HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



லவகுசா சரித்திரம்

2 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

லவகுசா சரித்திரம் - Page 2 Empty லவகுசா சரித்திரம்

Post by மாலதி February 15th 2014, 13:24

First topic message reminder :

லவகுசா பகுதி-1



மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்திருந்தது அயோத்தி.மக்களெல்லாம் வண்ண வண்ண உடைகளில் தெருக்களில் பவனி வந்து கொண்டிருந்த காட்சி, விண்மீன்கள் கண்சிமிட்டும் வானத்தை ஒத்திருந்தது.எங்கள் ராமபிரான் பதவியேற்று விட்டார். இனி என்றும் எங்களுக்கு இன்பமே, என்று மக்கள் ஆரவாரமாகப் பேசிக்கொண்டிருந்தனர். ராமபிரானை தரிசிக்க காத்திருந்த மக்களை ஒழுங்குபடுத்துவதற்கு காவலர்களுக்கு அவசியமில்லாமல் போயிற்று. ஏனெனில், ராமராஜ்யம் தொடங்கி விட்டதல்லவா! ராமன் என்றாலே ஒழுக்கம் என்பது தானே பொருள். மக்கள் தாங்களே வரிசையை வகுத்துக்கொண்டு ஒழுங்குபட நின்றனர். வெளியே இப்படி என்றால், அரண்மனைக்குள் இன்னும் கோலாகலம். பட்டாபிஷேகம் காண வந்திருந்த பெண்கள் பயமின்றி நடமாடினர். சகோதரி! ராமராஜ்யம் துவங்கி விட்டது. இனி இரவு, பகல் என்ற வித்தியாசம் இங்கில்லை. நாம் எப்போது வேண்டுமானாலும், சிங்கங்கள் நிறைந்த காட்டிற்குள் கூட போகலாம். நம்மை ஏறிட்டு பார்க்கக்கூட ஆண்கள் தயங்குவார்கள். ஏனெனில், ராமராஜ்யத்தில் பண்பாடு என்பது ஊறிப்போனதாக ஆகிவிடும், என மகிழ்ச்சி பொங்க, ஒரு பெண், இன்னொருத்தியிடம் சொன்னாள். ஆம்...இயற்கை தானே! ராமபிரானின் தம்பி லட்சுமணன், தன் அண்ணனுக்கு திருமணமாகி இந்த நிமிடம் வரை, அண்ணியாரின் முகத்தை ஏறிட்டு பார்த்ததில்லை. இப்போதும், அவன் பட்டாபிராமன் முன்னால், கைகட்டி பவ்வியமாகத் தான் நின்று கொண்டிருந்தான். கோபக்காரன் தான்...மற்றவர்கள் முன்பு. அண்ணனையோ, அண்ணியாரின் திருப்பாதத்தையோ பார்த்துவிட்டால் பசுவைப் போல் ஒடுங்கி விடுவான். கோபமுள்ள இடத்தில் தானே குணம் இருக்கும்! அப்படிப்பட்ட தம்பியைப் போலவே தான் அயோத்தி வாழ் மக்களும், பெண்கள் விஷயத்தில் மிகுந்த அடக்கத்துடன் நடந்து கொண்டார்கள். மாமுனிவர், தமிழ்க்கடல் அகத்தியர் அங்கே வந்தார். ஸ்ரீராமனின் வெற்றிக்கு போர்க்களத்துக்கே வந்து அருளாசி செய்த மகான் அவர். ராமா! ராவணனை வெல்வோமா மாட்டோமா என சந்தேகம் கொள்ளாதே. இந்த உலகில் வெற்றி தரும் சூரிய மந்திரம் ஒன்று உள்ளது. அதை நான் உனக்குச் சொல்லித் தருகிறேன். அதைச் சொல், வெற்றி உன்பக்கம் தான், என்றவர் ஆதித்ய ஹ்ருதயம் எனப்படும் அந்த மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார். ராமன் சொன்னார், வென்றார்.

அந்த மரியாதைக்குரியவர் வந்ததும், அவையே அவையடக்கத்துடன் எழுந்து நின்று அவரை தலைபணிந்து தாழ் பணிந்து வரவேற்றது. ராமபிரானும், சீதாதேவியாரும் அந்த மாமுனிக்கு பாதஸ்நானம் செய்து, அந்த தீர்த்தத்தை தங்கள் தலையில் தெளித்து வரவேற்றனர். தங்க சிம்மாசனத்தில் அகத்தியர் அமர்ந்தார். ராமபிரான் அவரிடம், மாமுனியே! நான் பல அரக்கர்களை வனவாசத்தின் போது வென்றேன். அவர்களெல்லாம் யார்? அவர்களின் பிறப்பு என்ன? என்று கேட்டார். அகத்தியர் விலாவாரியாக அவற்றிற்கு விளக்கமளித்தார். ராமன் தன் அருகில் நின்ற அனுமானை அழைத்தார். முனிவரே! என் சீதாவை காட்டில் துறந்த வேளையில், எனக்காக வானரவீரர்கள் நாற்திசைகளிலும் சென்று தேடினர். தெற்கே சென்ற இந்த அனுமான் என்னைக் காப்பாற்றும் வகையிலான நற்செய்தி கொண்டு வந்தான். இறந்து போன வீரர்களை எழுப்ப மருந்துமாமலையைக் கொண்டு வா என்றால், வடக்கேயிருந்து அதை எடுத்து வர இவன் எடுத்துக்கொண்ட நேரம் ஒரு நாழிகை (24 நிமிடம்) தான். இது இவனால் எப்படி சாத்தியமாயிற்று? என்று கேட்டார். ராமா! மிகச்சரியானதொரு கேள்வி கேட்டாய். இந்த அனுமனின் சரித்திரம் அற்புதமானது. இவனது வரலாறு கேட்டாலே பாவங்கள் நசிந்து போகும். தன் சக்தியின் பெருமை இன்னதென அறியாதவன் இந்த ஆஞ்சநேயன். செருக்கற்றவன்; பிறர் நலம் விரும்புபவன்; கருணையும், சாந்தமும் இவனிடம் ஊறிப்போனவை. கருணை எங்கிருக்கிறதோ, அங்கே தான் வீரலட்சுமி குடியிருப்பாள். இவனது வீரம் அளவிட முடியாதது. சொல்கிறேன் கேள், என்றவர் அனுமானின் கதையை ஆரம்பித்தார். ராமா! காற்றுக்கு அதிபதியான வருணபகவான், அஞ்சனை என்ற இவனது அன்னை மீது ஆசை கொண்டான். அந்த அஞ்சனையின் வயிற்றில் இந்த அனுமன் பிறந்தான். இவன் பிறந்ததுமே, இவனுக்குரிய ஆற்றல் அதீதமாக இருந்தது கண்டு பெற்றவர்கள் ஆச்சரியமடைந்தனர், இந்த வீரனால் அரக்கர் குலம் அழியும் என தேவர்கள் ஆனந்தம் கொண்டனர்.

அவன் தன் இளம்பிராயத்தில், தன் தாயிடம், அம்மா! எனக்குரிய இனிய உணவு எது? என்று கேட்டான். மகனே! இந்த குளிர்ந்த சோலையில் எந்தக் கனியெல்லாம் சிவந்து போயிருக்கிறதோ, அதுவெல்லாம் உனக்குரியது தான் என்று சொல்லிவிட்டு இவனுக்காக பழம் பறிக்க வெளியே சென்று விட்டாள். அப்போது, வான்வெளியில் சூரியன் உதயமாக, அதை பழமெனக் கருதி இவன் மேலே பாய்ந்தான். வாயுவின் மகன் என்பதால், இவனுக்கு காற்றில் பறக்கும் சக்தி இயற்கையிலேயே வாய்த்தது. இப்படி சூரியனையே பழமாக நினைத்தவனுக்கு, இலங்கை ஒன்றும் பெரியகாரியமாக படவில்லை, என்றார் அகத்தியர். பின்னர் விபீஷணன், சுக்ரீவன், அனுமான், அங்கதன், சேது அணை கட்டிய நளன் உள்ளிட்ட பலருக்கும் பரிசுகளை வழங்கினார் ராமன். அனைவரும் ராமனைப் பிரிய மனமின்றி கண்ணீருடன் அவரவர் ஊர் திரும்பினர். அனுமான் ரொம்பவே கண்ணீர் வடித்து விட்டான். சுக்ரீவனின் நிலைமை கருதி, அவனுடேயே தங்கியிருக்க வேண்டும் என உத்தரவிட்ட ராமன், அனுமானை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். பின்னர் சீதாதேவியுடன் அந்தப்புரத்துக்குள் நுழைந்தார். அவருக்கு திருமணம் நடந்த போது வயது 12. சீதாவுக்கு 6 வயது. 18 வயதில், 12 வயது சீதாவுடன் காட்டுக்குப் போய் விட்டார். 32 வயதில் திரும்பியிருக்கிறார். சீதாவுக்கு இப்போது 26 வயது. இவர்கள் தங்கள் இளமையை காட்டில் கழித்து விட்டனர். அரண்மனை சுகத்தை அனுபவிக்க இப்போது தான் நேரம் வாய்த்திருக்கிறது. இன்ப வானில் அந்த தம்பதிகள் சிறகடித்துப் பறந்தனர். ஆனால், விதி என்னும் விரோதி அந்த இன்பத்தை நீண்டநாள் நீடிக்க விடவில்லை.

மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down


லவகுசா சரித்திரம் - Page 2 Empty Re: லவகுசா சரித்திரம்

Post by மாலதி February 15th 2014, 13:40

லவகுசா பகுதி-20




ராமபிரானோ தன் முடிவில் உறுதியாக இருந்து விட்டார். அப்போது சீதாதேவி, என் கணவர் என்னை தீயில் இறங்கு என சொல்வது மட்டுமல்ல, இதுவரை அவர் எனக்குச் செய்த எல்லாமே எனக்கு செய்யப்பட்ட நன்மை என்றே கருதுகிறேன். ஆனாலும், அவர் என் கற்பின் மீது ஊரார் சொல்லுக்காக நிரூபிக்கத் துடிப்பதை என்னால் பொறுக்க முடியவில்லை. இனியும், நான் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை. எனவே, எங்கிருந்து பிறந்தேனோ, எந்தத்தாய் என்னைப் பெற்றாளோ, எல்லோருக்கும் பெற்ற தாய் யாராக இருந்தாலும், முடிவில் எந்தத்தாயிடம் அடைக்கலமாவார்களோ அந்தத்தாயிடமே செல்கிறேன், என்றவள், அம்மா! பூமி மாதா! நல்வினை தீவினை ஆகியவற்றை அறுத்தெறிந்தவரும், தவங்கள் பல இயற்றியவருமான விஸ்வாமித்திர முனிவர், இதோ இங்கே வீற்றிருக்கிறாரே தசரத புத்திரர் ஸ்ரீராமர்...இவரை எங்கள் இல்லத்துக்கு அழைத்து வந்தார். அந்த முனிவர் செய்த யாகத்திற்கு இடையூறு செய்த அரக்கர்களை ஒழித்து விட்டு வந்த மாவீரனான இவர், என் தந்தை கொடுத்த சிவதனுசு என்னும் வில்லை ஒடித்தார். யாராலும் தூக்கக்கூட முடியாத அந்த வில்லை ஒடித்ததால், பலசாலியான இவருக்கு என்னை என் தந்தை ஜனகர் மணம் செய்து வைத்தார். இந்த கரிய நிறத்தானை, கார்மேக வண்ணனைத் தவிர வேறு எந்த மன்னனையும் என் திருமணத்துக்கு முன்போ, பின்போ நான் மனத்தாலும் வாக்காலும் நினைக்கவில்லை என்பதும், அவர்களைப் பற்றி பேசியது கூட இல்லை என்பதும் உண்மையானால், நிலமகளே! என் தாயே! நீ வருக! என்னை உன்னிடமே மீண்டும் எடுத்துச் செல், என்றாள் ஆவேசத்துடன்.

கற்பு நிறைந்த மங்கை, பழி போடப்பட்ட மங்கை, உலகிலேயே துன்பங்களை அதிகம் அனுபவித்த மங்கை...கட்டளை இட்டிருக்கிறாள். எந்த ஒரு தேசத்தில் பெண்கள் துன்பப்படுத்தப்படுகிறார்களோ, அந்த நாட்டின் நிம்மதி முற்றிலும் குலைந்து போய் விடும் என்பதே சரித்திரம் கூறும் உண்மை. சீதாதேவி தொடர்ந்தாள். அம்மா! என்னைப் பெற்ற பூமாதேவியே! உலகிலுள்ளோரின் வணக்கத்துக்கு உரியவளே! என்னை வருந்திப் பெற்றவளே! என்னுடைய கற்பின் மீது என் கணவர் ஊராருக்காக சந்தேகப்படுகிறார். ஆனால், என் கற்பும், கற்புக்கரசியான அருந்ததியின் கற்பும் ஒரே தன்மையுடையது என்பது உண்மையானால், நிலத்தை பிளந்து கொண்டு எழுந்து வா, என்று ஆணை பிறப்பிக்கும் குரலில், அயோத்தியே அதிரும் வகையில் அரற்றினாள். பூமியிலுள்ள மற்ற தாய்மார் பெற்ற பிள்ளைகளுக்கு துன்பம் ஏற்பட்டாலே, பூகம்பத்தை உண்டாக்கி அநியாயக்காரர்களையும், அக்கிரமக்காரர்களையும், முன்ஜென்மத்தில் பாவங்கள் பல புரிந்து, தனக்கு பாரமாக இருப்பவர்களையும் அழித்து விடும் பூமிமாதா, தான் பெற்ற பிள்ளைக்காக இத்தனை நாளும் பொறுமை காத்தாள். ஆனால், தன் மகளின் பெண்மைக்கே களங்கம் வந்தால் விட்டு வைப்பாளா என்ன! ஆதிசேஷனின் ஆயிரம் தலைகளால் தாங்கப்படுபவளும், நிலை பெற்ற கற்பினையுடையவளும், உலகத்து செல்வத்தையெல்லாம் தன் மேனியில் கொண்டவளும், மலைகள் எனப்படும் மார்புகளைத் தாங்கியவளும், மேகம் என்ற கூந்தலை உடையவளும், அலைகடல்களை ஆடையாக உடுத்தியவளுமான பூமாதேவி அதிர்ந்தாள். உலகமே நடுங்கியது.

பூமி விரிந்தது. அம்மா! சீதா! அழாதே மகளே! உன் கற்பே உலகில் சிறந்தது. அருந்ததியின் கற்பை விட உன் கற்பே உயர்ந்தது. உலகம் உள்ளவரை சீதையின் கற்புத்திறன் பேசப்படும். ஒருத்தி மகனாய் பிறந்து, ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தானே அந்த நாராயணன்...அவனே ராமனாய் இங்கே அமர்ந்திருக்கிறான். அவனுக்கு மட்டுமே நீ சொந்தமாக இருந்தாய் மகளே! இனியும் நீ இந்த பூமியின் மேல் வாழத் தேவையில்லை. நீ நாராயணனின் துணைவி என்பதை நினைவுபடுத்துகிறேன். பூமியின் உன் காலம் முடிந்து விட்டது. நீ என்னோடு வா மகளே! என கை நீட்டி அழைத்தாள். பெற்றவளின் மார்பில் முகம் புதைத்து அழுதாள் சீதா. அவளை அள்ளி அணைத்தபடியே, மீண்டும் நிலம் பிளக்க, ராமனிடம் உத்தரவு கூட பெறாமல், தன் மகளை உள்ளே அழைத்துச் சென்று விட்டாள் அந்தத்தாய். நல்லவர்கள் பூமியில் நீண்ட காலம் வாழ்வதில்லை என அரற்றுகிறோம். நல்லவனுக்கு பூமியில் என்ன வேலை? அவன் வைகுண்டத்திலோ, பாதாள லோகத்திலோ வாழ வேண்டியவன் அல்லவா! பூமாதேவி என்ற தாயின் அரவணைப்பில் இருக்க வேண்டியவன் இங்கேயிருந்து ஏன் அவஸ்தைப்பட வேண்டும் என்று தான் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது போலும்! ராமபிரான் ஆத்திரமடைந்தார். இந்தச் சபையில் கூடியிருக்கும் அயோத்தி மாநகர மக்களே! சீதையின் கற்புத்திறனை புரிந்து கொண்டீர்களா? அவள் களங்கமற்றவள் என்பதை நான் அறிவேன். நான் இதுவரை யாருக்கும் எந்தத்தீமையும் செய்தது இல்லை. பிறருக்கு நன்மை செய்வதே என் வாழ்வின் குறிக்கோளாக இருந்திருக்கிறது. ஆனால், நான் அனுபவித்ததோ கடும் சோதனைகளைத் தான். இப்போது என்ன நடந்து விட்டது? ஊரார் சொல்லை மறுக்க, அவளைத் தீக்குளிக்கச் சொன்னேன், அவளோ, தன் தாயை அழைத்தாள். அந்தத்தாயும் வந்தாள், மகளை அழைத்துக் கொண்டு போய் விட்டாள். இது என்ன நீதி? இந்த பூமாதேவி எப்படிப்பட்டவள் என்பது எனக்குத் தெரியாதா? என்றவர் பூமாதேவியை சிறுமைப்படுத்தும் வார்த்தைகளை பேசினார். அகத்திய முனிவரால் ஒரு உள்ளங்கையால் அள்ளிக் குடிக்கப்பெற்ற மிகச் சாதாரணமான கடல் அலைகளை சுமப்பவள், குளிர்ந்த பிறைச்சந்திரனை அணிந்த சிவபெருமான் பிரம்மாவின் தலையைக் கிள்ளியதால் ஏற்பட்ட பாவத்திற்கு விமோசனம் தந்த திருமால், வாமன அவதாரமெடுத்து வந்த போது, அவனது இரண்டே அடிகளுக்குள் அடைக்கலமானது, பொன்னாலும், மணியாலும் தன் முடிகளை அலங்கரித்துக் கொண்ட ஆதிசேஷன் என்ற பாம்பால் தாங்கப்படுவது, ஒரு காலத்தில் ஏற்பட்ட பிரளய வெள்ளத்தில் இந்த பூமாதேவி மூழ்கிக் கிடந்த போது, திருமால் வராக அவதாரமெடுத்து தன் கொம்பின் மீது தாங்கி வந்தது...இப்படிப்பட்ட பூமாதேவிக்கு என் மனைவியை, என் கண் முன்னாலேயே தூக்கிச் செல்லும் தைரியம் எங்கிருந்து வந்தது? ராமபிரான் தன் ஆசனத்தில் இருந்து கொதித்தெழுந்தார்.

மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

லவகுசா சரித்திரம் - Page 2 Empty Re: லவகுசா சரித்திரம்

Post by மாலதி February 15th 2014, 13:41

லவகுசா பகுதி-21




ஏ பூமாதேவியே! உன் மேலுள்ள கடல் எனது ஒரு அதட்டலுக்கு கட்டுப்படும் தன்மையுடையது. சீதையை மீட்க நான் இலங்கை சென்ற போது, அந்தக் கடல் வழிமறித்தது. நான் வில்லையும், அம்பையும் எடுத்தவுடனேயே பணிந்து வழிவிட்டது. அந்தச் சிறுமைக்குரிய கடலுக்குள் என் மனைவியை ஒளித்து வைத்திருக்கிறாயா? உன்னை ஒரே மிதியில், பாதாள லோகத்துக்குள் அழுத்தி விடுவேன், என்று காலை தூக்கினார். ஏதோ நினைவு வந்தவராக, ஏ பூமாதேவி, தப்பி விட்டாய். உன்னுள்ளே என் சீதாவை ஒளித்து வைத்திருக்கிறாய். நான் உன்னை அழுத்தினால், அந்த அழுத்தலில் அவளுக்கும் வலியெடுக்கும். அதனால், உன்னை மிதிக்க முடியாதவனாக இருக்கிறேன், எனச் சொல்லி காலை கீழிறக்கி, ஏ பூமாதேவியே! உன்னை நூறு துண்டுகளாகப் பிளக்கப் போகிறேன். என் மனைவியை மீட்கப் போகிறேன், என்று வில்லை எடுத்த வேளையில், நான்முகக் கடவுளான பிரம்மா, தன் தாமரை மலர் இருக்கையில் அங்கே எழுந்தருளினார். ஸ்ரீராமபிரானை வணங்கினார். ஐயனே! வணக்கம். ஆகாயம், நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய பஞ்சபூதங்களாலான இந்த உலகம் என்கிற பானகத்தை விரும்பி அருந்திவிட்டு, ஆலிலைத் தளிரில் துயில் கொண்டவனே! மூவுலகையும் உன் திருவடியில் இருந்து படைத்தவனே! உயர்ந்தவனே! ஒப்பற்றவனே! ஐயனே! சாந்தம் கொள். உன்னிடம் சில விபரங்களைச் சொல்லவே நான் இங்கு வந்தேன். மானிடப்பிறவிகளில் நீ உயர்ந்தவன். உன் உருவம் இங்கு மட்டுமல்ல, வானத்தைப் பிளந்து கொண்டு அவ்வுலகத்திலும் ஆக்கிரமித்துள்ளது. (வானவரும் வணங்கும் மனிதன் ராமன் என குறிப்பிடுகிறார்).

இந்த உலகமே உன்னுடையது. இந்த உலகம் உன் வயிற்றுக்குள் அடங்கியுள்ளது. நீ ஸ்ரீமன் நாராயணனின் அவதாரம் என்பதை மறந்து விட்டாயா? நிலையில்லாத உடலுடன் கூடிய பல உயிர்கள் உன் வயிற்றில் பிறந்து அங்கேயே இறக்கின்றன. உயிர்களைப் படைப்பது உன் வயிற்றிலுள்ள தாமரையில் அமர்ந்திருக்கும் என் பணி என்பதை நான் ஏற்க மாட்டேன். அது உன் சக்தியைக் கொண்டு என்னால் நிகழ்த்தப்படுகிறது. எனவே படைப்பின் காரணகர்த்தா நீ தானே ஒழிய நானில்லை, என்றவர் மேலும் தொடர்ந்தார். ஸ்ரீராமா! நினைவுக்கு வருகிறதா! புலத்தியன் என்ற முனிவனின் மகனான விச்சிரவசு என்பவன் பத்து தலைகளையுடைய ராவணன் என்ற அரக்க பிள்ளையைப் பெற்றான். அவன் தேவர்களை துன்புறுத்தினான். தேவர்கள் நாராயணனாகிய உன்னை வேண்ட, அவனை அழிப்பதற்காக நீ பூலோகத்தில் மானிடனாய் பிறந்தாய். அவனை அழித்தும் விட்டாய். பூலோகத்திற்கு நீ வந்த பணி முடிந்து விட்டது. நாராயணா! நீ காலை உயர்த்தி மிதிக்க முயன்றாயே பூமி மாதா. இவள் யாரென்பது உனக்கு நினைவில்லையா? இவளும் உன்னால் படைக்கப்பட்டவள் தான். உன்னால், உருவாக்கப்பட்டவளை நீயே அழிக்க முயல்கிறாயே! நீ காக்கும் கடவுள் என்பதை நினைவில் கொள். உன்னால், உருவாக்கப்பட்ட இந்த பூமிக்குள், உனக்கு கட்டுப்பட்ட இந்த பூமிக்குள் தான் உன் காதலி சீதா தோன்றினாள். வந்த இடத்திற்கே சென்று விட்டாள். மானிடராக பூமியில் பிறப்பவர்கள் மண்ணிற்குள் செல்ல வேண்டும் என்பதும் நீ வகுத்த நியதி தானே! அதுவே அவளுக்கும் நிகழ்ந்தது. மண்ணில் ஒருமுறை மறைந்தவர்களை மீண்டும் மீட்க முடியாது என்பது உன்னால் இடப்பட்ட சட்டம். இனி அவளை நீ வைகுண்டத்தில் மட்டுமே பார்க்க முடியும்.

வில்லேந்திய ராமா! பூமியில் மானிடராய் பிறந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் பாசமும் பற்றும் வைப்பது இயற்கையே. தாய் மகன் மீதும், கணவன் மனைவி மீதும் வைக்கும் பற்றே இவ்வாறு கோபத்தை உண்டாக்குகிறது. பூமியில் பிறப்பவர்களை யார் மீதும் பற்று வைக்காதே, பாசம் வைக்காதே என்று தானே அறநூல்களும், மகான்களும் சொல்கிறார்கள். பற்றும் பாசமுமே கோபத்தை உண்டாக்குகின்றன. தன்னோடு நெருங்கி இருந்தவன் மறைந்து போனால், கடவுளே! இது உனக்கு அடுக்குமா என கேட்பது, உலக வாழ்க்கை நிலையானது என்று நினைக்கும் அஞ்ஞானவாதிகளுக்கு சரியானதாகத் தோன்றலாம். ஆனால், நீயே இறைவன், நீ மானிடனாய் பிறப்பெடுத்திருக்கிறாய். அவ்வளவே. உனக்கேது பற்றும், பாசமும். லட்சுமிபிராட்டியே சீதையாக இவ்வுலகில் பிறந்தாள். உனக்கு முன்னதாக வைகுண்டத்தை அடைந்து விட்டாள். அங்கு போய் அவளைச் சேர்ந்து கொள், என நினைவூட்டினார். ஐயனே! பூலோக வாழ்வு நிலையற்றது. வைகுண்டமே நிலையானது. அங்கு நன்மை மட்டுமே நிகழும். பூமியில் உன் பணி முடிந்தது. நீயும், மீண்டும் அங்கே எழுந்தருள வேண்டும், என்றார். பிரம்மனின் இந்த வார்த்தைகள் ராமனுக்கு முந்தைய நிலையை உணர்த்தின. அவர் கோபம் தணிந்தார். இந்நேரத்தில் லவகுசர் அங்கே வந்தனர். அவர்களுக்கு எல்லா உண்மையையும் வால்மீகி முனிவர் உணர்த்தியிருந்தார். தாங்கள் ஸ்ரீமன் ராமனின் பிள்ளைகள் என்பதை அறிந்த அவர்கள் பெருமை கொண்டனர். அதே நேரம், தாயின் இழப்பை அவர்களால் தாங்க முடியவில்லை. அழுதபடியே, தந்தையின் மார்பில் அடைக்கலமாயினர். ராமபிரான் அவர்களுக்கு புத்திமதி சொன்னார். என் அன்புச் செல்வங்களே! நாம் இந்த பூமியில் பிறந்தது ஏன் என்பதைச் சொல்கிறேன், கேளுங்கள். நான் தசரத சக்கரவர்த்தியின் மகனாகப் பிறந்தேன். சக்கரவர்த்தி திருமகன் என்ற பணக்கார அந்தஸ்து எனக்கு திருமணம் வரையே நிலைத்தது. திருமணத்திற்கு பிறகு, நான் காட்டிற்குச் சென்று விட்டேன். ஆடம்பர உடைகளும், அறுசுவை உணவும் உண்ட எனக்கு அங்கே கிடைத்தது மரப்பட்டைகளால் ஆன உடையும், கனி கிழங்கு வகைகளுமே! செலவம் மிக்க குடும்பத்தில் பிறந்தாலும், மனிதனுக்கு அனுபவிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். அது முன்வினைப்பயனால் மட்டுமே நிகழும். ஒரு காலத்தில், என் தந்தை வேட்டைக்குச் சென்றார். அப்போது...


மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

லவகுசா சரித்திரம் - Page 2 Empty Re: லவகுசா சரித்திரம்

Post by மாலதி February 15th 2014, 13:41

லவகுசா பகுதி-22




தன்னிலும் வேட்டையில் உயர்ந்தவர் யாருமில்லை என்ற கர்வம் என் தந்தையின் கண்ணை மறைத்தது. ஏனெனில், அவர் சப்தவேதனம் எனப்படும் வித்தையில் திறமை பெற்றிருந்தார். சப்தவேதனம் என்றால் மிருகங்கள் எழுப்பும் ஒலியைக் கொண்டு, அவை எங்கிருக்கின்றன என்பதை அறிந்து, அதைப் பார்க்காமலேயே பாணம் எய்து கொல்லும் வித்தையாகும். இந்த வித்தையைப் பயன்படுத்தி பல மிருகங்களை என் தந்தை ஒரே இடத்தில் நின்றபடி கொன்றார். இதை அவருடன் சென்ற வீரர்கள் போற்றினார்கள், புகழ்ந்தார்கள். புகழ்ச்சி மனிதனை அடிமைப்படுத்தும் கொடிய ஆயுதம். எவன் ஒருவன் புகழின் உச்சிக்கு செல்கிறானோ, அவனைத் தேடி அழிவு வந்து கொண்டிருக்கிறது எனப்பொருள். என் தந்தைக்கும் அந்தச் சூழ்நிலையே ஏற்பட்டது.சரயு நதிக்கரையிலுள்ள அடர்ந்த காட்டில் அவர் வேட்டையாடிக் கொண்டிருந்த அந்த சமயத்தில், ஓரிடத்தில் யானை தண்ணீர் குடிப்பது போன்ற சப்தம் கேட்டது. அப்போது இரவு நேரம். உங்கள் பாட்டனார், அந்த இடத்தை நோக்கி அம்பு வீசினார். ஐயோ செத்தேன் என்ற குரல், அம்பு பாய்ந்த இடத்தில் இருந்து கூக்குரலாக வெளிப்பட்டது. அவர் பதறிப்போனார். யாரோ ஒரு மானிடனை மிருகமென நினைத்து அம்பெய்தி விட்டோமோ என அலறியடித்து ஓடினார். நதிக்கரையில், தவக்கோலத்தில் ஒரு இளைஞன் அடிபட்டு கிடந்தான். அவன் புலம்பிக் கொண்டிருந்தான்.

ஐயோ! இந்த இரவு நேரத்தில் ஜனசஞ்சாரமே இருக்காது என எண்ணித்தானே இங்கு வந்தேன். எனக்கு இவ்வுலகத்தில் எதிரியே கிடையாதே. அப்படியிருந்தும், என் மீது அம்பு வீசியவன் யார்? அவனுக்கு நான் எந்த கேடும் விளைவித்தில்லையே! பழங்களையும், கிழங்குகளையும் மட்டுமே தின்று தவம் செய்யும் ரிஷியான எனக்கு இக்கதியா? என்னைக் கொல்வதால் அவனுக்கு ஏதும் பயன் ஏதும் உண்டா? இப்படிப்பட்ட செயலைச் செய்தவன் குரு பத்தினியை கெடுத்ததற்கு ஒப்பான பாவத்தையல்லவா அடைவான்? நான் இறப்பது பற்றி கவலைப்படவில்லை. உயிர்கள் என்றாவது ஒருநாள் இறப்பது உறுதியே. ஆனால், என் தாய் தந்தையர் என்ன செய்வர்? அவர்கள் மிகுந்த வயதானவர்கள் ஆயிற்றே. அவர்களுக்கு நான் ஒரே மகனாயிற்றே. அவர்களும் இனி உயிர் வாழமாட்டார்களே! ஒருவன் சற்றும் சிந்திக்காமல், ஒருவனைக் கொலை செய்தால், அவனது குடும்பமே அழிந்துவிடும் என்பதை சற்றாவது யோசித்தானா? என்னைக் கொன்றதன் மூலம், ஒரே பாணத்தில் எங்கள் மூவரையும் கொன்ற பாவத்தை அவன் பெற்றானே? என்னைக் கொன்றவன் நிச்சயமாக அவசரப்புத்தி படைத்தவனாகவும், மூடனாகவும் தான் இருப்பான் என்று புலம்பினான். இந்த புலம்பலைக் கேட்டு என் தந்தை உள்ளம் நொந்து போனார். தர்மப்பிரபுவான அவருக்கு இத்தகைய சோதனை, ஒரு விநாடி புகழ்ச்சிக்கு அடிமைப்பட்டதற்காக ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சி, அவர் என் தாயைத் திருமணம் செய்வதற்கு முன்பே நிகழ்ந்து விட்டது.

என் தந்தையார் தன்னை யார் என்பதை அவரிடம் அறிமுகப்படுத்தி அந்த தபஸ்வியிடம் மன்னிப்பு கேட்டார். அந்த தபஸ்வியின் மர்ம ஸ்தானத்தில் அம்பு பாய்ந்திருந்தது. இதனால், அவர் பட்ட துன்பத்துக்கு அளவே இல்லை. அந்த இக்கட்டான நிலையிலும், அவர், தசரதா! உடனே என் தாய், தந்தையரிடம் செல். அவர்களிடம் என் மரணத்தகவலைச் சொல். அவர்களின் தாகத்தை தீர்க்க தண்ணீர் முகரவே இங்கு வந்தேன். அவர்கள் தாகம் தாங்காமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். உன் மன்னிப்பை அவர்களிடம் கேள். இந்த ஒற்றையடிப்பாதையின் முடிவில் அவர் தங்கியிருக்கிறார். போகும் முன், நீ எய்த பாணத்தை பிடுங்கி எறிந்து விடு. அது எனக்கு தீராத வலியை தருகிறது என்றார். என் தந்தை அந்த பாணத்தை எடுக்கத் தயங்கினார். பிடுங்கினால் உயிர் போய் விடும் என்ற பயம். உருவாவிட்டாலோ வலி தாங்க முடியாமல் அவஸ்தைப்படுகிறார். ஒருவேளை உயிர் போனால், ஒரு பிராமணனைக் கொன்ற பிரம்மஹத்தி (கொலை பாவம்) ஏற்படுமோ என்ற தயக்கம். அப்போது அந்த தபஸ்வி, தசரதா! கவலைப்படாதே. உனக்கு பிரம்மஹத்தி ஏற்படாது. என் தாய் நான்காம் வர்ணத்தைச் சேர்ந்தவள். தந்தை வைசியர். என்னை பிராமணன் என நினைத்துக் கொள்ளாதே என சாகும் சமயத்திலும் நன்மையான வார்த்தைகளைச் சொன்னார். துன்பம் செய்தும் தனக்கு நன்மையையே நினைத்த அந்த இளைய தபஸ்வியைப் பற்றி அந்த இக்கட்டான நிலையிலும் பெருமைப்பட்ட என் தந்தை, பாணத்தை பிடுங்கினார். அந்த சமயமே அவரது உயிர் பிரிந்தது. பிறகு என் தந்தை, அவனது பெற்றோரை தேடிச்சென்றார். அவர்கள் அருகில் சென்றதும், பார்வையில்லாத அவர்கள், தங்கள் மகன் தான் வந்து விட்டான் என நினைத்து, குழந்தாய்! ஏன் இவ்வளவு நேரம்? நீ இவ்வளவு நேரம் வரவில்லையே என நினைத்து உன் தாய் எவ்வளவு கவலைப்பட்டாள் தெரியுமா? கண்ணில்லாத எங்களுக்கு நீ தானே ஒளியாக இருக்கிறாய்? சீக்கிரம் தண்ணீர் கொடு என்றனர். பயத்தில் இருந்த உங்கள் பாட்டனார் அவர்களின் பாதம் பணிந்து நடந்ததைச் சொன்னார். அறியாமல் செய்த தன் தவறை மன்னித்து கிருபை செய்ய வேண்டினார். அந்த தாயும் தந்தையும் நொறுங்கிப் போனார்கள். அடேய் தசரதா! இப்படி ஒரு கொடிய பாவத்தைச் செய்து விட்டு எங்களிடம் சொல்லாமல் நீ தப்பிப் போயிருந்தால், உன் தலை பத்தாயிரம் துண்டுகளாக வெடித்து சிதறியிருக்கும். ஆனால், அறியாமல் செய்த தவறு என என்னிடம் ஒப்புக்கொண்டதால் நீ இதுவரை பிழைத்திருக்கிறாய். நாங்கள் அவனது உடலைத் தொட்டுப் பார்க்க வேண்டும். எங்களை அங்கே அழைத்துப்போ என்றார். தசரத சக்கரவர்த்தியும் அவ்வாறே செய்ய அவர் தன் மகனைக் கட்டிக்கொண்டு சொன்ன வார்த்தைகள் இந்த லோகத்திற்கு மிகவும் தேவையானவை. இளைஞர்களான நீங்களும் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும், என்றார். லவகுசர் அதைக் கேட்க ஆர்வமாயினர்.


மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

லவகுசா சரித்திரம் - Page 2 Empty Re: லவகுசா சரித்திரம்

Post by மாலதி February 15th 2014, 13:41

லவகுசா பகுதி-23




மகனே! எங்களுடன் பேசமாட்டாயா? உன் தாய் படும் வேதனை உனக்கு புரியவில்லையா? பின்னிரவு வேளையில் நீ வேதம் ஓதுவது என் காதுகளில் இப்போதும் இனிமையாக ஒலிக்கிறது. மகனே! இனி எங்களை அழைத்துப் போக யார் இருக்கிறார்கள்? உன்னைத் தவிர யாருடைய உதவி எங்களுக்கு கிடைக்கும்? அன்புச்செல்வமே! சற்றே பொறு. எமனுடைய ராஜ்யத்திற்கு உடனே போய் விடாதே. நாங்களும் உன்னோடு வருகிறோம். யமலோகத்தில், தர்மராஜாவைக் கண்டு, ஐயனே! எங்கள் மகனை எங்களுக்கு திருப்பிக்கொடு என கேட்பேன். அவன் தர்மத்தின் வடிவம். அனாதைகளான எங்களுக்கு நிச்சயம் உன்னை மீண்டும் தருவான். இதோ நிற்கும் தசரதனின் கையால் நீ இறந்தது இப்பிறவியிலோ, முற்பிறவியிலோ நீ செய்த பாவத்தால் அல்ல. எந்தப் பாவமும் செய்யாத அப்பாவிகளும், உலகிலுள்ள பாவிகளால் கொல்லப்படத்தான் செய்கிறார்கள். அதில் நீயும் ஒருவன். ஆக, பாவம் என்பது பூண்டோடு வேரறுக்கப்பட வேண்டும். பாவமில்லாத உலகில் தான் நல்லவர்களால் வாழ முடியும். நீ இந்த பாவபூமி பிடிக்காமல் போய் விட்டாயோ? மகனே! உனக்கு வீரர்கள் அடையும் உலகம் கிடைக்கும். இந்த உலகத்தில் மாவீரர்களான ஸகரன், தீலிபன் போன்றோர் வாழ்ந்தனர். அவர்கள் எந்த உத்தம லோகத்தை அடைந்தார்களோ அந்த லோகத்தை நீயும் அடைவாய். இவ்வுலகில் பிறந்து வேதம் படித்து, மந்திரங்களை உச்சரித்து, தெய்வமே துணையென வாழ்பவன் மரணமடைந்ததும் எந்த புண்ணிய லோகத்தை அடைவானோ, அந்த லோகத்திற்கு செல்வாய். தனது மனைவியிடம் மட்டும் அன்பு கொண்டு, ஏக பத்தினி விரதனாக வாழ்ந்து, மரணமடைபவன் எந்த லோகம் செல்வானோ அங்கே நீ செல்வாய்.

பசுக்களை தானம் செய்தவர்கள், யாகம் செய்பவர்கள், பெரியவர்களுக்கு பணிவிடை செய்கிறவர்கள், விரதங்களை சரியாகக் கடைபிடிப்பவர்கள், நல்லதொரு காரணத்துக்காக அக்னியில் விழுந்து உயிர் துறப்பவர்கள்,  கங்கையும், யமுனையும் சேருமிடத்தில் உயிர் விடுகிறவர்கள் ஆகியோர் எந்த லோகத்தை அடைவார்களோ அவ்விடத்தை அடைவாய். அதே நேரம், எங்களை புத்திர சோகத்துக்குள்ளாக்கி உன்னைக் கொன்றவன், வாழும் காலத்திலேயே கோர கதிக்கு ஆளாவான் எனச்சொல்லி புலம்பி, அவனுக்குரிய கிரியைகளைச் செய்தனர். அப்போது அந்த இளைஞன் பிரகாசமான ஒளியுடன் எழுந்தான். இந்திரன் புஷ்பக விமானத்துடன் அங்கு வந்து அவனை ஏற்றிக் கொண்டான். அந்த இளைஞன் தனது பெற்றோரிடம், உங்களுக்கு சேவை செய்ய கிடைத்த பாக்கியத்தால், இந்திரனே நேரில் வந்து என்னை தேவலோகத்துக்கு அழைத்துச் செல்ல வந்துள்ளான். அப்படிப்பட்ட வாய்ப்பைக் கொடுத்த உங்களுக்கு நன்றி எனக்கூறி புறப்பட்டான். பின்னர் அந்த முதியவர் என் தந்தையிடம், அரசனே! புத்திர சோகத்தால் நீ தவித்து மரணத்தை தழுவுவாய். அதேநேரம் நீ அறியாமல் பாவம் செய்தவன் என்பதால், உன்னை கொலைப்பாவம் அணுகாது எனச்சொல்லி, கட்டைகளை அடுக்கி அக்னி மூட்டி தன் மனைவியுடன் இறங்கினார். அவர்கள் சொர்க்கம் சென்றனர். அதன் காரணமாக அவர் என்னைப் பிரிய வேண்டியதாயிற்று. பெற்றவர்கள் செய்த பாவம் பிள்ளைகளையும் தொடரும். நான் காட்டிலே உங்கள் அன்னை சீதையைப் பிரிந்தேன். துயரத்தில் தவித்தேன். ராவணனிடம் இருந்து மீட்டபிறகு, அவள் இலங்கையிலே தீக்குளித்து தன் கற்புத்திறனை நிரூபித்தும் கூட, அயோத்தியில் சிலர் நம்பாததால், மீண்டும் பிரிந்தேன். என்னால் உங்கள் சிறிய தந்தை லட்சுமணனும் இல்லற சுகத்தை இழந்து என்னுடன் காட்டில் திரிந்தான். வாசலில் விடப்படும் பாதுகையை அரியாசனத்தில் ஏற்றினான் பரதன். சத்ருக்கனனும் அவனுக்கு துணையாகவே இருந்தான், என்றார்.

லவகுசர் தங்கள் தந்தைக்கு ஏற்பட்ட கதியைப் புரிந்து கொண்டனர். பின்னர் லவகுசரை அழைத்துக் கொண்டு ராமபிரான் யாகசாலைக்கு சென்றார். யாகம் மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. பின்னர், தன் மகன்களுக்கும், தம்பிமார்களின் குழந்தைகளுக்கும் தனி நாடுகள் அமைத்துக் கொடுப்பது பற்றிய யோசனையில் ராமன் ஆழ்ந்தார். அப்போது, வாயிற்காவலன் வந்து நின்றான். மகாபிரபு! தங்களைக் காண ஒரு முனிவர் வந்திருக்கிறார். தாங்கள் அனுமதி அளித்தால்... என்றதும், அவரை உடனே உள்ளே வரச்சொல், என்றார் ராமன். அந்த முனிவரின் தேஜஸை சொல்லால் விளக்க முடியாது. உதட்டிலே ஏதோ ஒரு விஷமப்புன்னகை. ராமபிரான், அவரை வரவேற்று ஆசனத்தில் அமரச் சொன்னார். ராமா! ஆசனத்தில் அமர்வது இருக்கட்டும். நான் யார் என்பதை முதலில் தெரிந்து கொள், என்றதும், சுவாமி! வீடு தேடி வந்தவர்கள் பகைவரே ஆயினும் அவர்களை உபசரிப்பது தர்மங்களில் ஒன்று. தாங்கள் தர்மமே வடிவான முனிவர், என்று சொல்லும் போது, தர்மமே என்பதை சற்று அழுத்தி உச்சரித்தார். வந்த முனிவருக்கு சந்தேகம். தன்னை யாரென பரம்பொருளின் அவதாரமான ராமன் கண்டுபிடித்து விட்டாரோ என்று. இருப்பினும், அந்த உணர்வை முகத்தில் காட்டாமல், ராமா! நான் பிரம்மனால் உன்னிடம் அனுப்பப்பட்ட தூதன். நீயும் நானும் தனிமையில் பேச வேண்டியுள்ளது. இவ்விடத்தில் நமக்கு பணிசெய்ய ஒரு சேவகன் கூட இருக்கக்கூடாது. அறைக்கதவை மூடி விட வேண்டும். யாரேனும் உள்ளே வராமல் இருக்க வாசலில் தகுந்த காவலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படியானால் தான் நான் வந்த விஷயத்தைச் சொல்ல முடியும், என்றார். ராமபிரான் முனிவரின் கட்டளையை உடனே ஏற்றார். லட்சுமணனை அழைத்தார். லட்சுமணா! இந்த முனிவருடன் நான் முக்கிய ஆலோசனை செய்ய வேண்டியுள்ளது. இந்த அறைக்குள் யாரையும் விடாதே. காவலைப் பலப்படுத்து. நீயே தலைமைக் காவலனாக இருந்து உள்ளே யாரும் வராமல் பார்த்துக் கொள், என்றார். அண்ணன் சொல் தட்டாத அந்த தம்பி என்ன ஏதென்று கேட்காமல், உடனே வாசலில் காவலுக்கு நின்றான். அப்போது அவனைத் தேடி வந்தது தீவினை.

மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

லவகுசா சரித்திரம் - Page 2 Empty Re: லவகுசா சரித்திரம்

Post by மாலதி February 15th 2014, 13:41

லவகுசா பகுதி-24




அத்திரி முனிவர் என்ற புகழ் பெற்ற முனிவர் இருந்தார். இவரது மனைவி அனுசூயா. ரிஷிபத்தினியான இவளது கற்புத்திறனை சொல்லி மாளாது. கணவருக்கு தினமும் பாதபூஜை செய்து, அந்த தீர்த்தத்தை குடித்த பிறகே தன் பணிகளைத் துவக்குபவள். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர், இவளது கற்புக்கு சோதனை வைத்த போது, அவர்களையே குழந்தைகளாக்கி, முப்பெரும் தேவியரையும் தாலிப்பிச்சை கேட்க வைத்த சக்தி வாய்ந்தவள். இத்தனைக்கும் அத்திரியின் திருவடிகளே காரணம். பெரும் தவவலிமை மிக்கவர். இவரது செல்வபுத்திரரே துர்வாசர். ரொம்பவும் கோபக்காரர். அவர் அரண்மனைக்குள் வந்தார். லட்சுமணன் வில்லுடன் வாசலில் காவலுக்கு நிற்பதைப் பார்த்தார். லட்சுமணா! நான் அத்திரி புத்திரன் துர்வாசன். நான் உன் சகோதரனிடம், முக்கியமான ஒரு விஷயம் பற்றி விவாதிக்க வேண்டியுள்ளது. என்னை உள்ளே அனுமதி, என்றார். அண்ணனோ யாரையும் உள்ளே விடக்கூடாது எனச்சொல்லியிருக்கிறார். முனிவரோ கோபக்காரர். சபிக்கக்கூடியவர். என்ன செய்வதென லட்சுமணனுக்குப் புரியவில்லை. இருப்பினும் அவன் மிகுந்த பணிவுடன் அவரை வணங்கி, தவசிரேஷ்டரே! பொறுத்தருள வேண்டும். தாங்கள், என் சகோதரரிடம் சொல்ல வேண்டியதை என்னிடம் சொல்லுக. தாங்கள் சொல்வதை உடனே நிறைவேற்றி வைக்கிறேன். தற்போது அண்ணா, யாரையும் அனுமதிக்க வேண்டாம் என எனக்கு உத்தரவிட்டிருக்கிறார், என்றான்.

துர்வாசரோ ஆவேசப்பட்டார். ஏ லட்சுமணா! ராமனை இங்கே வரச்சொல். அப்படி சொல்ல மறுத்தால், உன் ரகுவம்சமே அழிந்து போகும்படி சாபம் கொடுத்து விடுவேன். இங்கே, ஒருவர் கூட மிஞ்சமாட்டீர்கள், என எச்சரித்தார். லட்சுமணனுக்கு தெரியும். துர்வாசர் சொன்னதைச் செய்பவர் என்று. மேலும், தவசீலர்களைக் காக்க வைப்பது சிரமம் என்பதையும் அவன் அறிவான். இதற்கிடையே உள்ள சென்ற முனிவர் ராமபிரானிடம் பேச ஆரம்பித்தார். ராமா! என்னை யாரென நீ உணர்ந்துவிட்டாய் என்றே நம்புகிறேன், என்றதும், ராமபிரான் ஏதுமறியாதவர் போல், இல்லை சுவாமி! தாங்கள் யார்? சொல்லுங்கள், என்றதும், வந்தவர் தன் நிஜ உருவத்திற்கு மாறினார். கதாயுதம் தாங்கி, பெரிய மீசையுடன், ஆஜானுபாகுவான தோற்றத்தில் திகழ்ந்த அவரை ராமபிரான் வணங்கினார். எமதர்மராஜாவா! தாங்கள் என் இருப்பிடம் தேடி வர நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தாங்களால் தான் உலகில் தர்மம் நிலைத்திருக்கிறது. தாங்கள் ஒருவர் இல்லாவிட்டால், இவ்வுலகில் எல்லாமே நிரந்தரம் என ஜீவன்கள் நினைக்கத் துவங்கி விடும். மனிதன் ஒரே ஒரு விஷயத்திற்கு தான் அஞ்சுகிறான். அது நிச்சயம் என்பதும் அவனுக்கு தெரியும். இருப்பினும், அஞ்ஞானத்தால் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறான். தங்கள் பூமி தர்மபூமி. தர்மத்தின் நாயகரே! என்ன விஷயமாக என்னைத் தேடி வந்தீர்கள்? என்றார். ராமா! பிரம்மன் என்னை அனுப்பி வைத்தார். நீ ஏதுமறியாதவன் போல் என்னிடம் பேசுகிறாய். நாராயணான நீ பாற்கடலில் இருந்து தாயார் லட்சுமியுடனும், ஆதிசேஷனுடனும், சங்கு, சக்கரத்துடனும் பூமிக்கு வந்தாய். அவற்றை உன் உறவுகளாக்கி, லட்சுமண, பரத, சத்ருக்கனர்களை உருவாக்கிக் கொண்டாய்.

தாயார் லட்சுமியே பூமாதேவியின் வயிற்றில் பிறந்து, ஜனக மகாராஜாவின் புத்திரியாக வளர்ந்து உன்னை அடைந்தாள். அநியாயத்தை அழிக்க பிறந்த நீ, ராவணனை வதம் செய்தாய். உன் பிறப்பின் நோக்கம் முடிந்து விட்டது. இந்த அவதாரத்தை முடித்து, வைகுண்டம் எழுந்தருள வேண்டும் என்பதை நினைவூட்டவே இங்கு வந்தேன். பிரம்மனே பூமியில் மானிடராய் பிறப்பவர்களின் தலைவிதியை நிர்ணயிக்கிறார். அவர்களில் சிலர் தெய்வப்பிறவிகளாகிறார்கள். அவர்களுக்கு மட்டுமே, மரணத்தை முன் கூட்டியே அறிவிக்கும் பொறுப்பு எனக்கு தரப்படுகிறது. ஸ்ரீராமசந்திரா! நீ லோகநாயகன். உன் காலம் முடிந்து விட்டதால், உன்னை அழைத்துச் செல்ல வந்துள்ளேன், என்றார் எமதர்மன். அந்நேரத்தில், லட்சுமணன் கதவைத் தட்டினான். இதனால் கோபமடைந்து தன்னை தன் சகோதரனோ, வந்திருக்கும் முனிவரோ அழித்தாலும் பரவாயில்லை என நினைத்துக் கொண்டான். என்றைக்கானாலும், இந்த உடல் அழியப்போவது தானே! நம் குலம் காக்க, இந்த உடல் போனால் போகட்டும் என்று நினைத்தே துணிந்து இதைச் செய்தான். கதவைத்தட்டுவது இன்னாரென புரிந்து விட்டதாலும், எமதர்மராஜனிடம் உரையாடல் நிறைவு பெறும் நிலைக்கு வந்துவிட்டதாலும், ராமபிரான் கதவைத் திறந்தார். அப்போது, எமதர்மன் தன்னை மீண்டும் முனிவர் வடிவத்திற்கு மாற்றிக் கொண்டார். அண்ணா! தங்களைக் காண துர்வாச முனிவர் எழுந்தருளியுள்ளார். தாங்கள் முக்கிய ஆலோசனையில் எடுப்பதை எடுத்துச் சொல்லியும், தங்களைக் காண அனுமதிக்கா விட்டால், நம் குலம் அழியும்படியான சாபத்தைக் கொடுத்து விடுவேன் என்கிறார். இந்நிலையிலேயே தங்களை அழைக்கும்படி ஆயிற்று, என்றான். லட்சுமணா! உள்ளே இருப்பது எமதர்மராஜா. கருமையான கொம்புகளையும், அனல் கக்கும் விழிகளையும் கொண்ட எருமைக்கடா வாகனன். அவரை அனுப்பி விட்டு வருகிறேன், என சொல்லி விட்டு, உள்ளே சென்றார். எமதர்மராஜனே! பிரமன் சொன்னபடியே வருகின்றேன். இப்போது, நீர் செல்லலாம், என்றான். எமதர்மராஜனும் மறைந்து விட்டார். பின்னர் துர்வாசரிடம் வந்த ராமபிரான், அவரை வணங்கி ஆசனத்தில் அமர்த்தி, தவமுனிவரே! தங்களைக் காக்க வைத்ததற்காக என்னை மன்னிக்க வேண்டும். தாங்கள் வந்த காரணத்தை தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன், என்றார்.



மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

லவகுசா சரித்திரம் - Page 2 Empty Re: லவகுசா சரித்திரம்

Post by மாலதி February 15th 2014, 13:42

லவகுசா பகுதி-25




பாதகமில்லை ராமா! நான் லட்சுமணனுடன் சொல்லி அனுப்பியவுடனேயே வந்து விட்டாய். உனக்கு நினைவில்லையா? நீ மூடிசூட்டிய நாளில் இருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு வந்து ஒருநாள் உணவருந்தும் விரதத்தை மேற்கொண்டிருக்கிறேன். அந்தநாள் இந்நாள். அதற்காகவே வந்தேன், என்றதும், ராமன் சமையல்காரர்களை வரவழைத்து சுவையான உணவு சமைக்கச் சொன்னார். அந்தக்கணமே, பத்துலட்சம் தங்கப்பானைகள் அடுப்பில் இருந்தன. சுவையான உணவு சிறிது நேரத்தில் தயாரானது. துர்வாசர், உணவருந்தி, ராமனின் கையில் இருந்த கங்கை நீரை வாங்கி கைகழுவினார். பின்னர் சமையல்காரர்களின் தலைவனை அழைத்துப் பாராட்டினார். பின்னர் விடை பெற்றார். எமதர்மராஜாவுக்கு வாக்களித்து விட்டதால், வைகுண்டம் எழுந்தருள வேண்டிய அவசரத்தில் இருந்தார் ராமபிரான். இந்நிலையில், ராமனின் தாய் கவுசல்யா காலமானாள். ராமபிரான் வருந்தித்துடித்தார். என்னை விட்டுச் சென்றாயே தாயே என அழுதார். இதையடுத்து சுமித்திரையும், கைகேயியும் சில நாட்களில் காலமாயினர். தெய்வப்பிறவிகளைப் பெற்றெடுத்த இந்த தாய்மார்கள் தங்கள் ஆயுளை முடித்த பிறகு, தன்னுடன் வந்த லட்சுமணனை வைகுண்டம் அனுப்ப வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார் ராமன்.

அவன் போய் தானே, அங்கே அவரது படுக்கையாக வேண்டும். எவ்வுலகில் இருந்தாலும், அவரை விட்டு அசையாத கொடுப்பினை உள்ளவன் அல்லவா அவன். இருந்தாலும், பாசம் ராமனின் கண்களைக் குளமாக்கியது. மனிதனாகப் பிறந்து விட்டால், தெய்வம் கூட உணர்வுகளுக்கு ஆளாகி விடுகிறது! ராமபிரானும் இப்போது மனிதர் தானே! தம்பியை வைகுண்டம் அனுப்பப்போவதை எண்ணி அழுதார். அவனை வைகுண்டம் அனுப்பி விட்டு, லவகுசர் உள்ளிட்டோரை ராஜ்ய பரிபாலனத்தில் அமர்த்த ஏற்பாடு செய்தாக வேண்டுமே! லட்சுமணன்- ஊர்மிளா தம்பதிக்கு அங்கதன், சந்திரகேது என்ற மகன்கள் இருந்தனர். இவர்களுக்கு, ராமனின் உத்தரவுப்படி, சந்திரகாந்தம் என்ற நாட்டை உருவாக்கினான் பரதன். அதை இரண்டாகப் பிரித்து, சந்திரகாந்தத்தை சந்திரகேதுவிடமும், காரகாபதி என்னும் நகரை தலைநகராகக் கொண்ட பகுதிக்கு அங்கதனையும் அரசனாக்கினான் லட்சுமணன். பரதன்- ....தம்பதிக்கு புஷ்கரன், தக்கன் என்ற இரு புதல்வர்கள் இருந்தனர். இவர்களுக்கு காந்தாரம் என்ற தேசத்தை பகிர்ந்தளித்து மன்னர்களாக்க ராமன் ஏற்பாடு செய்தார். பரதனிடமே இப்பணி ஒப்படைக்கப்பட்டது. இதை பரதன் செய்து முடித்தான். சத்ருக்கன் ஏற்கனவே, லவணன் என்ற அரக்கனைக் கொன்று அவனது மதுபுரி நாட்டைக் கைப்பற்றி அங்கே ஆட்சியில் இருந்தான்.

இவ்வாறாக சின்னத்தம்பி சத்ருக்கனன், மற்ற தம்பிமார்களின் குழந்தைகளுக்குரிய கடமைகளை முடித்த பிறகு, லவகுசர்களைப் பற்றிச் சிந்தித்தார் ராமபிரான்.குடும்பத்தில் மூத்த சகோதரர்கள் இளைய சகோதரர்களின் உரிமைகளைப் பறிக்காமல், அவர்களுக்குரியதை சரிவர செய்து கொடுத்து விட்டால், அங்கே பிரச்னைகளுக்கே இடமிருக்காது என்பதை அந்த ராம சரிதத்தை வேறு எதனால் இவ்வளவு விளக்கமாக சொல்ல இயலும்! ராமச்சந்திர மூர்த்தியை இந்த நாடு அதனால் தானே அவ்வளவு எளிதில் மறக்க முடியாமல் இருக்கிறது! ஒரு இந்துவானாலும், முஸ்லிமானாலும், பார்சியானாலும் ராமபிரான் எல்லாருக்குமே வழிகாட்டியாகத் திகழ்கிறார், என்று காந்திஜி தெரியாமலா சொன்னார். மரணத்தருவாயில், அவரது வாயில் இருந்து ராம் ராம் என்ற வார்த்தைகள் தானே உதிர்ந்தன! எவ்வளவு உயர்ந்த பண்பு பாருங்கள். இக்காலத்தில், எந்தக் குடும்பத்திலாவது இப்படி ஒரு அனுசரணையான நிலையைப் பார்க்க முடிகிறதா! அரை அங்குல நிலத்திற்காக, நீதிமன்றங்களில் சகோதரரர்கள் கால் கடுக்க நிற்பதும், ராமன் பிறந்த இந்த தேசத்தில் என்று நினைக்கும்போது, தலை குனியத்தானே வேண்டியிருக்கிறது! ராமபிரான், லவகுசர்களை அயோத்தியின் மன்னர்களாக்க ஏற்பாடு செய்தார். முடிசூட்டு விழாவுக்கு முன்னதாக லட்சுமணனை அழைத்தார்.

தம்பி! எனச் சொல்லி அவனை அப்படியே அணைத்துக் கொண்டனர். எப்படி என் வாயாலேயே சொல்வேனடா? என்றதும், லட்சுமணன் கலகலவென சிரித்தான். அண்ணா! என்ன இது புதுப்பேச்சு! தங்களுக்காக நான், எங்களுக்காகவும், இந்த உலகத்திற்காகவும் நீங்கள். நீங்கள் இருந்தால் நாங்கள் உண்டு. நாங்கள் இல்லாமலும், நீங்கள் கணநேரம் கூட உயிர் தரிக்க மாட்டீர்கள். நாம் ஒருவரோடு ஒருவர் இணைந்தவர்களல்லவா! உடல்களைத் தவிர நம்மிடம் பகுத்துப் பார்ப்பதற்கென வேறு ஏதுமில்லையே! ஏதோ சொல்ல வருகிறீர்கள்? ஆனால், தயங்குகிறீர்கள்! மனம் திறந்து சொல்லுங்கள், என்றான். தம்பி! நீ வெளியே காவல் நின்ற போது ஒரு முனிவர் வந்தார். அவருடன் நான் தனிமையில் பேசியது உனக்குத் தெரிந்தது தானே என்றார். அதற்கென்ன அண்ணா? என கேள்விக்குறியுடன் அண்ணனின் முகத்தை ஆவலுடன் ஏறிட்ட தம்பியிடம், லட்சுமணா! என் அன்புச்செல்வமே! அவர் வேறு யாருமல்ல. எமதர்மராஜா. நம் பூலோக வாழ்வை முடித்து மேலுலுகம் வரச்சொன்னான். நம் அவதார காலம் முடிந்து விட்டது. ராவணனை வதைக்கவே இங்கு வந்தோம். வந்த வேலை சீதையால் முடிந்தது. அவள் தன் பணி முடித்து ஏற்கனவே சென்று விட்டாள்.

இந்த காரியத்துக்காகவே நம்மைப் பெற்றவர்களும் வைகுண்டத்தில் நமக்காக காத்திருக்கின்றனர். இப்போது, உன் சமயம் வந்துவிட்டது, என்றதும், லட்சுமணன் மேலும் நகைத்தான். அண்ணா! இதைச்சொல்லவா இவ்வளவு தயக்கம்! மரணத்தில் யார் முந்துகிறோம், யார் பிந்துகிறோம் என்பதெல்லாம் வெறும் மாயத்தோற்றமே! உயிர்கள் பிறக்கின்றன, இறக்கின்றன. இது உறுதியானது. இவ்வுலகில் இதைத்தவிர மற்றவை தான் உறுதியற்ற நிலையில் உள்ளன. செல்வம் வரும் போகும், ஆட்சி உங்களைத் தேடி வந்தது, திடீரென பறிக்கப்பட்டது, மீண்டும் வந்தது. இவையெல்லாம் உறுதியற்றவை. உலகில் பிறந்த எல்லா ஜீவன்களுக்கும் ஒரே உறுதி மரணம் மட்டுமே. அதை எனக்கு தாங்களே முன்வந்து தருவது இன்னும் நான் செய்த பாக்கியம். சத்தியத்திற்காகவே நம் தந்தை உயிர்விட்டார். அதைக்காக்கவே நம் தாய்மாரும் உயிர் விட்டார்கள், என்ற லட்சுமணன், நம் தாய் கைகேயி கூட சத்தியம் காக்கவே இவ்வாறு செய்தாள் தெரியுமா? என்றார். எல்லாம் அறிந்த ராமன், ஏதும் தெரியாதவர் போல், முருகனிடம் பிரணவ மந்திரத்தின் பொருள் அறியாதது போல் நடித்த சிவனைப் போல் நின்றார்.

மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

லவகுசா சரித்திரம் - Page 2 Empty Re: லவகுசா சரித்திரம்

Post by மாலதி February 15th 2014, 13:42

லவகுசா பகுதி-26




அண்ணா! கைகேயி தாயை எல்லோரும் தவறாகப் பேசுகிறார்கள். நம் தந்தையார், அவளது தந்தை கேகயனுக்கு ஒரு சத்தியவாக்கு கொடுத்திருந்தார். கைகேயிக்கும், அவளது குழந்தைகளுக்கும் முக்கியத்துவம தருவதென! ஆனால், தங்களுக்கு முடிசூட்டுவதை அறிந்த அவள், உங்கள் மீது கொண்ட வெறுப்பாலோ, மந்தரையின் தூண்டுதலாலோ தன்னிலையை மாற்றிக் கொள்ளவில்லை. கேகயராஜன், சத்தியவேந்தனான தன் மருமகன் சொன்னது போல் செய்யவில்லையே என நினைத்துக் கொள்வானே என பயந்தே, தன் பர்த்தா சத்தியம் தவறாதவர் என்பதை வெளியுலகுக்கு காட்டவே அப்படி செய்தாள். ஆனால், எதிர்பாராத விதமாக அந்த முயற்சியில் நம் தந்தை மறைந்தார். விதி அங்கே விளையாடி விட்டது. அதுபோல், இப்போது என் விதியும் முடிகிறது. தங்களைக் காண நான் வைகுண்டத்தில் காத்திருப்பேன், என்றான். எனினும், ராமபிரான் மிகவும் துன்பப்பட்டார். இந்நேரத்தில் அவருக்கு வசிஷ்டரின் நினைவு வந்தது. அவரிடம், லட்சுமணனை மரணத்தில் இருந்து தடுக்க முடியாதா? எனக் கேட்டார். வசிஷ்டர் ராமனிடம், ராமா! விதி வலியது. ஒரு யாகம் செய்தால் உனக்கு நான்கு குழந்தைகள் பிறப்பார்கள். அவர்களில் யாராவது ஒருவன் இறக்க நேர்ந்தால், மற்ற மூவரும் அவனோடு சேர்ந்து மடிவார்கள் என நான் உன் தந்தையிடம் முன்பே சொன்னதை உனக்கு நினைவுபடுத்துகிறேன். எனவே, லட்சுமணனுக்கு மட்டுமே மரணம் சம்பவிக்கிறது என நினைக்காதே. ராமா! நீயின்றி அயோத்தி இல்லை. அயோத்தியே இப்போது மரணத்தின் பிடியில் இருக்கிறது, என்றார்.

வசிஷ்டர் கூறியது கேட்ட லட்சுமணன், அண்ணா! நம் குரு வசிஷ்டரே சொன்னபிறகும் என்ன யோசனை? எனக்கு விடை கொடுங்கள், எனக்கூறி சிரித்த முகத்துடன் ராமனை வணங்கினான். அண்ணன் மரணமடையச் சொன்னாலும், அதை இன்முகத்துடன் ஏற்ற தம்பி நம் லட்சுமணன். இவனைப் போன்ற உயர்ந்த மனிதர்களையெல்லாம் இந்த பாரதம் பெற்றிருந்ததால் தான், இந்த கலியுகத்திலும், இந்த தேசத்தில் மட்டும் கலாச்சாரமும், பண்பாடும் இன்றும் நிலைத்து நிற்கிறது. அங்கிருந்து விடைபெற்று அயோத்தியின் எல்லைக்குச் சென்றான். சரயுநதி சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. அண்ணன் தன்னை மரணமடையச் சொல்லி கடைசிவரை உத்தரவிடவில்லை என்பதால், அந்த நதியில் மூழ்கி எழுந்து கரையோரத்தில் யோகத்தில் அமர்ந்தான். அப்போது, இந்திரன் தன் விமானத்தில் வந்தான். லட்சுமணனை ஏற்றிக்கொண்டு வைகுண்டம் ஏற்றிப் பறந்தான். இதையறிந்த ராமபிரான், மனம் கலங்கினார். என்னை விட்டு கணநேரமும் பிரியாதவனே! எப்படி உனக்கு என்னைப்பிரியும் மனம் வந்தது? என சொல்லி கண்ணீர் சிந்தினார். அவன் செய்த செயல்களைப் பற்றி அரற்றினார். அவனது பிரிவைத் தாளாமல் பரதனை அழைத்தார். பரதா! இந்த அரசாங்கம் எனக்கு வேண்டாம். லவகுசரிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைக்கும் மனநிலையில் நான் இல்லை. நம் தந்தையின் விருப்பப்படி நீயே மன்னனாக இரு. லட்சுமணனைப் பிரிந்து என்னால் வாழ முடியாது. அவன் போன இடத்துக்கே நான் போகின்றேன், என்றார்.

அண்ணா! என்ன சொன்னீர்கள்? எனக்கதறிய பரதன், இறந்தவன் கீழே விழுவது போல தடாலென விழுந்தான். அண்ணா! என்ன சொன்னீர்கள். கேவலம் இந்த ஆட்சியையா நான் விரும்பினேன்? தாங்கள் காட்டில் வசித்த காலத்திலேயே தங்கள் பாதுகைகளே இந்நாட்டின் ராஜாவாயின. அப்போதும் நான் பதவியை விரும்பவில்லை. இப்போது நீங்கள் கேட்பது, கைகேயி தங்களை காட்டிற்கு அனுப்பக் கேட்ட வரத்தை விட கொடுமையானது. நான் அம்மிக்கல். நீங்கள் மாமலை. நான் மின்மினிப்பூச்சி, நீங்கள் சூரியன். உங்கள் ஆண்மையும் தயாளமும் லவகுசரைத் தவிர வேறு யாருக்குமில்லை. அவர்களுக்கே தாங்கள் முடிசூட்டுங்கள். நானும் உங்களோடு வைகுண்டம் வருவேன், என்றான் கோவென கதறியபடி.பரதனை அப்படியே வாரியணைத்த ராமபிரான், அவனை உச்சி மோந்தார். தம்பி! நம்மில் ஒருவரை ஒருவர் யாராலும் பிரிக்க முடியாது. இருப்பினும், நம் சின்னத்தம்பி சத்ருக்கனன் இங்கே வாழட்டும். அவன் சிறுவன். என்ன பாவம் செய்தான்? வாழ வேண்டிய பருவம் அவனுக்கு, என்ற ராமன், சத்ருக்கனனுக்கு தானும், பரதனும் வைகுண்டம் செல்லப்போகும் செய்தியை ஒரு தூதனிடம் சொல்லியனுப்பினார். லவகுசர்களை வரவழைத்தார். அவர்களுக்கு காப்புநாண் அணிவித்தார். குசாபதி என்னும் நகரைத் தலைமையாகக் கொண்ட பகுதிக்கு குசனையும், சிராபதி என்ற நகரைத் தலைமையாகக் கொண்ட உத்தரகோசல நாட்டிற்கு லவனையும் அரசனாக்குவதாக அறிவித்தார். இருவருக்கும் பட்டம் சூட்டப்பட்டது. இதற்குள் சத்ருக்கனனினஜ் மதுகை நகருக்குச் சென்ற தூதுவன், ராமபிரானின் அறிவிப்பைச் சொல்லவே, அந்தக்கணமே தன் தேரில் ஏறி அயோத்தி வந்து சேர்ந்தான் சத்ருக்கனன்.

அண்ணா! நானின்றி தாங்கள் மட்டும் வைகுண்டம் செல்வதா? அண்ணா லட்சுமணர் ஏற்கனவே வைகுண்ட பிராப்தி அடைந்து விட்டாரா? நானின்றி நீங்கள் நிச்சயமாக வைகுண்டம் அடைய முடியாது, என கதறினான். தம்பி! நீ வந்துவிட்டால் மதுகை மக்கள் என்னாவார்கள்? நாடாளும் நீ யோசிக்க வேண்டாமா? என்றதும், அண்ணா! நான் என் மனைவி சுருதகீர்த்தியின் பொறுப்பில் என் மக்களான சுபாகுவையும், சத்துருக்காதியையும் விட்டு வந்தேன். சுபாகுவை மதுகையின் மன்னனாகவும், சத்துருக்காதியை விதிகையை தலைநகராகக் கொண்ட பகுதிக்கும் அரசனாக்கி விட்டேன். மொத்தத்தில், நம் பிள்ளைகளின் பொறுப்பில் இந்த தேசம் வந்துவிட்டது. நாம் மகிழ்வுடன் புறப்படுவோம், என்றான். ராம சகோதரர்கள் வைகுண்டம் செல்லப்போவதை எப்படித்தான் அறிந்தார்களோ தெரியவில்லை! இலங்கையில் இருந்து விபீஷணன் வந்து விட்டான். வாயு புத்திரன் அனுமானின் உள்ளம் ஏதோ காரணத்தால் கலங்கவே அவனும் அடுத்த கணமே அயோத்திக்கு வந்து சேர்ந்தான். கரடிகளின் அரசன் சாம்புவன், ராமேஸ்வரம் கடலில் சேதுபந்தனம் கட்டிய நளன், துமிந்தன், நீலன், மயிந்தன், தேவர்களின் அம்சமான வானர வீரர்கள், சுக்ரீவன்...எல்லாரும் வந்து சேர்ந்து விட்டனர். இவர்களில் சுக்ரீவன், ராமா! தாங்கள் இன்றி ஒரு கணமும் உயிர் தரியேன். என் மகன் அங்கதனிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு வந்துவிட்டேன். புறப்படுவோமா வைகுண்டத்துக்கு, என்றான். அப்போது அயோத்தி மக்கள் கூட்டமாக வந்தனர்.

எங்கள் ஸ்ரீராமா! நாங்களும் தங்களோடு வைகுண்டம் வருவோம், என்று கோஷமிட்டனர். மரணத்தைச் சந்திக்க எப்படி ஒரு ஆர்வம் பாருங்கள். ஒரு நல்லவன் மரணமடைந்தால், அந்த நாடே மரணமடைகிறது. ராமனுக்காக உயிரையே கொடுத்தவர்கள் நம்மவர்கள். ராமபிரான் அந்த சோகமான நேரத்திலும் தன்னைச் சார்ந்தவர்கள் தன் மீது காட்டிய விசுவாசம் கண்டு பெருமிதமடைந்தார். அனுமானை அழைத்தார். நீ என்னோடு வர வேண்டாம். என்னிடம் ஏற்கனவே, வைகுண்டத்தை விட பூலோகத்தில் ராமநாமம் சொல்வதையே விரும்புவதாகச் சொல்லியிருக்கிறாய். சிரஞ்சிவீயே! நீ இங்கேயே தங்கியிரு. இது என் கட்டளை, என்றார். கண்ணீருடன் ஒப்புக்கொண்டார் அனுமான். பின்னர் மக்கள் புடைசூழ அனைவரும் சரயுநதியில் இறங்கினர். லவகுசர் கண்ணீர் வடித்தனர். பிரம்மா வானில் தோன்றி நாராயணனாய் உருமாறிய ராமனை வரவேற்றார். தன்னுடன் வந்தவர்களுக்கு தேவலோகத்தில் ஒரு நகரை நிர்மாணிக்க உத்தரவிட்டார் பகவான். சந்தானம் என்ற அந்த நகரில் அவர்கள் தங்கினர். ஸ்ரீமன் நாராயணன், புன்சிரிப்புடன் சீதையாய் வடிவெடுத்து தனக்காக காத்திருந்த லட்சுமி தாயாரை ஆலிங்கனம் செய்து அனைவருக்கும் அருள் செய்தார்.

—முற்றும். 



நன்றி தினமலர்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

லவகுசா சரித்திரம் - Page 2 Empty Re: லவகுசா சரித்திரம்

Post by ராகவா August 17th 2014, 18:30

விரிவான விளக்கம் அக்கா..
நன்றி உங்கள் அறிய வரலாற்று தகவலுக்கு...
லவகுசா சரித்திரம் - Page 2 Images?q=tbn:ANd9GcQ5H4gWJHlxJQ0nDiRx1NWabBFj994sgV2WKt85h31P2Sy1nFBH
ராகவா
ராகவா
உதய நிலா
உதய நிலா

Posts : 1143
Join date : 09/11/2012
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

லவகுசா சரித்திரம் - Page 2 Empty Re: லவகுசா சரித்திரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum