Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
தினமும் ஒரு தேவாரப்பதிகம்
Page 1 of 1
தினமும் ஒரு தேவாரப்பதிகம்
தினமும் ஒரு தேவாரப்பதிகம்
திருஞானசம்பந்தர் பாடியது / இரு வரி பாடல்கள் கொண்டது
பொது
பாடல் எண் : 1
கல்லானீழல் , அல்லாத்தேவை
நல்லார்பேணார் , அல்லோநாமே.
பொழிப்புரை :
கல்லால மரத்தின் நிழலில் சனகாதி முனிவர்கட்கு அறநெறி உரைத்தருளிய சிவபெருமானை அன்றிப் பிறிதொரு தெய்வத்தை மெய்யுணர்ந்த ஞானிகள் பொருளாகக் கொள்ளார் . நாமும் அவ்வாறே சிவனையன்றி வேறு தெய்வத்தை வழிபடோம் .
குறிப்புரை :
கல்லால் நீழலில் அல்லாத்தேவை - கல்லாலின் நிழலின் இருக்கும் தெய்வமாகிய சிவம் அல்லாத பிறிதொரு தெய்வத்தை . நல்லார் - மெய்யுணர்ந்த ஞானிகள் . பேணார் - பொருளாகக் கொள்ளார் . ( ஆகையால் ) நாமும் அல்லோம் - நாங்களும் அவற்றைப் பொருட்படுத்தோம் .
பாடல் எண் : 2
கொன்றைசூடி , நின்றதேவை
அன்றியொன்று , நன்றிலோமே.
பொழிப்புரை :
கொன்றை மலரைச் சூடிவிளங்கும் சிவபெருமானை அன்றி , பிறிதொரு தெய்வம் முக்திச் செல்வம் தருவதாக நாம் கருதோம் .
குறிப்புரை :
நன்று இலோம் - நன்மை தரும் பொருளாகக் கொள்ளுதல் இலோம் . இல்லோம் - கொள்ளோம் .
பாடல் எண் : 3
கல்லாநெஞ்சின் , நில்லானீசன்
சொல்லாதாரோ , டல்லோநாமே.
பொழிப்புரை :
இறைவனை இடைவிடாது தியானிக்காதவர் உள்ளத்தில் அவன் நில்லான் . ஆதலால் அப்பெருமானின் பெருமைகளைப் போற்றாதவர்களோடு நாங்கள் சேரோம் .
குறிப்புரை :
கல்லாநெஞ்சில் - இடைவிடாது தியானிக்காத உள்ளத்தில் . நில்லான் ஆதலால் திருநாமம் அஞ்செழுத்தும் செப்புதல் , அவர் திறம் ஒருதரமேனும் சொல்லாதவரோடு நாங்களும் சேரோம் என்பது பின்னிரண்டடிகளின் கருத்து . ` இன்னீரமிர்தன்னவள் கண்ணிணை மாரிகற்ப ` என்ற சிந்தாமணியின் உரையால் இப்பொருள் கொள்க .
பாடல் எண் : 4
கூற்றுதைத்த , நீற்றினானைப்
போற்றுவார்கள் , தோற்றினாரே.
பொழிப்புரை :
மார்க்கண்டேயரின் உயிரைக் கவரவந்த கூற்றுவனைத் தன் திருப்பாதத்தால் உதைத்த , தன் திருமேனியில் திருவெண்ணீற்றினைப் பூசியுள்ள சிவபெருமானைப் போற்றுபவர்களே பிறந்ததன் பயனை அடைவர் .
பாடல் எண் : 5
காட்டுளாடும் , பாட்டுளானை
நாட்டுளாரும் , தேட்டுளாரே.
பொழிப்புரை :
சுடுகாட்டில் நடனம் ஆடும் இறைவன் அடியாரேத்தும் பாமாலையை உடையவன் . சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று தம் உள்ளத்தில் நிலைநிறுத்தியவர்களே பேரின்பச் செல்வத்தில் திளைப்பவர்கள் .
குறிப்புரை :
பாட்டு உள்ளானை - அடியாரேத்தும் பாமாலையை உடையவன் . நாட்டு - அவனே முதற்பொருளென்று நாட்டிய . உள் - ( தம் ) உள்ளத்தில் . ஆரும் - திளைக்கின்ற . தேட்டு - செல்வம் . உளாரே - உள்ளவர்களே ; செல்வர் எனத் தக்கவர் என்பது அவாய் நிலையான் வந்தது . ` செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே ` என்ற கருத்து . ஆடும் என்ற பெயரெச்சம் உள்ளான் என்ற பெயர் கொண்டது . ஆர்தல் - திளைத்தல் .
பாடல் எண் : 6
தக்கன்வேள்விப் , பொக்கந்தீர்த்த
மிக்கதேவர் , பக்கத்தோமே.
பொழிப்புரை :
முழுமுதற்பொருளான சிவனை நினையாது தக்கன் செய்த வேள்வியின் குற்றத்தைத் தீர்த்த வல்லமையும் , அருளுமுடைய சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டராய் யாம் உள்ளோம் .
குறிப்புரை :
பொக்கம் - பொய் . வேள்விப் பொக்கம் - போலி வேள்வி , தீர்த்த - பற்றற ஒழித்த . மிக்கதேவர் . பக்கத்தோம் - அணுக்கத் தொண்டராயுள்ளோம் . தீர்த்த - இப்பொருட்டாதலைப் பின்வரும் 8 ஆம் பாசுரத்தினும் காண்க .
பாடல் எண் : 7
பெண்ணாணாய , விண்ணோர்கோவை
நண்ணாதாரை , எண்ணோநாமே.
பொழிப்புரை :
பெண்ணாகவும் , ஆணாகவும் ஆகி தேவர்கள் போற்றும் தலைவரான சிவபெருமானை மனம் , வாக்கு , காயம் ஆகிய திரிகரணங்களாலும் வழிபடாதவர்களை நாம் நெஞ்சாலும் நினைப்பதில்லை .
பாடல் எண் : 8
தூர்த்தன்வீரம் , தீர்த்தகோவை
ஆத்தமாக , ஏத்தினோமே.
பொழிப்புரை :
துன்மதியால் கயிலையைப் பெயர்த்த இராவணனது வலிமையை அழித்து , பின் அவன் தன் தவறுணர்ந்து சாமகானம்பாடி இறைஞ்ச அவனுக்கு ஒளி பொருந்திய வாளும் , நீண்ட வாழ்நாளும் அருளிய இறைவனை நாம் விரும்பிப் போற்றி வணங்கினோம் .
குறிப்புரை :
தூர்த்தன் - இராவணன் . ஆத்தம் - நண்பன் . பண்பாகு பெயர் . ` ஆத்தமென்றெனை ஆளவல்லானை ` - ஆளுடைய நம்பிகள் வாக்கு .
பாடல் எண் : 9
பூவினானும் , தாவினானும்
நாவினாலும் , நோவினாரே.
பொழிப்புரை :
தாமரைப்பூவின்மேல் வீற்றிருந்தருளும் பிரமனும் உலகத்தைத் தாவிஅளந்த திருமாலும் , இறைவனின் திருமுடியையும் , திருவடியையும் உடல்வருந்தித் தேடியும் காணாதவர்களாய்ப் பின்னர் நாவால் அவனைப் போற்றி உருகிநின்றனர் .
குறிப்புரை :
பாடல் எண் : 10
மொட்டமணர் , கட்டர்தேரர்
பிட்டர்சொல்லை , விட்டுளோமே.
பொழிப்புரை :
தலைமயிரைப் பறித்து மொட்டைத் தலையுடன் விளங்கும் சமணர்களும் , கட்டான உடலமைப்புடைய புத்தர்களும் , சைவசமய நெறிக்குப் புறம்பாகக் கூறுவனவற்றை நாம் பொருளாகக் கொள்ளாது விட்டோம் .
பாடல் எண் : 11
அந்தண்காழிப் , பந்தன்சொல்லைச்
சிந்தைசெய்வோர் , உய்ந்துளோரே.
பொழிப்புரை :
அழகிய குளிர்ச்சி பொருந்திய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தர் அருளிய இத்திருப்பதிகத்தைச் சிந்தனை செய்து பாடுபவர்கள் உய்தி பெற்றவர்களாவர் .
தொகுப்பு வை.பூமாலை
Aanmigam's photo.
திருஞானசம்பந்தர் பாடியது / இரு வரி பாடல்கள் கொண்டது
பொது
பாடல் எண் : 1
கல்லானீழல் , அல்லாத்தேவை
நல்லார்பேணார் , அல்லோநாமே.
பொழிப்புரை :
கல்லால மரத்தின் நிழலில் சனகாதி முனிவர்கட்கு அறநெறி உரைத்தருளிய சிவபெருமானை அன்றிப் பிறிதொரு தெய்வத்தை மெய்யுணர்ந்த ஞானிகள் பொருளாகக் கொள்ளார் . நாமும் அவ்வாறே சிவனையன்றி வேறு தெய்வத்தை வழிபடோம் .
குறிப்புரை :
கல்லால் நீழலில் அல்லாத்தேவை - கல்லாலின் நிழலின் இருக்கும் தெய்வமாகிய சிவம் அல்லாத பிறிதொரு தெய்வத்தை . நல்லார் - மெய்யுணர்ந்த ஞானிகள் . பேணார் - பொருளாகக் கொள்ளார் . ( ஆகையால் ) நாமும் அல்லோம் - நாங்களும் அவற்றைப் பொருட்படுத்தோம் .
பாடல் எண் : 2
கொன்றைசூடி , நின்றதேவை
அன்றியொன்று , நன்றிலோமே.
பொழிப்புரை :
கொன்றை மலரைச் சூடிவிளங்கும் சிவபெருமானை அன்றி , பிறிதொரு தெய்வம் முக்திச் செல்வம் தருவதாக நாம் கருதோம் .
குறிப்புரை :
நன்று இலோம் - நன்மை தரும் பொருளாகக் கொள்ளுதல் இலோம் . இல்லோம் - கொள்ளோம் .
பாடல் எண் : 3
கல்லாநெஞ்சின் , நில்லானீசன்
சொல்லாதாரோ , டல்லோநாமே.
பொழிப்புரை :
இறைவனை இடைவிடாது தியானிக்காதவர் உள்ளத்தில் அவன் நில்லான் . ஆதலால் அப்பெருமானின் பெருமைகளைப் போற்றாதவர்களோடு நாங்கள் சேரோம் .
குறிப்புரை :
கல்லாநெஞ்சில் - இடைவிடாது தியானிக்காத உள்ளத்தில் . நில்லான் ஆதலால் திருநாமம் அஞ்செழுத்தும் செப்புதல் , அவர் திறம் ஒருதரமேனும் சொல்லாதவரோடு நாங்களும் சேரோம் என்பது பின்னிரண்டடிகளின் கருத்து . ` இன்னீரமிர்தன்னவள் கண்ணிணை மாரிகற்ப ` என்ற சிந்தாமணியின் உரையால் இப்பொருள் கொள்க .
பாடல் எண் : 4
கூற்றுதைத்த , நீற்றினானைப்
போற்றுவார்கள் , தோற்றினாரே.
பொழிப்புரை :
மார்க்கண்டேயரின் உயிரைக் கவரவந்த கூற்றுவனைத் தன் திருப்பாதத்தால் உதைத்த , தன் திருமேனியில் திருவெண்ணீற்றினைப் பூசியுள்ள சிவபெருமானைப் போற்றுபவர்களே பிறந்ததன் பயனை அடைவர் .
பாடல் எண் : 5
காட்டுளாடும் , பாட்டுளானை
நாட்டுளாரும் , தேட்டுளாரே.
பொழிப்புரை :
சுடுகாட்டில் நடனம் ஆடும் இறைவன் அடியாரேத்தும் பாமாலையை உடையவன் . சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று தம் உள்ளத்தில் நிலைநிறுத்தியவர்களே பேரின்பச் செல்வத்தில் திளைப்பவர்கள் .
குறிப்புரை :
பாட்டு உள்ளானை - அடியாரேத்தும் பாமாலையை உடையவன் . நாட்டு - அவனே முதற்பொருளென்று நாட்டிய . உள் - ( தம் ) உள்ளத்தில் . ஆரும் - திளைக்கின்ற . தேட்டு - செல்வம் . உளாரே - உள்ளவர்களே ; செல்வர் எனத் தக்கவர் என்பது அவாய் நிலையான் வந்தது . ` செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே ` என்ற கருத்து . ஆடும் என்ற பெயரெச்சம் உள்ளான் என்ற பெயர் கொண்டது . ஆர்தல் - திளைத்தல் .
பாடல் எண் : 6
தக்கன்வேள்விப் , பொக்கந்தீர்த்த
மிக்கதேவர் , பக்கத்தோமே.
பொழிப்புரை :
முழுமுதற்பொருளான சிவனை நினையாது தக்கன் செய்த வேள்வியின் குற்றத்தைத் தீர்த்த வல்லமையும் , அருளுமுடைய சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டராய் யாம் உள்ளோம் .
குறிப்புரை :
பொக்கம் - பொய் . வேள்விப் பொக்கம் - போலி வேள்வி , தீர்த்த - பற்றற ஒழித்த . மிக்கதேவர் . பக்கத்தோம் - அணுக்கத் தொண்டராயுள்ளோம் . தீர்த்த - இப்பொருட்டாதலைப் பின்வரும் 8 ஆம் பாசுரத்தினும் காண்க .
பாடல் எண் : 7
பெண்ணாணாய , விண்ணோர்கோவை
நண்ணாதாரை , எண்ணோநாமே.
பொழிப்புரை :
பெண்ணாகவும் , ஆணாகவும் ஆகி தேவர்கள் போற்றும் தலைவரான சிவபெருமானை மனம் , வாக்கு , காயம் ஆகிய திரிகரணங்களாலும் வழிபடாதவர்களை நாம் நெஞ்சாலும் நினைப்பதில்லை .
பாடல் எண் : 8
தூர்த்தன்வீரம் , தீர்த்தகோவை
ஆத்தமாக , ஏத்தினோமே.
பொழிப்புரை :
துன்மதியால் கயிலையைப் பெயர்த்த இராவணனது வலிமையை அழித்து , பின் அவன் தன் தவறுணர்ந்து சாமகானம்பாடி இறைஞ்ச அவனுக்கு ஒளி பொருந்திய வாளும் , நீண்ட வாழ்நாளும் அருளிய இறைவனை நாம் விரும்பிப் போற்றி வணங்கினோம் .
குறிப்புரை :
தூர்த்தன் - இராவணன் . ஆத்தம் - நண்பன் . பண்பாகு பெயர் . ` ஆத்தமென்றெனை ஆளவல்லானை ` - ஆளுடைய நம்பிகள் வாக்கு .
பாடல் எண் : 9
பூவினானும் , தாவினானும்
நாவினாலும் , நோவினாரே.
பொழிப்புரை :
தாமரைப்பூவின்மேல் வீற்றிருந்தருளும் பிரமனும் உலகத்தைத் தாவிஅளந்த திருமாலும் , இறைவனின் திருமுடியையும் , திருவடியையும் உடல்வருந்தித் தேடியும் காணாதவர்களாய்ப் பின்னர் நாவால் அவனைப் போற்றி உருகிநின்றனர் .
குறிப்புரை :
பாடல் எண் : 10
மொட்டமணர் , கட்டர்தேரர்
பிட்டர்சொல்லை , விட்டுளோமே.
பொழிப்புரை :
தலைமயிரைப் பறித்து மொட்டைத் தலையுடன் விளங்கும் சமணர்களும் , கட்டான உடலமைப்புடைய புத்தர்களும் , சைவசமய நெறிக்குப் புறம்பாகக் கூறுவனவற்றை நாம் பொருளாகக் கொள்ளாது விட்டோம் .
பாடல் எண் : 11
அந்தண்காழிப் , பந்தன்சொல்லைச்
சிந்தைசெய்வோர் , உய்ந்துளோரே.
பொழிப்புரை :
அழகிய குளிர்ச்சி பொருந்திய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தர் அருளிய இத்திருப்பதிகத்தைச் சிந்தனை செய்து பாடுபவர்கள் உய்தி பெற்றவர்களாவர் .
தொகுப்பு வை.பூமாலை
Aanmigam's photo.
vpoompalani- Posts : 50
Join date : 16/07/2015
Location : Sundarapandiam

» திருப்பதி வெங்கடாஜலபதிக்கு தினமும் 90 நிமிடங்கள் ரெஸ்ட்!
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
» திருப்பதி உண்டியலில் தினமும் 2.5 கிலோ தங்க நகை காணிக்கை!
» சபரிமலை நடை இன்று திறப்பு தினமும் ஓணம் விருந்து!
» பெரியவருக்கு 101 வயசு ஆகுது.பவானி சிவன் கோயிலில் தினமும் 100 ஏழைகளுக்கு ராகி கஞ்சி காய்ச்சி ஊற்றுகிறார்
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
» திருப்பதி உண்டியலில் தினமும் 2.5 கிலோ தங்க நகை காணிக்கை!
» சபரிமலை நடை இன்று திறப்பு தினமும் ஓணம் விருந்து!
» பெரியவருக்கு 101 வயசு ஆகுது.பவானி சிவன் கோயிலில் தினமும் 100 ஏழைகளுக்கு ராகி கஞ்சி காய்ச்சி ஊற்றுகிறார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum