HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



இந்த மாதிரி எப்போதாவது யோசித்து பார்த்ததுண்டா? (A must read article till the end)

Go down

இந்த மாதிரி எப்போதாவது யோசித்து பார்த்ததுண்டா? (A must read article till the end)  Empty இந்த மாதிரி எப்போதாவது யோசித்து பார்த்ததுண்டா? (A must read article till the end)

Post by மாலதி June 15th 2012, 07:18

விஞ்ஞானிகள் எல்லோரும் கிட்டத்தட்ட சொல்ற ஒரு விஷயம் - நம்ம இந்த
பூமிங்கிறது சூரியனில் இருந்து தெறித்த ஒரு நெருப்புத் துளி. மெல்ல மெல்ல
அது குளிர்ந்து, நிலமாக, நீராக , காற்றாக மாறி - பின் உயிரினங்கள் தோன்றி
இருக்கின்றன. இதற்க்கு பல லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகி இருந்து இருக்கும்
என்கிறார்கள். (படிச்ச புள்ளைங்க எப்படிய்யா பொய் சொல்லும்? )


[You must be registered and logged in to see this link.]

இப்படி இருக்கும்போது, கடவுள் / இறைவன் என்பது எங்கு , எப்போது இருந்தது
வந்தது என்பது , அவர் ஒருவர் இருப்பதை ஒப்புக்கொள்வது என்பது - முழுவதும்
நிரூபணம் ஆகாத ஒரு விஷயம். அவரவர் தனிப்பட்ட அனுபவங்கள் பொறுத்து அல்லது
நம்பிக்கை பொறுத்து தான் இறைவன் இருக்கிறார். கடவுள் என்பவர் சர்வ வல்லமை
பொருந்தியவர். அவர் நினைத்தால், ஒரே கணத்தில் நம் கஷ்டங்கள் பறந்து விடும்.
அவரிடம் சரணடைந்து விடு. அவர் எல்லாம் பார்த்துக்கொள்வார் என்று சொல்லி,
சொல்லித் தான் நாம் வளர்க்கப்பட்டு இருக்கிறோம். குழந்தையாக இருக்கும்போது
குழம்பாமல் ஏற்றுக்கொண்ட நாம் , கொஞ்சம் வளர்ந்த பிறகு - கடவுள்
இல்லையென்று சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்குமே என்று தசாவதாரம்
படத்தில் கடைசியில் கூறியதைத்தான் மனதளவில் பிரதிபலிக்கிறோம்.


[You must be registered and logged in to see this link.]

ஆனால், நம் நாட்டிலோ சித்தர் பெருமக்கள் - அவன் அருளை உணர்ந்து அனுதினமும்
பரவசப்படுகிறார்கள். நம்மைப் போன்ற சாமான்யர்களும் இறைவனின் கடைக்கண்
பார்வை கிடைக்காதா என எதிர்பார்ப்புடன் ஏங்குகின்றனர். கார்த்திகை
தீபத்திற்கும், தைப் பூசத்திற்கும், சித்ரா பௌர்ணமிக்கும், சூர
சம்ஹாரத்திற்க்கும் - லட்சோப லட்சம் மக்கள் கூடுகின்றனர். எல்லோருக்குமே பிரச்னை தீர்ந்து விடுகிறதா? ஒரு சிலருக்கு
கிடைக்கும் பாக்கியம் ஏன் அனைவருக்கும் கிடைப்பதில்லை. கும்பிடுபவர்களின்
அப்பழுக்கற்ற நம்பிக்கை என்று ஒரே வார்த்தையில் சொல்லி விடுகின்றனர் ,
விவரம் அறிந்தவர்கள்.

ஆனால் உயிர் என்பது என்ன? உடலில் எங்கே இருக்கிறது? இறந்த பிறகு அந்த
உயிருக்கு என்ன நடக்கிறது ? பிறக்கும் ஒரு குழந்தை எப்படி குடிசையில் ஐந்து
குழந்தையோடு ஆறாவதாகப் பிறந்து கஷ்டப்பட விருக்கிறது? இன்னொரு குழந்தை -
குளு குளு AC அறையில் பிறக்கிறது? இதை யார் தீர்மானிப்பது - என்பதற்கு
எல்லாம் - விடை இன்னும் கிடைத்த பாடில்லை. புதிர். அல்லது இதெல்லாம் ஒரு
இயல்பான சம்பவம். இயற்கை. இதையெல்லாம் முழுவதுமாக புரிந்து கொள்ள முடியாது
என்று தீர்மானிக்கிறார்கள்.

ஒரு பெரிய ஆட்டு மந்தையில் பிறக்கும் ஒரு ஆட்டுக்குட்டி, எத்தனையோ ஆடுகள்
கூட இருக்கும்போதும், பிறந்ததும் தனது தாய் ஆட்டை சரியாக அடையாளம் கண்டு,
சரியாக பால் மடியில் - வாயை வைத்து உறிஞ்சுவது - இதையெல்லாம் யார் அதற்க்கு
சொல்லிக் கொடுத்து இருப்பார்கள்? வீல், வீல் என்று கத்தும் குழந்தையை
அன்னை எடுத்து அணைத்ததும், அந்த கத கதப்பை உணர்ந்ததும் - படக்கென்று
அழுகையை நிறுத்தி , புன்னகை செய்கிறதே..? எப்படி? என்ன நடக்குது இங்கே?
எப்படி இதெல்லாம் !

சரி, உயிர்னா நிஜமாவே என்ன பாஸ்? நம் உடம்புக்குள் ஓடும் காற்றா?
இருக்காதே..? செத்துப் போன பிறகும் , காற்று உள்ளே போய் வந்துக்கிட்டுத்
தானே இருக்கும்? அப்படித் தானே சொல்றாங்க.. ஓகே.. காற்றைப் பார்க்க
முடியலை. ஆனா உணர முடியுதே. காற்று வீசினால் , செடி கொடிகள் அசைகின்றன.
நம்ம உடம்புக்குள்ளே காற்று போகுது. வெளியே வருது. ரத்தமா? தெரியலை. இப்படி
இருக்குமோ...? சூடு - உஷ்ணம் ! அட, இருக்கலாம்பா. இந்த சூடு போயிடுச்சுனா,
உசிர் போயிடுச்சுனா, உடம்பு சில்லுனு ஆகிடுதே. இதைத் தான் உயிர்னு
சொல்றோமோ..! ஒரு குறிப்பிட்ட உஷ்ணம் , நம்ம உடம்புலே எப்படி மைண்டைன்
ஆகுது..? கூடுச்சுனா, காய்ச்சல் அடிக்குதுங்கிறோம். குறைஞ்சதுனா, குளிர்
ஜுரம். உடம்புக்கு முடியிறது இல்லே.., தெம்பு இல்லே..!

உயிர் எங்கே , எந்த புள்ளியிலே இருக்கு? சூரியன் - நெருப்பு. சூரியன்ல
இருந்து வந்த பூமி ஒரு நெருப்புத் துளி. பூமியில் இருக்கிற நமக்குள்ளேயும்
ஒரு சின்ன உஷ்ணம் இருக்குது இல்லே..? அதையே உயிர்னு சொல்றாங்களோ..!

எப்படி இந்த உயிர் உற்பத்தி ஆகி இருக்க கூடும் என்பதை விஞ்ஞானிகள் சொல்வது
ஒரு புறம் இருக்கட்டும். நாம கொஞ்சம் இப்போ யோசித்துப் பார்ப்போம்.

கசாப்பு கடையிலே ஆட்டை வெட்டி , கட்டித் தொங்க விட்டு இருப்பாங்க, பார்த்து
இருப்பீங்க....! அதை வெட்டி, கூறு போட்டு கொடுக்கிறாங்க. அதை, அப்படியே
ஒரு நாள் விட்டுட்டா, என்ன ஆகும்..? புழுவா நெளிய ஆரம்பிக்கும்? இந்த புழு
எல்லாம் எங்கே இருந்து வந்தது..? அதுக்கு முன்னேயே அந்த ஆட்டு உடம்புலே
இருந்து இருக்குமோ? இறந்த பிறகு தான் வரணுமா?

சூரியன்ல இருந்து, தெறிச்சு விழுந்த பூமி - ஆறிய பிறகு, உயிரினங்கள்
இப்படித்தான் தோன்றி இருக்குமோ..? ஆனா, பூமி செத்துப் போயிடுச்சுன்னு கூட
சொல்ல முடியாதே..! அதுவா தன்னை சுத்திக்குது. அப்படியே வருஷத்துக்கு
ஒருமுறை சூரியனையும் சுத்துது... ! ஒரு குறிப்பிட்ட அச்சுல சாய்வா வேற
இருக்கு...! எந்த விசை இதை தாங்கிப் பிடிக்குது? கடல், ஆறு, மழை, தண்ணி
.... அப்புறம் ஒரு குறிப்பிட்ட உயரம் வரை காற்று. குறிப்பிட்ட உயரம் வரை
இருக்கிற ஈர்ப்பு சக்தி... ! அடேங்கப்பா..! அப்புறம் - நெருப்பு ,
வெளிச்சம், ஒளி. இப்படி நீர், நெருப்பு, காற்று என்கிற - மூன்று மாபெரும்
விஷயங்கள்.

அதுக்கு அப்புறம், நிலம். ---- அட அடா! நிலத்தை சும்மா தோண்டிப்பார்த்தா ,
ஒண்ணுமே இல்லை - வெறுமே மண்ணுதான் வருது. அதுலேயே ஒரு விதையைப் போட்டு ,
தண்ணி ஊற்றி விட்டால் - கொஞ்ச நாள் கழிச்சு என்ன என்னமெல்லாம் வருது..!
காய் கனி , பூக்கள் , மரம், செடி , கொடி , கிழங்கு , நெல் , கோதுமை , என்ன
வேணும்..? எல்லாமே தர்றேன்..! எடுத்துக்கோ... ! விதை - இடம் - காலம்
அவ்வளவுதான் , என்ன வேணும்னாலும் கிடைக்கும்... இப்படி ஒரு உயிர்
துடிப்புள்ள நிலம் இருக்கும்போது , பூமி ஒரு உயிர் இல்லாத வஸ்து என்று
எப்படிக் கூற முடியும்? நிலம் உயிருள்ளது, அபரிமித சக்தியை உள்ளடக்கியது
என்கிற அடிப்படையில் தான் வாஸ்து சாஸ்திரத்தையே நம்மவர்கள் கண்டு
பிடித்துள்ளார்கள்

இந்த நான்கு விஷயங்கள் தவிர - ஐந்தாவது வானம்... அடேயப்பா... ! இருக்குதா
இல்லை கற்பனையா அது..? ஆனா, எந்த ஒரு உயிரினமும், வானத்தில் இருந்துதான்
எல்லா சக்தியையும் எடுத்துக் கொள்கிறதாம். பஞ்ச பூதங்களுக்கும் ஆதாரமாக
இருப்பது - இந்த ஆகாயம் தான். மேகத்தில் தொடங்கி, பூமி , சூரியன், கோடானு
கோடி சூரியன்கள் எல்லாவற்றுக்கும் இடம் கொடுத்து - மாபெரும் சக்திக்
களஞ்சியமாக இருப்பது இந்த ஆகாயம் தான். அங்கு இருப்பது தானே சூரியன்.
சூரியனில் இருந்து பூமி, இப்படி தொட்டு தொட்டு எல்லா சங்கதிகளும்
ஆரம்பித்தன.

ஒரு துளி விதையில் இருந்து, இல்லை விதையில் கூட ஒரு சிறு புள்ளியில்
இருந்து , நிலத்தில் உள்ள சத்துக்களை உறிஞ்சியபடி வளரும் ஒரு செடி,
ஆகாயத்தில் இருந்தே, முழு சக்தியையும் பெற்றுக்கொண்டு , ஒரு குறிப்பிட்ட
கால கதியில் - ஒரு மாபெரும் விருட்சமாக வளர்கிறது. மேலோட்டமாகப்
பார்த்தால், சாதாரண வளர்ச்சி என்றுதான் தோன்றும். ஆனால், யோசித்துப்
பாருங்கள்.. நிஜமாகவே அதிசயம். !

ஒரு சிறு குழந்தை எப்படித் தோன்ற ஆரம்பித்து , வளர்ந்து - மாபெரும் மனிதனாக
வளர்கிறான்.... ஒரு நிமிடம் கற்பனை செய்து பாருங்கள்....! இயற்கையில்
இருந்து எவ்வளவு சக்தியை எடுத்துக் கொண்டுள்ளோம்..! பஞ்ச பூதங்களில்
இருந்து தான் எல்லாமும் பெற்றுள்ளோம். அவற்றின் ஒரு அங்கமாக தான் நம்
உடலும் இருக்கிறது. நம்முள்ளும் தசை, நீர், ரத்தம், காற்று, வயிற்றில்
பசியாகிய நெருப்பு - அடேங்கப்பா..!

ஆகாயம் , எங்கேப்பா இருக்கிறது என்று கேட்கிறீர்களா? அதுதான் நம்ம மனசு.
அப்படி ஒன்னு இருக்குதா, இல்லையான்னே தெரியாத, ஆனால் உணர மட்டுமே முடிந்த
ஒரு விஷயம். இயற்கையைப் போலவே - இங்கும் மனத்தில் ஒரு எண்ணம் (விதை)
விழுந்து, அந்த எண்ணம் நிறைவேற - நம் செயல்கள் (சத்துக்கள்) துணை நிற்க,
அங்கே ஒரு குறிப்பிட்டகால இடைவெளியில் வளர்ச்சி தென்படும். எண்ணங்கள்
மற்றும் அவற்றை ஒட்டிய செயல்கள் மட்டுமே மனிதனின் வாழ்வை தீர்மானிக்கின்றன.


ஒளியையும், ஒலியையும் விட வேகமான ஒரு விஷயம், நம் மனது தான். எப்படி,
நினைத்த மாத்திரத்தில் ஒரு பத்து வருடங்களுக்கு முன்னே நடந்த ஒரு விஷயத்தை ,
மனக் கண்ணில் உங்களால் கொண்டு வர முடியுமோ, அதே போல - பத்து வருடம்
கழித்து நடக்க விருப்பதையும், நீங்கள் பார்க்க முடியும். இந்த
visualisation தான் , ஒரு சாதிக்க கூடிய உத்வேகத்தை உங்களுக்கு அளிக்கும்.
சில வருடங்கள் கழித்து, நமக்கு என்ன வேண்டும், எப்படி ஆக விருக்கிறோம்
என்கிற எண்ணத்தை, விதையை - மிக தெளிவாக உங்கள் மனதில் பதித்து, அதற்கேற்ப
செயல்களை ஒரு முகப்படுத்தி செய்ய செய்ய - அந்த விதை விருட்சமாக வளர்ந்து,
உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்லும்... !

இந்த கால சூத்திரத்தை உணர்ந்து, அதை ஜெயித்தவர்களே சித்தர்கள். ஒருவரை
பார்த்தவுடன், அவர்களது ஜென்மாந்திரத்தையே கணிக்க கூடியவர்கள்.இந்த கால
சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே , ஜோதிட சாஸ்திரம் தோன்றியிருக்கிறது.

இந்த மனதை மட்டும் அவ்வப்போது கவனித்து வாருங்கள். நீங்கள் நல்லது
செய்யும்போதும், கெட்டது செய்யும்போதும், ஏன் இந்த கட்டுரையை
படிக்கும்போதும் - அது உங்களிடம் பேசும். அதை நீங்கள் உணர முடியும்.
மனதையும் கட்டுப் படுத்தும், கவனிக்கும் அந்த 'நான்' தான் - நீங்கள். ஆன்மா
என்கிறார்கள் இதை.

நமக்கு மிக வேண்டியவர்கள் கண் முன்னே துடிக்கும்போது , வருத்தப்படுவது இந்த
நான் தான். ஆத்மாவும், ஆத்மாவும் உணரக்கூடிய இடத்தில் அன்பு மேலோங்கும்.
ஆத்மார்த்தமான நட்பு என்கிறோமே..! நம் சொந்த உறவுகளிலும் கூட, இந்த ஆத்ம
பரிச்சயம் அவசியம். வெறுமனே மேலோட்டமாக அப்பா, அம்மாவிடம் அண்ணன்,
தங்கையிடம், நபர்களிடம் பழகுவதை, பேசுவதை விட, ஆன்ம ஈடுபாட்டோடு - அவர்கள்
சொல்வதை கவனித்துப் பேசிப் பாருங்கள். உங்கள் அந்த நான் அதை உணர்ந்து
கவனிக்கட்டும். வாழ்க்கையில், உயரங்களைத் தொட்டவர்கள் அனைவரும், இன்றும்
கடை பிடிக்கும் ஒரு அடிப்படை விஷயம் இது.

ஆகாயத்தில் இறைவன் இருக்கிறார் என்பது போல, நம் மனத்தின் உள்ளும் - இறைவன்
இருக்கிறார். உள்ளத்தின் நின்று ஒளிரும் அந்த ஒளி, இந்த அண்ட,
பிரமாண்டத்தைப் படைத்த அதே பேரொளி தான்.


கடவுள் இருக்கிறாரா, ஆலயங்களில் இருப்பது நிஜமா...? சந்தேகத்துக்கு
இடமில்லாத சர்வ நிச்சயம் இது. நமக்குள்ளேயே இறை ஒளி இருக்கும்போது,
ஆலயங்களில் அந்த ஒளி இன்னும் அதிகமாகவே இருக்கிறது. தீப ஒளி வழிபாடு ,
இதில் இருந்தே தொடங்கி இருக்கவேண்டும். ஆலயங்களுக்குள் செல்லும்போது, நம்
மனது ஒடுங்கி, அமைதி பெறுகிறதே, இதில் இருந்தே தெரிந்து கொள்ள வேண்டாமா..?




இத்தனை தெய்வங்கள் இருக்கிறார்களே ? ஆமாம் இருக்கிறார்கள். அவர்களை
தரிசித்த சித்த பெருமக்களும் நம்முள் இருக்கிறார்கள். நமக்கு , நம்
கஷ்டங்களில் இருந்து விடுபட சில அரிய வழிமுறைகளையும் ஓலைச் சுவடிகளில்
எழுதி இருக்கிறார்கள். நாம் அவற்றை உணர்ந்து கொள்ள, நமது நேரம் அதற்க்கு
ஒத்துழைக்க வேண்டும். அந்த காலத்தில் சுவடி. இந்த காலத்தில் பேப்பர், பேனா ,
கம்ப்யூட்டர் என்று வந்து விட்டது.




அந்த மாபெரும் பரம்பொருளின் கருணையால், அண்ணாமலையாரின் அனுக்ரஹத்தால்,
பொக்கிஷம் போன்ற சில குறிப்புகள், எளிய பரிகார முறைகள் - ஒவ்வொரு ராசி,
நட்சத்திரத்திற்க்கும் பொருந்தக் கூடிய முத்துக்கள், பழைய ஓலைச்
சுவடிகளில் இருந்து எடுத்த அபூர்வ குறிப்புகளைப் பார்க்கும் பாக்கியம்
எனக்கு சமீபத்தில் கிட்டியது. அதில் உள்ள சில
ஆலயங்கள் பற்றிய வியக்கத்தக்க தகவல்கள் , நிஜமாகவே என்னை பிரமிப்பில்
ஆழ்த்தியது. அதில் சில ஆலயங்கள் இப்போது சிதிலமடைந்து, அதே இடத்தில்
இப்போது புதிய ஆலயங்களும் எழுப்பப்பட்டுள்ளன. அவற்றிலும், அதே அருள்
இன்றும் நித்திய பரிபூரணமாக கிடைத்து வருகிறது. எதோ ஒரு காரணத்தால் ,
விண்ணில் இருந்து சில குறிப்பிட்ட கதிர் வீச்சுக்கள் அந்த ஆலயத்தில்
கிரகிக்கப் படுகிறது என்பதை உணர முடிகிறது. . கூடிய விரைவில், கொஞ்சம்
கொஞ்சமாக உங்களிடம் பகிர்ந்து கொள்ள விருக்கிறேன்.




என்னோட நல்ல நேரம், நான் இந்த தளத்தோட கட்டுரைகளைப் படிக்க வாய்ப்பு
கிடைச்சதுன்னு, இங்கு வரும் ஒவ்வொரு வாசக அன்பு உள்ளங்களும் நினைக்கணும்.
அவங்க வாழ்க்கைக்கு உபயோகமா ஒரு ஒரு சிறிய தகவலாவது, நமது இந்த
கட்டுரைகளில் கிடைக்கணும். கஷ்டங்களில் இருந்து முழுவதும் விடுபட்டு,
வாழ்க்கையில் பெரிய அளவில் சாதிக்க விருக்கும் உங்கள் எண்ணங்களுக்கு ஒரு
சிறிய நம்பிக்கைப் பொறி இங்கே இருந்து கிடைக்கணும்.


இது எல்லாமே, உங்களைப் போலவே கொஞ்சம் கொஞ்சமா வாழ்க்கையில நானும் நல்லதொரு
நிலைமைக்கு வந்துக்கிட்டே, கிடைக்கிற நல்ல
அனுபவங்களை,எனக்கு நன்கு தெரிந்த, மிக உருப்படியான விஷயங்களை உங்க
கிட்டே இங்கே பகிர்ந்து கொள்ளனும். அவ்வளவுதான் பாஸ்... ! எனக்குள்ளே
மட்டும் பொத்தி பொத்தி ரகசியமா வைச்சுக் கிட்டு , எதை சாதிக்கப் போறேன்..?



After all , ஒரு மனுஷனுக்கு என்ன சார் வேணும்? ஒரு USEFUL BODY with
PEACEFUL MIND. சொன்னது யார்னு நினைக்கிறீங்க..? சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த். யோசிச்சுப் பாருங்க... !இதுக்குள்ளேயே
சகலத்தையும் அடக்கிட்டாரு. நம்ம ஒட்டு மொத்த வாழ்க்கையுமே,
அந்த பாதையில் தான் போய்க்கிட்டு இருக்கு. அப்படிப் போகலைனா, டக்குன்னு
அந்த பாதைக்கு வாங்க..!மன நிம்மதி அவரவருக்கு வேறுபடலாம். நல்லா
சம்பாதிப்பதாக இருக்கலாம். நிறைய
சாதிப்பதாக இருக்கலாம். குடும்பத்தை நல்லபடியா வைத்துக் கொள்வதாக
இருக்கலாம். மனசு சஞ்சலப்படாம, கவலைப்படாம, குதூகலமா, நிர்மலமா இருக்கணும்.
அதன் பிறகு, 'ஆட்டோமேட்டிக்'கா கடவுளைத் தேட ஆரம்பிக்கும்.





OK , பதிவு கொஞ்சம் நீண்டு விட்டது. மீண்டும் அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்...!
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum