Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
குப்பைத்தொட்டி !
Page 1 of 1
குப்பைத்தொட்டி !
ராதேக்ருஷ்ணா
குப்பைத்தொட்டி !
மிக அவசியமான உலகின் ஒரு பொருள் !
பலரும் இழிவாக மதிப்பிடும் ஒரு பொருள் !
குப்பைத்தொட்டி இல்லையென்றால்
மற்ற இடங்களின் அழகு இல்லாமல் போய்விடும் !
குப்பைத்தொட்டி இல்லாத வீடோ,
அலுவலகமோ இருக்கவே முடியாது !
என்னை பிரமிக்க வைத்த ஒரு பொருள் !
வாழ்க்கையின் பல யதார்த்தங்களை
ரகசியமாய் சொல்லிக்கொடுக்கும் ஒரு பொருள் !
குப்பைத்தொட்டியிடமிருந்து நான் கற்றவை பல !
அதிலிருந்து சிலவற்றை உனக்குச் சொல்கிறேன் !
என்ன சிரிக்கிறாயா ? ! ?
குப்பைத்தொட்டியில் என்ன பெரியதாக
கற்றுக்கொள்ள இருக்கிறதென்று யோசிக்கிறாயா ?
கற்றுக்கொடுக்காத பொருள்களே
உலகத்தில் இல்லை !
கற்றுக்கொள்ள உனக்கு
ஆசையிருந்தால் எதிலிருந்தும்,
பலவற்றையும் கற்றுக்கொள்ளலாம் !
எந்த ஒரு பொருளையும்,
இழிவாக,உபயோகமில்லாததாக ஒரு பொழுதும்
நினைக்கவே நினைக்காதே !
சரி ! இப்போதைக்கு நாம்
குப்பைத்தொட்டியினால்
கிடைத்த பாடங்களை கற்றுக்கொள்ளலாம் !
தேவையில்லாததை சேகரித்து,
மற்ற இடங்களை சுத்தமாக வைப்பதில்,
குப்பைத்தொட்டிக்கு சமானம் குப்பைத்தொட்டியே !
வாழ்க்கையில் தேவையில்லாததை
தனியாக எடுத்துப் பிரித்து விட்டாலே
வாழ்க்கை மிகவும் நிம்மதியாக
இருக்கும்!
இது நான் குப்பைத்தொட்டியிடமிருந்து
கற்ற முதல் பாடம் !
தான் குப்பையைத்தான்
சேகரிக்கிறோம் என்ற அலட்சியம்
இல்லாத,தாழ்வு மனப்பான்மை
இல்லாத,அசிரத்தையில்லாத ஒன்று
குப்பைத்தொட்டி !
நம் கடமை அடுத்தவருக்குக்
கேவலமாகத் தெரிந்தாலும்,நாம்
அதிலிருந்து நழுவாமல்,முழு மனதோடு,
வெறுப்பில்லாமல் அதில் ஈடுபடவேண்டும் !
இது நான் குப்பைத்தொட்டியிடமிருந்து
கற்ற இரண்டாவது பாடம் !
படித்தவன்,படிக்காதவன்,
வயதானவர்,இளையவர்,
ஆண்,பெண்,
பணக்காரன்,ஏழை,
என்ற எந்த பாகுபாடும்
பார்க்காத ஒன்று குப்பைத்தொட்டி !
யார் எதுவாக இருந்தாலும்,
எப்படியிருந்தாலும், நீ
என்றும் மாறாதிரு !
இது நான் குப்பைத்தொட்டியிடமிருந்து
கற்ற மூன்றாவது பாடம் !
ஏதோ ஒரு மூலையில்,
யாரும் மதிக்காமல் இழிவாகக்
கிடந்தாலும்,அவரவர்க்கு தேவையான
சமயத்தில் தன் பக்கம் அவர்களை
வரவைக்கும்,தன் கடமையைச்
செய்யும் ஒரு கர்மவீரன் குப்பைத்தொட்டி !
நீ உன்னுடைய கடமையை
செய்துகொண்டு ஒதுங்கி இரு!
தானாகவே உன்னைத் தேடி
உலகம் வந்தே தீரும் !
இது குப்பைத்தொட்டியிடமிருந்து
நான் கற்ற 4வது பாடம் !
தனக்கென்று ஒதுக்கப்பட்ட
இடத்தைப் பற்றி கவலைப்படாமல்,
தன்னிடத்தை அவமதிக்காமல்
இருப்பது குப்பைத்தொட்டி !
உனக்கென்று பகவான் கொடுத்த
இடத்தை ஒரு நாளும் நீ
கேவலப்படுத்தாமல்,உன் வாழ்க்கையில்
நிம்மதியாய் வாழ்ந்து வா !
இது குப்பைத்தொட்டியிடமிருந்து
நான் கற்ற 5வது பாடம் !
இன்னும் பல பாடங்களை
குப்பைத்தொட்டி
எனக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது !
அதை எல்லாம் நான் உனக்கு
சொல்லவேண்டிய அவசியமில்லை !
எப்பொழுதும் அடுத்தவர் முதுகில்
பயணம் செய்யாதே !
அப்படிச் செய்தால் உன்னை
சுலபமாகக் கீழே தள்ளிவிடலாம் !
உன் முயற்சியில் வாழக் கற்றுக்கொள் !
உன் முயற்சியே உனக்கு சந்தோஷம்!
நீ சிரத்தையோடு பார்த்தால்
எல்லாவற்றிலும் பாடம் கற்றுக்கொள்ளலாம் !
நீ சிரத்தையோடு பார் !
நீ கற்றுக்கொள் !
உன் மனம் குப்பைத்தொட்டியில்லை !
தேவையில்லாததை வைத்துக்கொள்ளாதே !
உன் வாழ்க்கை குப்பைத்தொட்டியில்லை !
தேவையில்லாதவற்றை சேகரிக்காதே !
உன் நேரம் குப்பைத்தொட்டியில்லை !
வீணான விஷயங்களை செய்யாதே !
தினமும் இனி நீ செய்யவேண்டியது !
காலையில் எழுந்தவுடன்
உன் அகம்பாவத்தைக்
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் சுயநலத்தை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் திமிரை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் சந்தேகத்தை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் இயலாமையை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் துக்கத்தை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் பைத்தியக்காரத்தனத்தை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் சோம்பேறித்தனத்தை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் முட்டாள்தனத்தை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் பேராசையை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் பொறாமையை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் பயங்களை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் அழுக்கை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் காமத்தை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் அழுகையை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் பாவங்களை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் குழப்பங்களை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன்னிடம் தேவையில்லாமலிருக்கும்
அனைத்தவற்றையும்
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் மனதில்
எப்பொழுதெல்லாம்
தேவையில்லாதவைகள்
தோன்றுகின்றதோ,
உடனே அவற்றையெல்லாம்
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
வீசிப்பார் ! மனம் சமாதானமடையும் !
இரவும்,படுக்கும் முன்பு,
உன்னுடைய மனதிலிருக்கும்,
அத்தனையையும் குப்பைத்தொட்டியில்
வீசி எறி !
க்ருஷ்ணனை மட்டும் உனக்குள்
வைத்துக்கொள் !
நாமஜபத்தை மட்டும் உனக்குள்
வைத்துக்கொள் !
தைரியத்தை மட்டும் உனக்குள்
வைத்துக்கொள் !
நீ குப்பைத்தொட்டியில்லை !
அதைமட்டும் புரிந்துகொள் !
நீ க்ருஷ்ணன் என்னும்
பூச்செடியை வைத்துக்கொள்ளும்
அழகான பூந்தொட்டி நீ !
என் அருமை க்ருஷ்ணனின்
பூந்தொட்டியே !
நீ ஒருநாளும்
குப்பைத்தொட்டியாகிவிடாதே ! ! !
Read more: http://vedhaththamizh.blogspot.com/2010/04/blog-post_30.html#ixzz0zqSCFnYw
Under Creative Commons License: Attribution
குப்பைத்தொட்டி !
மிக அவசியமான உலகின் ஒரு பொருள் !
பலரும் இழிவாக மதிப்பிடும் ஒரு பொருள் !
குப்பைத்தொட்டி இல்லையென்றால்
மற்ற இடங்களின் அழகு இல்லாமல் போய்விடும் !
குப்பைத்தொட்டி இல்லாத வீடோ,
அலுவலகமோ இருக்கவே முடியாது !
என்னை பிரமிக்க வைத்த ஒரு பொருள் !
வாழ்க்கையின் பல யதார்த்தங்களை
ரகசியமாய் சொல்லிக்கொடுக்கும் ஒரு பொருள் !
குப்பைத்தொட்டியிடமிருந்து நான் கற்றவை பல !
அதிலிருந்து சிலவற்றை உனக்குச் சொல்கிறேன் !
என்ன சிரிக்கிறாயா ? ! ?
குப்பைத்தொட்டியில் என்ன பெரியதாக
கற்றுக்கொள்ள இருக்கிறதென்று யோசிக்கிறாயா ?
கற்றுக்கொடுக்காத பொருள்களே
உலகத்தில் இல்லை !
கற்றுக்கொள்ள உனக்கு
ஆசையிருந்தால் எதிலிருந்தும்,
பலவற்றையும் கற்றுக்கொள்ளலாம் !
எந்த ஒரு பொருளையும்,
இழிவாக,உபயோகமில்லாததாக ஒரு பொழுதும்
நினைக்கவே நினைக்காதே !
சரி ! இப்போதைக்கு நாம்
குப்பைத்தொட்டியினால்
கிடைத்த பாடங்களை கற்றுக்கொள்ளலாம் !
தேவையில்லாததை சேகரித்து,
மற்ற இடங்களை சுத்தமாக வைப்பதில்,
குப்பைத்தொட்டிக்கு சமானம் குப்பைத்தொட்டியே !
வாழ்க்கையில் தேவையில்லாததை
தனியாக எடுத்துப் பிரித்து விட்டாலே
வாழ்க்கை மிகவும் நிம்மதியாக
இருக்கும்!
இது நான் குப்பைத்தொட்டியிடமிருந்து
கற்ற முதல் பாடம் !
தான் குப்பையைத்தான்
சேகரிக்கிறோம் என்ற அலட்சியம்
இல்லாத,தாழ்வு மனப்பான்மை
இல்லாத,அசிரத்தையில்லாத ஒன்று
குப்பைத்தொட்டி !
நம் கடமை அடுத்தவருக்குக்
கேவலமாகத் தெரிந்தாலும்,நாம்
அதிலிருந்து நழுவாமல்,முழு மனதோடு,
வெறுப்பில்லாமல் அதில் ஈடுபடவேண்டும் !
இது நான் குப்பைத்தொட்டியிடமிருந்து
கற்ற இரண்டாவது பாடம் !
படித்தவன்,படிக்காதவன்,
வயதானவர்,இளையவர்,
ஆண்,பெண்,
பணக்காரன்,ஏழை,
என்ற எந்த பாகுபாடும்
பார்க்காத ஒன்று குப்பைத்தொட்டி !
யார் எதுவாக இருந்தாலும்,
எப்படியிருந்தாலும், நீ
என்றும் மாறாதிரு !
இது நான் குப்பைத்தொட்டியிடமிருந்து
கற்ற மூன்றாவது பாடம் !
ஏதோ ஒரு மூலையில்,
யாரும் மதிக்காமல் இழிவாகக்
கிடந்தாலும்,அவரவர்க்கு தேவையான
சமயத்தில் தன் பக்கம் அவர்களை
வரவைக்கும்,தன் கடமையைச்
செய்யும் ஒரு கர்மவீரன் குப்பைத்தொட்டி !
நீ உன்னுடைய கடமையை
செய்துகொண்டு ஒதுங்கி இரு!
தானாகவே உன்னைத் தேடி
உலகம் வந்தே தீரும் !
இது குப்பைத்தொட்டியிடமிருந்து
நான் கற்ற 4வது பாடம் !
தனக்கென்று ஒதுக்கப்பட்ட
இடத்தைப் பற்றி கவலைப்படாமல்,
தன்னிடத்தை அவமதிக்காமல்
இருப்பது குப்பைத்தொட்டி !
உனக்கென்று பகவான் கொடுத்த
இடத்தை ஒரு நாளும் நீ
கேவலப்படுத்தாமல்,உன் வாழ்க்கையில்
நிம்மதியாய் வாழ்ந்து வா !
இது குப்பைத்தொட்டியிடமிருந்து
நான் கற்ற 5வது பாடம் !
இன்னும் பல பாடங்களை
குப்பைத்தொட்டி
எனக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது !
அதை எல்லாம் நான் உனக்கு
சொல்லவேண்டிய அவசியமில்லை !
எப்பொழுதும் அடுத்தவர் முதுகில்
பயணம் செய்யாதே !
அப்படிச் செய்தால் உன்னை
சுலபமாகக் கீழே தள்ளிவிடலாம் !
உன் முயற்சியில் வாழக் கற்றுக்கொள் !
உன் முயற்சியே உனக்கு சந்தோஷம்!
நீ சிரத்தையோடு பார்த்தால்
எல்லாவற்றிலும் பாடம் கற்றுக்கொள்ளலாம் !
நீ சிரத்தையோடு பார் !
நீ கற்றுக்கொள் !
உன் மனம் குப்பைத்தொட்டியில்லை !
தேவையில்லாததை வைத்துக்கொள்ளாதே !
உன் வாழ்க்கை குப்பைத்தொட்டியில்லை !
தேவையில்லாதவற்றை சேகரிக்காதே !
உன் நேரம் குப்பைத்தொட்டியில்லை !
வீணான விஷயங்களை செய்யாதே !
தினமும் இனி நீ செய்யவேண்டியது !
காலையில் எழுந்தவுடன்
உன் அகம்பாவத்தைக்
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் சுயநலத்தை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் திமிரை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் சந்தேகத்தை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் இயலாமையை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் துக்கத்தை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் பைத்தியக்காரத்தனத்தை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் சோம்பேறித்தனத்தை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் முட்டாள்தனத்தை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் பேராசையை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் பொறாமையை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் பயங்களை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் அழுக்கை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் காமத்தை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் அழுகையை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் பாவங்களை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் குழப்பங்களை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன்னிடம் தேவையில்லாமலிருக்கும்
அனைத்தவற்றையும்
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் மனதில்
எப்பொழுதெல்லாம்
தேவையில்லாதவைகள்
தோன்றுகின்றதோ,
உடனே அவற்றையெல்லாம்
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
வீசிப்பார் ! மனம் சமாதானமடையும் !
இரவும்,படுக்கும் முன்பு,
உன்னுடைய மனதிலிருக்கும்,
அத்தனையையும் குப்பைத்தொட்டியில்
வீசி எறி !
க்ருஷ்ணனை மட்டும் உனக்குள்
வைத்துக்கொள் !
நாமஜபத்தை மட்டும் உனக்குள்
வைத்துக்கொள் !
தைரியத்தை மட்டும் உனக்குள்
வைத்துக்கொள் !
நீ குப்பைத்தொட்டியில்லை !
அதைமட்டும் புரிந்துகொள் !
நீ க்ருஷ்ணன் என்னும்
பூச்செடியை வைத்துக்கொள்ளும்
அழகான பூந்தொட்டி நீ !
என் அருமை க்ருஷ்ணனின்
பூந்தொட்டியே !
நீ ஒருநாளும்
குப்பைத்தொட்டியாகிவிடாதே ! ! !
Read more: http://vedhaththamizh.blogspot.com/2010/04/blog-post_30.html#ixzz0zqSCFnYw
Under Creative Commons License: Attribution
radhekrishna- Posts : 7
Join date : 16/09/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum