல சுற்றாமல் வந்துள்ள பிள்ளையாருக்கு பழத்தைக் கொடுத்து தன்னை ஏமாற்றி விட்டார்கள் என முருகன் எண்ணினார்
மயில் மீது ஏறிக்கொண்டு நொடிபொழுதில் உலகை சுற்றி வந்து கீழ் இறங்கிய
முருகப் பெருமான் 'எங்கே என்னுடையப் பழம் ' என இறைவனிடம் கேட்டார். இறைவனோ
முதலில் உலகை சுற்றி வந்த பிள்ளையாருக்கு பழத்தை பரிசாகத் தந்து விட்டதாகக்
கூறினார்.

மயில் மீது ஏறிக்கொண்டு நொடிபொழுதில் உலகை சுற்றி வந்து கீழ் இறங்கிய
முருகப் பெருமான் 'எங்கே என்னுடையப் பழம் ' என இறைவனிடம் கேட்டார். இறைவனோ
முதலில் உலகை சுற்றி வந்த பிள்ளையாருக்கு பழத்தை பரிசாகத் தந்து விட்டதாகக்
கூறினார்.
Re: பழனி முருகன் வரலாறு அழகிய படங்களுடன்
வீட்டை விட்டு வெளியேறிய முருகன்
தெற்கு நோக்கிச் சென்றார்.தானே முதலில் உலகத்தை சுற்றி வந்தும் தனக்கு பழம் கிடைக்கவில்லையே என்று
கோபமுற்ற முருகப் பெருமான் அம்மையையும் அப்பனையும் விட்டு விட்டு தனக்கென
ஒரு இடத்தைத் தேடி புறப்பட்டார். பரமசிவனும், பார்வதியும் அவரிடம் தம்மை
விட்டு பிரிந்து செல்ல வேண்டாம் என அவரைத் தடுத்து நிறுத்திக் கேட்டுக்
கொண்டார்கள்.

கோபமுற்ற முருகப் பெருமான் அம்மையையும் அப்பனையும் விட்டு விட்டு தனக்கென
ஒரு இடத்தைத் தேடி புறப்பட்டார். பரமசிவனும், பார்வதியும் அவரிடம் தம்மை
விட்டு பிரிந்து செல்ல வேண்டாம் என அவரைத் தடுத்து நிறுத்திக் கேட்டுக்
கொண்டார்கள்.
Re: பழனி முருகன் வரலாறு அழகிய படங்களுடன்
வழியில் முருகன் ஔவையாரை சந்தித்தார்
தமிழ் பாட்டி ஔவையார் முருகப் பெருமானின் முன் வந்து 'முருகா சின்னப்
பழத்திற்காக சினம் கொள்ளலாமா?. ஆறுவது சினம் அல்லவா' எனக் கூறி விட்டு
'தாயிடமும் தந்தையிடமும் செல்லலாம் வா' என்று வாஞ்சையுடன் அழைத்தார்.

பழத்திற்காக சினம் கொள்ளலாமா?. ஆறுவது சினம் அல்லவா' எனக் கூறி விட்டு
'தாயிடமும் தந்தையிடமும் செல்லலாம் வா' என்று வாஞ்சையுடன் அழைத்தார்.
Re: பழனி முருகன் வரலாறு அழகிய படங்களுடன்
சிவகிரி மற்றும் சக்திகிரி மலைகளை தூக்கிக் கொண்டு இடும்பன் தெற்குப் பகுதியில் இருந்த பொதிகைக்கு சென்று கொண்டு இருந்தான்
இடும்பன் அகத்திய முனிவரின் ஆணையின்படி சக்தி கிரி மற்றும் சிவ கிரி
மலைகளைக் காவடி போல சுமந்து கொண்டு பொதிய மலையை நோக்கிச் சென்றபோது சற்று
இளைப்பாற திருஆவினன் குடியை நோக்கி வருகிறான்.

மலைகளைக் காவடி போல சுமந்து கொண்டு பொதிய மலையை நோக்கிச் சென்றபோது சற்று
இளைப்பாற திருஆவினன் குடியை நோக்கி வருகிறான்.
Re: பழனி முருகன் வரலாறு அழகிய படங்களுடன்
மலைகளை தூக்கிக் கொண்டு சென்றவன் திடீர் என பழனிக்கு அருகில் சென்றபோது பெரும் பாரத்துடன் தூக்க முடியாமல் உள்ளதை உணர்ந்தான்

இறக்கி வைத்த மலைகளை மீண்டும் இடும்பன் தூக்கிய போது அவனால் அவற்றைத் தூக்க
முடியவில்லை. சக்தி கிரி மட்டும் எழும்புகிறது. மற்றொரு மலை மிகுந்த
பாரமாக உள்ளது. எனவே அவன் தோள்கள் வலிக்கவே துயரப்படுகிறான்

இறக்கி வைத்த மலைகளை மீண்டும் இடும்பன் தூக்கிய போது அவனால் அவற்றைத் தூக்க
முடியவில்லை. சக்தி கிரி மட்டும் எழும்புகிறது. மற்றொரு மலை மிகுந்த
பாரமாக உள்ளது. எனவே அவன் தோள்கள் வலிக்கவே துயரப்படுகிறான்
Re: பழனி முருகன் வரலாறு அழகிய படங்களுடன்
முருகன் பழனி மலைப் பகுதியை மனதாற விரும்பியதினால் அங்கேயே பழனி ஆண்டவராக தங்கினார்
மற்றொரு மலையாகிய சிவகிரியை தனது மலையாக்கிக் கொள்ளவும் தான் கோவில் கொள்ளவும் முருகன் முடிவெடுத்து சிவகிரியில் வந்து அமர்கிறான்.

மற்றொரு மலையாகிய சிவகிரியை தனது மலையாக்கிக் கொள்ளவும் தான் கோவில் கொள்ளவும் முருகன் முடிவெடுத்து சிவகிரியில் வந்து அமர்கிறான்.
Re: பழனி முருகன் வரலாறு அழகிய படங்களுடன்
தேவர்கள், ரிஷி மற்றும் முனிவர்கள் போற்றி வணங்க பழனி ஆண்டவர் பழனியில் தங்கி அனைவருக்கும் அருள் பாலிக்கின்றார்

சினம் கொண்டு வந்த சிவபாலகனாகிய முருகப் பெருமான் சிவகிரியை தனது மூன்றாம்
படைவீடாக்கிக் கொள்ளவே சிவபெருமானும், பார்வதியும் மற்றும் பிற
முனிவர்களும் 'பழம் நீ, பழம் நீ' என அன்புடன் அழைத்து ஆசி கூறவே அதுவே பழனி
மலை ஆயிற்று. அது முதல் பார்வதியின் மகனும் பழனி அப்பன் ஆயினான்.

சினம் கொண்டு வந்த சிவபாலகனாகிய முருகப் பெருமான் சிவகிரியை தனது மூன்றாம்
படைவீடாக்கிக் கொள்ளவே சிவபெருமானும், பார்வதியும் மற்றும் பிற
முனிவர்களும் 'பழம் நீ, பழம் நீ' என அன்புடன் அழைத்து ஆசி கூறவே அதுவே பழனி
மலை ஆயிற்று. அது முதல் பார்வதியின் மகனும் பழனி அப்பன் ஆயினான்.
Re: பழனி முருகன் வரலாறு அழகிய படங்களுடன்
பழனிக்குச் சென்றால் முருகப் பெருமானின் அளவற்ற அருளைப் பெறலாம்

பழனி மலைக்கு இடும்பன் காவடி எடுத்ததினால் இன்று
ஆயிரம் ஆயிரம் காவடி ஆட்டமும், மேளமும், தாளமும் ஒலிக்க நாளும் திருவிழா
நடக்கும் நல்லதொரு புண்ணிய ஸ்தலமாக பழனிபதி விளங்குகின்றது. வராதார்
இல்லை இன்று பழனியைப் பாராதார் இல்லை. வேண்டியவர்க்கு வேண்டியதை வழங்கும்
பழனி அப்பனை பணிவாற்கு பாரில் நலம் குறைவது இல்லை.

பழனி மலைக்கு இடும்பன் காவடி எடுத்ததினால் இன்று
ஆயிரம் ஆயிரம் காவடி ஆட்டமும், மேளமும், தாளமும் ஒலிக்க நாளும் திருவிழா
நடக்கும் நல்லதொரு புண்ணிய ஸ்தலமாக பழனிபதி விளங்குகின்றது. வராதார்
இல்லை இன்று பழனியைப் பாராதார் இல்லை. வேண்டியவர்க்கு வேண்டியதை வழங்கும்
பழனி அப்பனை பணிவாற்கு பாரில் நலம் குறைவது இல்லை.

» பழனி முருகன் photo....
» அருணகிரிநாதர் வரலாறு
» அழகிய சிவன் ஆலயம்...
» முருக பெருமானின் அழகிய படங்கள்
» திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்தல வரலாறு
» அருணகிரிநாதர் வரலாறு
» அழகிய சிவன் ஆலயம்...
» முருக பெருமானின் அழகிய படங்கள்
» திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்தல வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum