HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



சனி பெயர்சி பலன்

Go down

சனி பெயர்சி பலன் Empty சனி பெயர்சி பலன்

Post by மாலதி November 3rd 2011, 21:31

சனி பெயர்சி பலன் 1

மேஷம்
சனி பெயர்சி பலன்


__முன் வைத்த காலை பின் வைக்காத நீங்கள் சில வேலைகளில் தடைகள் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவீர்கள்.

இதுவரை உங்களின் புத்தி வீடான 5ஆம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை பல
வகையிலும் அல்லல்படுத்திய சனிபகவான் 26.09.2009 முதல் 21.12.2011 முடிய
விபரீத வீடான 6ஆம் வீட்டில் அமர்ந்து சகல யோகங்களையும் தர உள்ளார்.


இதுவரை முன்னுக்குப்பின் முரணாக யோசித்தீர்களே! காரியத்தடைகளால் வீண்
மனஉளைச்சலுக்கு உள்ளானீர்களே! குடும்பத்தில் எப்போதும் கூச்சல்,
குழப்பங்கள் நிலவியதே! பிள்ளைகள் உங்களின் தியாக உணர்வை புரிந்து கொள்ளாமல்
உங்கள் மீது கோபப்பட்டார்களே! இந்த அவல நிலையெல்லாம் இனி மாறும்.


கணவன்-மனைவிக்குள் நிலவி வந்த பனிப் போர் நீங்கும். குடும்பத்தில் தென்றல்
வீசும். இடுப்பு வலி, கர்ப்பச் சிதைவால் அடிக்கடி மனைவியின் உடல் நிலை
பாதித்ததே! இனி ஆரோக்கியம் கூடும். செலவுகளை குறைத்து சேமிக்கத்
தொடங்குவீர்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள்.

பெற்றோரின் உடல் நிலை சீராகும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள்
விலகும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு
சுமுகத் தீர்வு காண்பீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர்.
மழலை பாக்கியம் கிடைக்கும்.


பாதியில் நின்ற வீடு கட்டும் பணி முழுமையடையும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை
மாற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக்
கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. உங்களைக் கண்டு ஒதுங்கிச்
சென்றவர்களெல்லாம் இனி வலிய வந்து உறவாடுவர். குலதெய்வப் பிரார்த்தனைகளை
நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதம், மாநிலத்தவரால் ஆதாயம் உண்டு.


சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் பூர்வபுண்யாதிபதியான சூரியனின்
உத்திரம் நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனிபகவான்
செல்வதால் இக்கால கட்டத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பழைய கடன் பிரச்சனை
தீரும். வழக்குகள் சாதகமாகும். பதவிகள் தேடி வரும்.


உங்களின் சுகாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திர சாரத்தில் 20.09.2010
முதல் 14.10.2011 வரை சனிபகவான் செல்வதால் வீடு, மனை வாங்குவீர்கள்.
வங்கிக் கடன் கிடைக்கும். தாய்க்கு இருந்த மருத்துவச் செலவுகள் குறையும்.
தர்மகாரியங்கள் பலவும் செய்வீர்கள்.


உங்களின் ராசிநாதனான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில் 15.10.2011
முதல் 21.12.2011 வரை சனிபகாவன் செல்வதால் புதிய எண்ணங்கள் மனதில்
தோன்றும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த
மனவருத்தம் நீங்கும்.


வரும் 10.1.2010 முதல் 8.05.2010 வரை மற்றும் 23.01.2011 முதல் 15.06.2011
வரை சனி பகவான் வக்ரத்தில் செல்வதால் சிறுசிறு விபத்துகள், மன உளைச்சல்கள்
வந்து நீங்கும்.


வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலை அதிகம் இருக்கும்
போது விடுப்பில் செல்லும் வேலையாட்களை நீக்குவீர்கள். புதியவர்களை பணியில்
அமர்த்துவீர்கள். இரும்பு, சிமெண்ட், மருந்து வகைகளால் லாபமடைவீர்கள்.
கூட்டுத் தொழிலில் புதியவர்களை, இளைஞர்களை சேர்த்துக் கொள்வீர்கள்.


உத்தியோகத்தில் மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். புது
நிறுவனங்களிலிருந்து அதிக சம்பளத்துடன் நல்ல வேலை தேடி வரும். அயல்நாட்டுத்
தொடர்பில் இயங்கும் தொழிற்கூடங்கள் மூலமாகவும் அழைப்பு வரும். சக
ஊழியர்கள் மதிப்பார்கள்.


கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். திருமணத் தடை
நீங்கும். பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். கனவுத் தொல்லை, பசியின்மை,
முகப்பரு யாவும் நீங்கும்.


மாணவ-மாணவிகளே! நினைவாற்றல் அதிகரிக்கும். கெட்ட நண்பர்களை ஒதுக்கித்
தள்ளுங்கள். மதிப்பெண் கூடும். ஆசிரியர்களின் அன்பையும், பாரட்டையும்
பெறுவீர்கள். கலைஞர்களே! உங்களின் கற்பனைத் திறனுக்கு நல்ல வரவேற்பு
கிடைக்கும். தள்ளிப் போன ஒப்பந்தங்களும் தேடி வரும். சம்பள பாக்கி கைக்கு
வரும்.


இந்தச் சனிப்பெயர்ச்சி தடுமாறிக் கொண்டிருந்த உங்களை தன்னடக்கத்துடன் தலைநிமிர வைப்பதாக அமையும்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

சனி பெயர்சி பலன் Empty Re: சனி பெயர்சி பலன்

Post by மாலதி November 3rd 2011, 21:32

சனி பெயர்சி பலன் 2

ரிஷபம்
சனி பெயர்சி பலன்


அடிக்கடி கற்பனை, கனவுகளில் மிதக்கும் நீங்கள் மனசுக்குள்ளேயே புதுத் திட்டங்கள் போட்டுக் கொண்டே இருப்பீர்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு 4ஆம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை
படாதபாடுபடுத்தி வந்த சனி பகவான் இப்போது 26.09.2009 முதல் 21.12.2011 வரை
உள்ள காலகட்டங்களில் 5ஆம் வீட்டில் அமர்வதால் உங்களின் தயக்கம், தடுமாற்றம்
விலகும்.


இனி எந்த வேலையையும் விரைந்து முடிப்பீர்கள். உங்களுக்குள் அடங்கிக் கிடந்த
ஆற்றல்கள் வெளிப்படும். தைரியம் பிறக்கும். சோகமான முகம் மலரும்.
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கணவன்-மனைவிக்குள்
சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் பெரிய சண்டை வந்ததே! சில தம்பதியர்கள்
சந்தேகத்தால் பிரிந்தீர்களே! அந்த அவல நிலை இனி மாறும். ஒருவரை ஒருவர்
புரிந்து கொள்வீர்கள்.
தாயாருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். அவரின் உடல் நிலை சீராகும்.
பிள்ளைகள் ஸ்தானத்தில் சனி அமர்வதால் பிள்ளைகளிடம் உங்கள் எண்ணங்களை
திணிக்காதீர்கள். அவர்களின் போக்கில் விட்டுப் பிடியுங்கள். சில சமயங்களில்
பாதை மாறி போக நேரும். உயர் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.


மகளுக்கு நல்ல வரன் அமையும். சொந்த, பந்தங்கள் மெச்சும் படி திருமணத்தை
நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை
அமையும். உங்களுக்குள் வீண் குழப்பத்தையும், சிக்கல்களையும் உண்டாக்கிய
சிலரை இனி தவிர்ப்பீர்கள்.


மூட்டு வலி, தலைச்சுற்றல் எல்லாம் நீங்கும். சில நேரங்களில்
உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டு பல நேரங்களில் இப்படியெல்லாம் பேசி இருக்கக்
கூடாது என வருந்தி வதங்கினீர்களே! இனி மற்றவர்கள் மனம் புண்படாத படி
பேசுவீர்கள்.


சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் சுகாதிபதியான சூரியனின் உத்திரம்
நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனிபகவான் செல்வதால்
இக்கால கட்டத்தில் புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். புது வீடு கட்டி
குடியேறுவீர்கள்.


உங்களின் தைரிய ஸ்தானாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திர சாரத்தில்
20.09.2010 முதல் 14.10.2011 வரை சனி பகவான் செல்வதால் எதிர்பாராத பணவரவு,
பொருள் சேர்க்கை, உயர் பதவி, சமூக அந்தஸ்து என யாவும் கிட்டும்.


உங்களின் சப்தம விரையஸ்தானாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திர
சாரத்தில் 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனிபகாவன் செல்வதால் மனைவி வழி
உறவினர்கள் மதிப்பார்கள். சொத்து சேரும்.


வரும் 10.1.2010 முதல் 8.05.2010 வரை மற்றும் 23.01.2011 முதல் 15.06.2011
வரை உள்ள காலக்கட்டத்தில் சனி பகவான் வக்ரத்தில் செல்வதால் உறவினர் பகை,
வீண் செலவுகள், அலைச்சல்கள் ஏற்படக்கூடும்.


சனி பகவான் ஏழாம் வீட்டை பார்ப்பதால் முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப
விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வாக்கு ஸ்தானத்தையும் பார்ப்பதால்
மற்றவர்களை விமர்சித்து பேச வேண்டாம். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம்.
வழக்கில் வெற்றி கிட்டும்.


அக்கம், பக்கம் வீட்டாரிடம் அளவாகப் பழகுங்கள். யோகா, தியானம் செய்யுங்கள்.
மனஅமைதி கிட்டும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.


வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். சரக்குகள் உடனுக்குடன் விற்றுத்
தீரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அயல்நாட்டு தொடர்புடைய
நிறுவனங்கள் உங்கள் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வார்கள்.
கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள்.


உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களை குறை கூறுவதற்கென்றே ஒரு
கூட்டமே இருந்ததே! இனி உங்கள் சேவையை எல்லோரும் மதிப்பர். நீங்கள் கேட்ட
இடத்திற்கே மாற்றம் கிடைக்கும்.


கன்னிப் பெண்களே! படிப்பை தொடர்வீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு
அதிகரிக்கும். மாணவ, மாணவிகளே! அதிகாலையில் எழுந்து படிப்பதை
வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. கலைஞர்களே!
மூத்த கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். பெரிய நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள்
தேடி வரும்.


இந்த சனிப்பெயர்ச்சி கடன் பிரச்சனைகளிலிருந்து மீளச் செய்வதுடன் புது அத்தியாயத்தை தொடங்குவதாக அமையும்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

சனி பெயர்சி பலன் Empty Re: சனி பெயர்சி பலன்

Post by மாலதி November 3rd 2011, 21:32

சனி பெயர்சி பலன் 3

மிதுனம்
சனி பெயர்சி பலன்



மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி பளிச்சென்று பேசும் குணமுடைய நீங்கள் எதையும் சரியாக செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு 3ஆவது வீட்டில் அமர்ந்து, தைரியத்தையும்,
விடாமுயற்சியையும் தந்த சனிபகவான் இப்போது சுகவீடான 4வது வீட்டில்
26.09.2009 முதல் 21.12.2011 வரை வந்து அமர்வதால் அர்த்தாஷ்டமச்சனியாச்சே
என்று வருத்தப்படாதீர்கள். அல்லல்படுத்துமே, என்றெல்லாம் கவலைப்
படாதீர்கள்.


உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியே சனிபகவான்தான். அவர் 4வது வீட்டுக்கு
வந்தாலும் ஓரளவு நல்லதையே செய்வார். குருபகவானின் பார்வையையும் சனி பகவான்
பெறுவதால் சனியால் ஏற்படும் கெடு பலன்கள் குறையும். சனியின் பார்வை 6ஆம்
வீட்டில் விழுவதால் பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிட்டும். எதிரிகள்
பலவீனமடைவார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.


சனி உங்கள் ராசியையும் பார்ப்பதால் வயிற்றுவலி, பைல்ஸ் வந்து நீங்கும்.
சிலருக்கு முடி உதிரும். தேமல், முகப்பரு வந்து செல்லும். பெரிய நோய்க்கான
அறிகுறிகள் தெரியும். ஆனால் அஞ்சாதீர்கள்.


கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகங்களும், விவாதங்களும் வந்து போகும்.
ஒருவரையருவர் அனுசரித்துப் போவது நல்லது. இளைய சகோதரர் எடுத்தெறிந்து
பேசினாரே! இனி உங்களின் தியாக உணர்வை புரிந்துக் கொள்வார். தாயாரின்
ஆரோக்கியம் பாதிக்கும்.


பூர்வபுண்ய ஸ்தானத்தின் மீது இருந்த சனியின் பார்வை விலகுவதால், குழந்தை
பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் கூடாப்பழக்கம் விலகும். பொறுப்பாக நடந்து
கொள்வர். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாட்டில் வேலைக்
கிடைக்கும்.


சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் தைரிய ஸ்தானதிபதியான சூரியனின்
உத்திரம் நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனிபகவான்
செல்வதால் இக்கால கட்டத்தில் பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர்.
அரசியலில் செல்வாக்கு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.


உங்களின் தனாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திர சாரத்தில் 20.09.2010
முதல் 14.10.2011 வரை சனிபகவான் செல்வதால் புது முயற்சிகள் யாவும்
வெற்றியடையும். திடீர் செல்வாக்கு, குடும்பத்தில் மகிழ்ச்சி என யாவும்
கிட்டும்.


வரும் 10.1.2010 முதல் 8.05.2010 வரை மற்றும் 23.01.2011 முதல் 15.06.2011
வரை உள்ள காலக்கட்டத்தில் சனி பகவான் வக்ரத்தில் செல்வதால் முக்கிய
ஆவணங்களில் கையெத்திடும் போது கவனம் தேவை. கர்பிணிப் பெண்கள் பயணங்களை
தவிர்ப்பது நல்லது.


உங்களின் யோக லாபாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில்
15.10.2011 முதல் 21.12.2011 வரை சனிபகவான் செல்வதால் புது வீடு, மனை,
வாகனம் வாங்குவீர்கள். ஆனால் மூத்த சகோதரர்களுடன் கருத்து மோதல், கடன்
பிரச்சனை, சிறுசிறு விபத்துகள் வரக்கூடும்.


வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் என ஒருபக்கம் தொந்தரவு கொடுத்தாலும்,
மற்றொரு பக்கம் புது வாகனம் வாங்கும் யோகமுண்டு. புதிதாக வீடு கட்டி
குடிபுகுவீர்கள். என்றாலும் புது சொத்துக்கள் வாங்கும் போது பத்திரங்களை
வழக்கறிஞர்கள் மூலம் சரிபார்த்துக் கொள்வது நல்லது.


வங்கிக் கடன் கிடைக்கும். உணவு விஷயத்தில் கண்டிப்பு தேவை. எண்ணெய்
பதார்த்தம், அசைவ உணவுகளை அறவே ஒதுக்கிவிடுங்கள். கீரை, பழ வகைகளை அதிகம்
உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாள்
பிராத்தனையையும் நிறைவேற்றுவீர்கள்.


வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கத்தான் செய்யும். பாக்கிகளை
முடிந்த வரையில் கனிவாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். பங்குதாரர்களும்
உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வர்.


உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில்
தலையிட வேண்டாம். மேலதிகாரியைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். புது
வாய்ப்புகள் வந்தால் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது.


கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களில் சிக்க வேண்டாம். கல்யாண முயற்சிகள்
பலிதமாகும். பெற்றோருடன் கருத்து மோதல்கள் வரும். மாணவ-மாணவிகளே! மறதி,
மந்தம் வந்து நீங்கும். கணிதம், வேதியியல் பாடங்களில் அதிக கவனம்
செலுத்துங்கள். கலைஞர்களே! நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். விமர்சனங்களை
கண்டு கவலைப்படாதீர்கள்.


இந்தச் சனிப்பெயர்ச்சி மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவதுடன் வாழ்க்கையை சிறப்பாக வாழ கற்றுத்தருவதாக அமையும்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

சனி பெயர்சி பலன் Empty Re: சனி பெயர்சி பலன்

Post by மாலதி November 3rd 2011, 21:32

சனி பெயர்சி பலன் 4

கடகம்
சனி பெயர்சி பலன்



கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என்பதை அறிந்த நீங்கள், எப்போதும் அடக்கமாக காணப்படுவீர்கள்.

இதுவரை பாதச்சனியாக அமர்ந்து உங்களை பலவழிகளிலும் அலைக்கழித்த சனி பகவான்
26.09.2009 முதல் 21.12.2011 வரை ராஜயோகம் தரும் வீடான 3ஆம் வீட்டில்
அமர்ந்து, புகழையும், பாராட்டையும் தர உள்ளார்.



வார்த்தையால் வடிக்க முடியாத கஷ்டங்களை எல்லாம் அனுபவித்தீர்களே!
பட்டகாலிலே படும் என்பது போல அடுக்கடுக்காக அதிர்ச்சிகளைச் சந்தித்தீர்களே!
எதிர்பார்த்த வகையில் பணம் வரவில்லையே! சொன்ன சொல்லை நிறைவேற்ற
முடியவில்லையே! என்று பல வகையில் புலம்பித்தவித்தீர்களே! காவல் நிலையம்,
நீதிமன்றமென அலைந்தீர்களே! அந்த தர்ம சங்கடத்திலிருந்து விடுபடுவீர்கள்.



சோகமான முகம் மலரும். அழகு, இளமைக் கூடும். பேச்சில் முதிர்ச்சி தெரியும்.
குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவு நீங்கும். மனைவியுடன் சாதாரணமாகப்
பேசிக் கொண்டிருக்கும் போதே சண்டை மூண்டதே! பலநேரங்களில் மௌன யுத்தமெல்லாம்
நடத்தினீர்களே!



அந்த அவல நிலை இனி மாறும். இருவரும் மனம் விட்டு பேசுவீர்கள். கலகம்
ஏற்படுத்தியவர்களை ஓரங்கட்டுவீர்கள். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும்.
இனி வருங்காலத்திற்காக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சேமிக்கத்
தொடங்குவீர்கள். புது வீட்டில் குடி புகுவீர்கள்.



சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் தன ஸ்தானாதிபதியான சூரியனின்
உத்திரம் நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனிபகவான்
செல்வதால் வி.ஐ.பி.க்கள் அறிமுகமாவர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி
நடக்கும்.



உங்கள் ராசிநாதனான சந்திரனின் அஸ்தம் நட்சத்திர சாரத்தில் 20.09.2010 முதல்
14.10.2011 வரை சனிபகவான் செல்வதால் எதிர்பாராத தன லாபம், வாகன வசதி,
பொருள் வரவு யாவும் கிட்டும்.



உங்களின் யோகாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில் 15.10.2011
முதல் 21.12.2011 வரை சனிபகாவன் செல்வதால் பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை,
சொத்து சேர்க்கை யாவும் உண்டு.



வரும் 10.1.2010 முதல் 8.05.2010 வரை மற்றும் 23.01.2011 முதல் 15.06.2011
வரை உள்ள காலக்கட்டத்தில் சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் வீண் செலவுகள்,
அலைச்சல்கள், கவலைகள் வரக்கூடும்.



பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றங்கள் தெரியும். மகளுக்கு கல்யாண பேச்சு
வார்த்தை கைக்கூடும். குழந்தை பாக்கியம் உண்டாகும். மூத்த சகோதரி பண உதவி
செய்வார். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும்.
வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சொந்தச் செலவில் ஊர் திருவிழாக்களை
நடத்துவீர்கள். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவர். அயல்நாட்டுப்
பயணங்கள் தேடி வரும்.



வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். புது வாடிக்கையாளர்கள்
அறிமுகமாவர். வேலையாட்கள் அடிக்கடி விடுப்பு எடுத்து திண்டாட வைத்தார்களே!
அந்த நிலை மாறும். பகைவனைப் போல் பேசிய பங்குதாரர்கள் பணிந்து வருவர்.
அரசால் இருந்த கெடுபிடிகள் விலகும்.



உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டும் படி நடந்துக் கொள்வீர்கள். சக
ஊழியர்களும் உங்களை புரிந்து கொள்வார்கள். உத்தியோகம் தொடர்பான வழக்கில்
வெற்றி கிடைக்கும்.



கன்னிப் பெண்களே! எதிலும் திட்டவட்டமான முடிவெடுப்பீர்கள். கசந்த காதல்
இனிக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாணவ, மாணவிகளே! சோம்பல்,
விரக்தி நீங்கும். படிப்பில் ஆர்வம் பிறக்கும். போட்டிகளில் பரிசு,
பாராட்டு கிடைக்கும்.



கலைஞர்களே! மனதளவில் பாரட்டி வந்த மூத்த கலைஞர் இனி பொருளளவில் உங்களுக்கு கொடுத்து உதவ முன் வருவார்.



இந்த சனி மாற்றம் கடைகோடியில் தவித்துக் கொண்டிருந்த உங்களை சில கோடிக்கு அதிபதியாக்கும்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

சனி பெயர்சி பலன் Empty Re: சனி பெயர்சி பலன்

Post by மாலதி November 3rd 2011, 21:33

சனி பெயர்சி பலன் 5

சிம்மம்
சனி பெயர்சி பலன்



பொல்லாதவர்களைக் கண்டால் பொங்கி எழும் நீங்கள் கண்ணியமானவர்களைக் கண்டால் கை எடுத்துக் கும்பிடுவீர்கள்.

இதுவரை ஜென்மச்சனியாய் இருந்து திக்கு திசையறியாது சிதறடித்தாரே! ஸ்கேன்,
எக்ஸ்ரே, மருந்து, மாத்திரை என்று மருத்துவமனைக்கே பாதி செலவு செய்தீர்களே!
இனி நோய் விலகும்.



யார் நல்லவர்? யார் கெட்டவர் என்பதை புரிந்து கொள்ளாமல் எல்லோரிடமும்
எல்லாமும் பேசி சிக்கிக் கொண்டீர்களே! குடும்பம் இருந்தும் தனிமரமாய்
தவித்தீர்களே! இப்பொழுது 26.09.2009 முதல் 21.12.2011 வரை உங்கள் ராசியை
விட்டு விலகி பாதச்சனியாக அமர்ந்து உங்களை ஆளப் போகிறார். மனோ பலம்
அதிகரிக்கும். உணர்ச்சிவசப்படாமல், அறிவுப்பூர்வமாக யோசிப்பீர்கள்.



உங்களை எதிர்த்துப் பேசியவர்கள், வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். சோகமே
வடிவாய் இருந்த உங்கள் மனைவி முகத்தில் இனி லஷ்மி குடிகொள்வாள்.
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். என்றாலும் சனி பகவான் இப்போது
2ஆம் வீட்டிற்கு வருவதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், கருத்து
மோதல்கள் வரும்.



வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். கண்வலி, பல்வலி வந்து போகும். காசோலை
தருவதற்கு முன் பணம் இருக்கிறதா? என்று பார்த்து கொள்ளுங்கள். பிள்ளைகளின்
பிடிவாதம் தளரும். எந்த வேலையிலும் நிலைக்காமல் இருந்த உங்கள் மகனுக்கு
நிரந்தர வேலை கிடைக்கும்.



சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் ராசிநாதனான சூரியனின் உத்திரம்
நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனிபகவான் செல்வதால்
இக்கால கட்டத்தில் தன்னம்பிக்கை பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வழக்குகள்
சாதகமாகும்.



உங்களின் விரையஸ்தானாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திர சாரத்தில்
20.09.2010 முதல் 14.10.2011 வரை சனிபகவான் செல்வதால் நீண்ட நாட்களாக போக
நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குடும்பத்தில் நல்லது
நடக்கும்.



உங்களின் சுகபாக்யாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில்
15.10.2011 முதல் 21.12.2011 வரை சனிபகாவன் செல்வதால் புதிய திட்டங்கள்
நிறைவேறும். பணம், பதவிகள் தேடி வரும்.



வரும் 10.1.2010 முதல் 8.05.2010 வரை மற்றும் 23.01.2011 முதல் 15.06.2011
வரை உள்ள கால கட்டத்தில் சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் வீண் சந்தேகம்,
ஏமாற்றங்கள், மனக் குழப்பம் வரக்கூடும்.



உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பூர்வீகச் சொத்தை அதிக
செலவு செய்துதக்க வைத்துக் கொள்ள நேரிடும். அக்கம்-பக்கம் வீட்டாருடன்
அளவாகப் பழகுங்கள். தங்க நகைகளை இரவல் தர வேண்டாம். வழக்குகளில் வழக்கறிஞரை
மாற்ற வேண்டி வரும். வாகனத்தில் கவனம் தேவை. வாயுக்கோளாறால் நெஞ்சு
வலிக்கும். பெரிய நோய் என்று பயந்து விடாதீர்கள்.



வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்களை இனி அனுபவ அறிவால் சரிசெய்வீர்கள்.
வாடிக்கையாளர்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட வேலையாட்களை பணியிலிருந்து
நீக்குவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு
அதிகரிக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.



உத்யோகத்தில் நிரந்திரமில்லாமல் தவித்தீர்களே! இனி நல்ல வேலை கிடைக்கும்.
உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். சக ஊழியர்கள்
ஆதரிப்பார்கள். கேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும்.



கன்னிப் பெண்களே! தடைப்பட்ட கல்வியை தொடர்வீர்கள். தோலில் நமைச்சல்,
பசியின்மை நீங்கும். பெற்றோருடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். மாணவ,
மாணவிகளே! சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். இனி லட்சியத்தோடு
படிப்பீர்கள். விடைகளை எழுதி பாருங்கள். கலைஞர்களே! திறமைகளை வெளிப்படுத்த
நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும்.



இந்த சனிப் பெயர்ச்சி ஒதுங்கியிருந்த உங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதுடன் உயர்ந்த அந்தஸ்தை பெற்றுத் தருவதாகவும் அமையும்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

சனி பெயர்சி பலன் Empty Re: சனி பெயர்சி பலன்

Post by மாலதி November 3rd 2011, 21:33

சனி பெயர்சி பலன் 6

கன்னி
சனி பெயர்சி பலன்


சமகேசனின் படைப்பில் யாரும் மட்டமானவர்கள் இல்லை என்பதை அறிந்த நீங்கள் எல்லோரையும் மதிப்பீர்கள்.


இதுவரை உங்கள் ராசிக்கு 12இல் அமர்ந்து கொண்டு பணத்தை வரவிடாமல் தடுத்த சனி
பகவான் இப்போது 26.09.2009 முதல் 21.12.2011 முடிய உள்ள காலத்தில் உங்கள்
ராசிக்குள்ளேயே ஜென்மச் சனியாக அமர்ந்து பலன் தரப்போகிறார்.



அடுக்கடுக்காகப் பிரச்சனைகளையும், அவமானங்களையும் சந்தித்தீர்களே! எந்த ஒரு
வேலையையும் எளிதில் முடிக்க விடாமல் உங்களை கலங்கச் செய்தாரே!
குடும்பத்திலும் அடுக்கடுக்கான சிக்கல்களையும், தொந்தரவுகளையும் கொடுத்து
வந்தாரே! அதற்கெல்லாம் அவரே விமோசனம் அளிக்கப் போகிறார்.



இந்த சனிப்பெயர்ச்சியால் கூச்சல், குழப்பங்கள் விலகும். கணவன்-மனைவிக்குள்
இணக்கமான சூழ்நிலை உருவாகும். தாம்பத்யம் இனிக்கும். அவசரத்துக்கு
வட்டிக்கு வாங்கி விட்டு கட்ட முடியாமல் திணறினீர்களே! இனி கொஞ்சம்
கொஞ்சமாக அதனைத் தந்து முடிப்பீர்கள். எதிர்பாராத பண வரவும் உண்டு. ஆனால்
சேமித்து வைக்க முடியாது.



ஜென்மச்சனி என்பதால் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
மருத்துவக் காப்பீடு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வறுத்த, பொறித்த
உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது. மனைவி மற்றும் அவர்வழி உறவினர்களால்
கொஞ்சம் அலைச்சலும், செலவும் இருக்கும்.



சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் விரையாதிபதியான சூரியனின்
உத்திரம் நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனிபகவான்
செல்வதால் இக்கால கட்டத்தில் கொஞ்சம் செலவும், அலைச்சலும் இருக்கும்.
உத்திரம் நட்சத்திக்காரர்களின் உடல் நிலையும் பாதிக்கும். குடும்பத்திலும்
பிரச்சனைகள் வந்து நீங்கும்.



உங்களின் லாபாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திர சாரத்தில் 20.09.2010
முதல் 14.10.2011 வரை சனிபகவான் செல்வதால் திடீர் திருப்பங்களால் வாழ்வில்
முன்னேற்றம் உண்டாகும். ஆனால் அஸ்தம் நட்சத்திரக் காரர்களுக்கு விபத்துகள்,
இழப்புகள், சளித்தொந்தரவு, மூட்டுவலி வந்து செல்லும்.



உங்களின் திருதிய,அட்டமாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில்
15.10.2011 முதல் 21.12.2011 வரை சனிபகவான் செல்வதால் நெருங்கிய உறவினர்,
நண்பர்களின் இழப்பும், சொத்துப் பிரச்சனையும், சகோதரர்களுக்கிடையே மன
வருத்தமும் வந்து நீங்கும்.



வரும் 10.01.2010 முதல் 08.05.2010 வரை மற்றும் 23.01.2011 முதல்
15.06.2011 வரை வக்ரத்தில் செல்வதால் வரவேண்டிய பணம் கைக்கு வரும். தூரத்து
உறவினர்கள் உதவுவர். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.



கல்யாணம் தடைபட்டுக் கொண்டிருந்த மகனுக்கு, இனி திருமணம் கைகூடி வரும். ஊரே
மெச்சும்படி திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். உடன் பிறந்தோரிடம்
விட்டுக் கொடுத்து போவது நல்லது. வாகனத்தை மாற்றுவீர்கள். என்றாலும் சின்ன
சின்ன விபத்துகள் வரக்கூடும்.



வியாபாரத்தில் வெகுளித்தனமாக இருந்து பல விதத்தில் நட்டப்பட்டீர்களே! இனி
நுணுக்கங்களை கற்று லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் அவ்வப்போது உங்களை
ஏமாற்ற முயற்சி செய்வர். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். பங்குதாரர்களுடன்
இருந்து வந்த பிணக்குகள் நீங்கும்.



உத்தியோகத்தில் உங்களை அலைக்கழித்த மேலதிகாரி இனி வலிய வந்து பேசுவார்.
உங்களின் கடின உழைப்புக்காக பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு.
குறைகூறிக் கொண்டிருந்த சக ஊழியர்களும் உங்களுக்காக பரிந்து பேசுவர்.
அலுவலக விஷயங்களை பிறரிடம் வெளியிட வேண்டாம்.



கன்னிப் பெண்களே! காதல் விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள். பெற்றோரின்
அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். கல்யாணம் கூடி வரும். மாணவ-மாணவியர்களே!
உயர் கல்வியில் வெற்றியுண்டு. கலைஞர்களே! பெரிய வாய்ப்புக்காக
காத்திருக்காமல் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.



இந்தச் சனிப் பெயர்ச்சி தோய்ந்து துவண்டிருந்த உங்களை உற்சாகப்படுத்துவதாக அமையும்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

சனி பெயர்சி பலன் Empty Re: சனி பெயர்சி பலன்

Post by மாலதி November 3rd 2011, 21:33

சனி பெயர்சி பலன் 7

துலாம்
சனி பெயர்சி பலன்



நினைத்ததை உடனே சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள நீங்கள் அதற்கேற்ற புத்தி சாதுர்யம் உடையவர்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் நின்று ஓரளவு நல்ல பலன்களை தந்த
சனிபகவான் 26.09.2009 முதல் 21.12.2011 முடிய விரையச் சனியாகவும், ஏழரைச்
சனியின் தொடக்கமாகவும் இருந்து பலன் தருவார்.


உங்களின் பிரபலயோகாதிபதியான சனிபகவான் பாதக ஸ்தானமான 11ஆம் வீட்டை விட்டு
விலகி வருவது நல்லதுதான். 12ஆம் வீடான விரைய வீட்டில் இப்போது நுழைந்தாலும்
அது நட்பு வீடாக அமைவதால் உங்களுக்கு நல்லதையே செய்வார்.


ஏழரைச் சனி தொடங்குகிறதே! என்று கலங்க வேண்டாம். இதுவரை லாப வீட்டில்
நின்று கொண்டு உங்கள் ராசியைப் பார்த்த சனி, உங்களிடமிருந்த மன
தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் எடுத்த எடுப்பிலேயே பறித்துக் கொண்டாரே!
பிள்ளைகள் ஆசைப்பட்டுக் கேட்டதை நம்மால் வாங்கிக் கொடுக்க முடியவில்லையே
என்று மனசுக்குள்ளேயே அழுது கொண்டிருந்தீர்களே!


இப்பொழுது விரய வீட்டில் வந்தமரும் சனி நிச்சயம் உங்களுக்கு யோக பலனையே
தருவார். இதுவரை உங்கள் ராசி மீது வீழ்ந்த சனியின் பார்வை இனி விலகுவதால்
உங்களிடமிருந்த பய உணர்வு, தடுமாற்றம் எல்லாம் நீங்கும்.


தண்ணீரும் தாமரை இலையுமாக இருந்த கணவன்-மனைவிக்குள் இனி ஒற்றுமை பலப்படும்.
சனிபகவான் 6ஆம் வீட்டை பார்ப்பதால் வாங்கிய கடனை பைசல் செய்யும் அளவிற்கு
பணம் வரும்.


சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் பாதகாதிபதியான சூரியனின்
உத்திரம் நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனி பகவான்
செல்வதால் இக்கால கட்டத்தில் தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். சிறுசிறு
விபத்துகள் வந்து நீங்கும். எதிர்ப்புகள் அதிகரிக்கும். யாருக்கும் ஜாமீன்
கையெழுத்திட வேண்டாம்.


உங்களின் ஜீவனாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திர சாரத்தில் 20.09.2010
முதல் 14.10.2011 வரை சனிபகவான் செல்வதால் வேலை கிடைக்கும். பணவரவு
அதிகரிக்கும். திருமணத்தடை நீங்கும்.


உங்களின் தன, சப்தமாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில்
15.10.2011 முதல் 21.12.2011 வரை சனி பகாவன் செல்வதால் சொத்துச்
சேர்க்கையுண்டு. சகோதரர் உதவுவர்.


வரும் 10.1.2010 முதல் 8.05.2010 வரை வக்ரத்தில் செல்வதால் கெடுபலன்கள்
குறைந்து நல்லது நடக்கும். மீண்டும் 23.01.2011 முதல் 15.06.2011 வரை
வக்ரத்தில் செல்வதால் உத்யோகத்தில் சின்ன சின்ன
பிரச்சனைகள்,வீண்பழி,உறவினர் இழப்பு வரக்கூடும்.


பிள்ளைகளின் வருங்காலம் குறித்து வருந்தினீர்களே! இனி அவர்களின்
வாழ்விற்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில்
வேலை கிடைப்பதுடன் திருமணமும் கூடி வரும். சனி 9&ம் வீட்டைபார்ப்பதால்
அப்பாவுக்கு மருத்துவச் செலவுகள் உண்டு. உறவினர்கள்& பொது
நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது யாரைப் பற்றியும் விமர்சித்துப் பேச
வேண்டாம்.


வியாபாரத்தில் அவசரபட்டு பெரிய முதலீடுகளை போட்டு அவதியில் சிக்கித்
தவித்தீர்களே! இனி உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். பழைய வாடிக்கையாளர்
தேடி வருவார்கள். எலக்ட்ரானிக்ஸ், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி&இறக்குமதி
வகைகளால் ஆதாயமுண்டு.


உத்யோகத்தில் கடினமாக உழைத்தும் ஓர் அங்கீகாரமில்லாமல் போனதே! இனி பதவி
உயரும். வேலைபளு அதிகரிக்கத்தான் செய்யும். மற்றவர்களின் உள்விவகாரங்களில்
அத்துமீறி நுழைய வேண்டாம்.


கன்னிப்பெண்களே! காதலைத் தள்ளிப் போடுங்கள். புதிய நண்பர்களிடம்
எச்சரிக்கையாகப் பழகுங்கள். கனவுத்தொல்லை,தூக்கமின்மை வந்துபோகும்.
மாணவ&மாணவியர்களே! உயர்கல்வியில் அலட்சியம் வேண்டாம். விளையாடும் போது
சிறு சிறு காயங்கள் ஏற்படும். கலைஞர்களே! நழுவிப்போன வாய்ப்புகள் தேடி
வரும்.


இந்த சனிப்பெயர்ச்சி பழைய சிக்கல்களிலிருந்து விடுபட வைப்பதாகவும், அலைச்சலுடன் ஆதாயத்தை தருவதாக அமையும்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

சனி பெயர்சி பலன் Empty Re: சனி பெயர்சி பலன்

Post by மாலதி November 3rd 2011, 21:34

சனி பெயர்சி பலன் 8

விருச்சிகம்
சனி பெயர்சி பலன்


சமனிதநேயம் அதிகமுள்ள நீங்கள் பாமரனாக இருந்தாலும் மதிப்பீர்கள். இயன்றதைச் செய்யும் நல்ல உள்ளம் படைத்தவர்கள்.

இதுவரை 10ஆம் வீட்டில் நின்ற சனிபகவான் 26.09.2009 முதல் 21.12.2011 முடிய
லாப வீட்டான 11ஆம் வீட்டில் அமர்ந்து உங்களை ஆளப்போகிறார். தொழில்
ஸ்தானத்தில் இதுவரை இருந்து கொண்டு உங்களை எந்த வேலையையும் மனநிறைவுடன்
முடிக்க விடாமல் தடுத்தாரே! கடின உழைப்புக்கேற்ற பாராட்டு பதவியுயர்வு
எல்லாம் கிடைக்காமல் போனதே! அந்த நிலையெல்லாம் மாறும்.


குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் பணம் தண்ணீராய் செலவானதே! பல
பிரச்சனைகளையும் நினைத்து அவ்வப்போது சோர்ந்து போனீர்களே! இனி குடும்ப
வருமானத்தை உயர்த்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுவீர்கள். அம்மாவுக்கு
இருந்த நோயெல்லாம் விலகும்.


நெடுநாள் கனவான வீடு கட்டும் பணி முழுமையடையும். மனைவியுடன் வாக்கு
வாதங்கள், வீண் சந்தேகம் இருந்ததே! இனி அன்யோன்யம் அதிகரிக்கும். பல
காரியங்கள் முதல் முயற்சியிலேயே முடியும். சொத்து வாங்குவீர்கள். உங்கள்
பூர்வபுண்யஸ்தானத்தை சனி பார்ப்பதால் படிப்பு, உத்யோகத்தின் பொருட்டு
பிள்ளைகளை பிரிய வேண்டி வரும். அவர்களின் நடவடிக்கைகளின் கண்காணியுங்கள்.


சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் தசமஸ்தானாதிபதியான சூரியனின்
உத்திரம் நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனிபகவான்
செல்வதால் இக்கால கட்டத்தில் உங்களின் நிர்வாகத்திறன் கூடும். இழுபறியாக
இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.


உங்களின் பாக்யாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திர சாரத்தில் 20.09.2010
முதல் 14.10.2011 வரை சனிபகவான் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. புண்ணிய
ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பொன் பொருள் சேரும்.


உங்கள் ராசிநாதான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில் 15.10.2011
முதல் 21.12.2011 வரை சனிபகாவன் செல்வதால் அழகு அறிவு கூடும். அந்தஸ்து
பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.


வரும் 10.01.2010 முதல் 8.05.2010 வரை மற்றும் 23.01.2011 முதல் 15.06.2011
வரை வக்ரத்தில் செல்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி அதிகம் உழைக்க வேண்டி
வரும். மறைமுக பகை, தந்தையுடன் கருத்துமோதல், வீண்செலவு வந்து நீங்கும்.


உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சகோதரியின் திருமணத்தை
கோலாகலமாக நடத்தி முடிப்பீர்கள். சமூக சேவையில் உங்களை ஈடுபடுத்திக்
கொள்வீர்கள். பூர்வீகச் சொத்து விஷயங்களில் பிரச்சனைகள் வரக்கூடும்.
முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது நன்கு படித்து பார்த்து
கையெழுத்திடுங்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உணவு விஷயத்தில் கூடுதல்
கவனம் செலுத்துங்கள். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள்.


வியாபாரத்தில் அறிவுரை என்ற பெயரில் சிலர் தவறான பாதைக்கு அழைத்து
சிக்கலில் சிக்க வைத்தார்களே! அவர்களையெல்லாம் இனி ஒதுக்குவீர்கள். அனுபவ
அறிவால் சாதிப்பீர்கள். தொல்லை தந்த பணியாளர்களை மாற்றுவீர்கள்.
எலக்ட்ரிக்கல், பெட்ரோகெமிக்கல், புரோக்கரேஜ் வகைகளால் லாபமுண்டு.
கூட்டுத்தொழிலில் தொந்தரவு கொடுத்த பங்குதாரர்களை மாற்றிவிட்டு புதியவர்களை
சேர்ப்பீர்கள்.


உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வந்ததே!
என்றாலும் பாராட்டாமல் குறை சொல்ல தான் சிலர் இருந்தார்களே! அந்த
நிலையெல்லாம் மாறும். உங்கள் திறமையை அறிந்துகொண்ட மேலதிகாரி
பதவியுயர்வு,சம்பள உயர்வு தருவார். இழந்த சலுகைகளை கேட்டுப் பெறுவீர்கள்.


கன்னிப்பெண்களே! கசந்த காதல் கைகூடும். தற்காலிக பணியிலிருந்து
நிரந்தமாக்கப்படுவீர்கள். கல்யாணம் நடக்கும். மாணவ, மாணவிகளே! ஆசிரியர்
பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. கலைஞர்களே!
மூத்த கலைஞர்கள் உங்களிடம் நட்புறவாடுவார்கள். உங்கள் படைப்புகள் பெரிதும்
பேசப்படும்.


இந்தச் சனிப் பெயர்ச்சி எதிர்நீச்சலடித்த உங்களை சீரான பாதைக்கு அழைத்து செல்வதுடன் தலைநிமிரச் செய்வதாக அமையும்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

சனி பெயர்சி பலன் Empty Re: சனி பெயர்சி பலன்

Post by மாலதி November 3rd 2011, 21:35

சனி பெயர்சி பலன் 9

தனுசு
சனி பெயர்சி பலன்


தன்னை நாடி
வருவோருக்கெல்லாம் தயங்காமல் நல்லதே செய்யும் மனமுடைய நீங்கள், விருப்பு
வெறுப்பின்றி அனைவரிடமும் சமமாக பழகும் குணமுடையவர்கள்.

இதுவரை ராசிக்கு 9வது வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களின் சிந்தனைத்
திறனையும், செயல் திறனையையும் மழுங்கடித்த சனி பகவான் 26.09.2009 முதல்
21.12.2011 வரை உள்ள காலகட்டங்களில் 10வது வீட்டுக்குள் அமர்ந்து
நற்பலன்களை தரப்போகிறார்.


கையில் கிடைத்தது வாய்க்குள் போவதற்குள் தடைபட்டுப் போனதே!
எதற்கெடுத்தாலும் குடும்பத்திலுள்ளவர்கள் உங்களைதான் குறைகூறினார்கள். சில
சமயங்களில் நமக்கு சரியாக வாழத் தெரியவில்லையோ என்றெல்லாம் யோசித்தீர்கள்.


இப்போது ராசிக்கு 10இல் வந்திருக்கும் சனிபகவான் இதற்கெல்லாம் முடிவு
கட்டுவார். குடும்பத்தாருடன் மனம்விட்டுப் பேசி குறை, நிறைகளை அலசி
ஆராய்வீர்கள். அமைதி திரும்பும். எதிரும் புதிருமாக இருந்த கணவன்-மனைவி
ஒன்று சேருவீர்கள்.


தந்தையாருடன் கருத்து மோதல்கள்,அவருக்கு மருத்துவச் செலவு என வந்து போனதே!
இனி அவரின் உடல்நிலை சீராகும். பிள்ளைகளின் கூடாப்பழக்கங்கள் விலகும்.
அவர்களின் வருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். மகளுக்கு ஏற்ற நல்ல
மணமகன் அமைவார். திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள்.


சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் பாக்யாதிபதியான சூரியனின்
உத்திரம் நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனிபகவான்
செல்வதால் எதையும் சாதிக்கும் வல்லமை கிட்டும். வீடு, வாகனம்
வாங்குவீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. தந்தையார் மதிப்பார்.


உங்களின் அட்டமாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திர சாரத்தில் 20.09.2010
முதல் 14.10.2011 வரை சனிபகவான் செல்வதால் திடீர் பயணங்கள், செலவுகள்,
அலைச்சல் வந்து நீங்கும்.


உங்களின் பூர்வபுண்ய, விரையாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திர
சாரத்தில் 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனிபகாவன் செல்வதால்
பிள்ளைகளுக்கு திருமணம் கூடி வரும். சொத்துச் சேரும்.


வரும் 10.01.2010 முதல் 08.05.2010 வரை வக்ரத்தில் செல்வதால் பொருள்
இழப்பு,வழக்குகள் வந்து நீங்கும். மீண்டும் 23.01.2011 முதல் 15.06.2011
வரை வக்ரத்தில் செல்வதால் எதிர்பாராத வெற்றி,பணவரவு, அயல்நாட்டில்
இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும்.


சனிபகவான் 4ஆம் வீட்டை பார்ப்பதால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும். தாய்வழி
உறவினகளுடன் உரசல் வந்து நீங்கும். தாய்வழி சொத்துக்களைக் கவனமாகக்
கையாளுங்கள். சகோதர வகையில் உதவி கிடைக்கும். விலையுயர்ந்த ஆடை ஆபரணங்கள்
வாங்குவீர்கள்.


உங்களின் புகழும், கௌரவமும் ஒரு படி உயரும். அதிகாரப் பதவியில்
இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சனி
12&ம் வீட்டைப் பார்ப்பதால் தூக்கம் குறையும். ஆனால் சாதுக்கள்,
சன்னியாசிகளின் தொடர்பு கிடைக்கும். 7ஆம் வீட்டைப் பார்ப்பதால் மனைவி
உடல்நிலை பாதிக்கும்.


வியாபாரத்தில் போராட்டங்கள் நீங்கி இனி கணிசமான லாபம் உண்டு.
போட்டியாளர்கள் திகைக்கும் அளவிற்கு புது யுக்திகளை கையாளுவீர்கள்.
வேலையாட்களை விட்டுப் பிடியுங்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவர்.
கமிசன், கன்சல்டன்ஸி, உணவு வகைகளால் ஆதாயமடைவீர்கள்.


சனி 10ஆம் வீட்டில் நிற்பதால் உத்தியோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு
என்று இருந்தாலும் கூட சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும். சக
ஊழியர்களிடம் கவனமாக பழகுங்கள். அதிகாரியின் உதவியால் அலுவலக முக்கியப்
பொறுப்புகள் உங்களை தேடி வரும்.


கன்னிப் பெண்களே! கூடாப் பழக்கவழக்கங்களில் இருந்து விடுபடுவீர்கள். தவறிய
பாடத்தில் தேறி புது வேலையில் அமருவீர்கள். சர்ப்பதோஷங்கள் நீங்கி திருமணம்
முடியும்.


மாணவ, மாணவிகளே! சாதித்துக் காட்டவேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும்
போதாது அதற்கான உழைப்பும் வேண்டும். கலைஞர்களே! வீண் பழிச்சொல்லுக்கு
ஆளானீர்களே! அந்த நிலை மாறும். புகழடைவீர்கள்.


இந்தச் சனிப் பெயர்ச்சி மறைந்து கிடந்த திறமையை வெளிக்கொண்டு வருவதுடன், சமூகத்தில் நல்ல அந்தஸ்தையும் பெற்றுத்தருவதாக அமையும்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

சனி பெயர்சி பலன் Empty Re: சனி பெயர்சி பலன்

Post by மாலதி November 3rd 2011, 21:35

சனி பெயர்சி பலன் 10

மகரம்
சனி பெயர்சி பலன்


எந்தச் செயலையும் திறம்பட செய்யும் நீங்கள், மற்றவர்களால் செய்ய முடியாத வேலையையும் துணிச்சலுடன் சாதித்துக் காட்டுவதில் வல்லவர்கள்.

இதுவரை அட்டமத்தில் நின்று கொண்டு உங்களை அலற வைத்த, அழ வைத்த சனிபகவான்
26.09.2009 முதல் 21.12.2011 முடிய 9வது வீட்டில் அமர்ந்து நல்லதைச்
செய்வார்.


தண்ணீருக்குள் அழுகின்ற மீன் தரையிலிருப்பவர்களுக்கு தெரியாததைப் போல
உள்ளுக்குள் புழுங்கி தவித்த உங்களை உணராமல் சுற்றியிருப்பவர்களெல்லாம்
பலவாறு தொந்தரவு கொடுத்தார்களே! உங்களைப் பார்த்தாலே எழுந்து நின்று கை
கட்டி மரியாதை செய்தவர்களெல்லாம் உங்கள் மீது கை ஓங்குமளவுக்குப் போனதே!
அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுப்பீர்கள்.


பெரிய ஏமாற்றங்கள், பேரிழப்புகளில் இருந்து மீள்வீர்கள். கடன் பிரச்சனைக்கு
முற்றுப்புள்ளி வைப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் நிலவி வந்த கருத்து
வேறுபாடுகள் எல்லாம் நீங்கி அன்யோன்யம் பிறக்கும். பிரிந்தவர்கள் ஒன்று
சேர்வீர்கள்.


வீடு, மனை வாங்கவேண்டுமென எவ்வளவு காலமாக கனவு கண்டீர்களே! இப்பொழுது நிறைவேறும். இனி திட்டமிட்டு எதையும் செய்வீர்கள்.


சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் அட்டமாதிபதியான சூரியனின்
உத்திரம் நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனிபகவான்
செல்வதால் இக்கால கட்டத்தில் எதிலும் வெற்றி உண்டு. முடங்கிக் கிடந்த
வேலைகள் முழுமையடையும். வழக்கு சாதகமாக முடியும். வேற்று மதத்தினர்,
நாட்டினர் உதவுவர். திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள்.


உங்களின் சப்தமாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திர சாரத்தில் 20.09.2010
முதல் 14.10.2011 வரை சனிபகவான் செல்வதால் வீடு, மனை வாங்குவீர்கள்.
வாகனம் வந்து சேரும். வீடு சுப நிகழ்ச்சிகளால் களைக்கட்டும். மனைவிக்கு
பிடித்தமான உயர்ரக ரத்தினங்கள், ஆடைகள் வாங்கித் தருவீர்கள்.


உங்களின் சுக, லாபாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் சாரத்தில்
15.10.2011 முதல் 21.12.2011 வரை சனி பகவான் செல்வதால் பெரிய பதவிகள் தேடி
வரும். புது வீட்டில் குடியேறுவீர்கள்.


வரும் 10.1.2010 முதல் 8.05.2010 வரை மற்றும் 23.01.2011 முதல் 15.06.2011
வரை வக்ரத்தில் செல்வதால் அக்காலகட்டத்தில் சிறுசிறு விபத்துகள்,
மனஉளைச்சல்கள், மனைவி வழியில் செலவினங்களும், உடல் நலத் தொந்தரவுகளும்
வந்து செல்லும்.


பாதைத் தவறிச் சென்ற பிள்ளைகள் இனி உங்கள் ஆலோசனையை ஏற்று நல்வழிக்கு
திரும்புவார்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தள்ளிப்
போய் கொண்டிருந்த திருமணமும் நல்ல இடத்தில் முடியும். உடன்பிறந்தவர்கள்
உங்களின் உண்மையான பாசத்தை புரிந்து கொள்வர்.


வியாபாரத்தில் தொடர் தோல்விகளையும், இழப்புகளைச் சந்தித்து ஒரு குறுகிய
வட்டத்திற்குள் அடைபட்டீர்களே! இனி தொலைநோக்குச் சிந்தனையால் லாபம் கூடும்.
உணவு, மருந்து, ஸ்டேஸ்னரி வகைகளால் ஆதாயம் உண்டு. இனி அனுபவமிகுந்த நல்ல
வேலையாட்கள் கிடைப்பார்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால்
கடையை கொஞ்சம் அழகுபடுத்துவீர்கள்.


உத்தியோகத்தில் அற்ப சம்பளத்திற்காக அடிமைப்போல் அதிக பணிகளை செய்து வந்தீர்களே! இந்த நிலையெல்லாம் மாறும். உங்கள் தகுதி உயரும்.


கன்னிப்பெண்களே! தள்ளிப் போன கல்யாணம் கூடி வரும். தடைபட்ட கல்வியில்
வெற்றியுண்டு. மாணவ, மாணவிகளே! படிப்பில் ஆர்வம் பிறக்கும். கெட்ட
நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். கலைஞர்களே! நழுவிப்போன வாய்ப்புகள்
தேடி வரும். பிரபலமாவீர்கள்.


இந்தச் சனிப் பெயர்ச்சி அஸ்திவாரமாய் அழுந்திக் கிடந்த உங்களை கோபுரமாய் மிளிர வைப்பதாக அமையும்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

சனி பெயர்சி பலன் Empty Re: சனி பெயர்சி பலன்

Post by மாலதி November 3rd 2011, 21:35

சனி பெயர்சி பலன் 11

கும்பம்
சனி பெயர்சி பலன்


எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்படும் குணமுடைய நீங்கள் மற்றவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதில் தயங்கமாட்டீர்கள்.

இதுவரை உங்களின் ராசிக்கு 7வது வீட்டில் இருந்து கொண்டு அடுக்கடுக்காக
தோல்விகளையும், நட்டங்களையும், தனிமையையும் தந்த சனிபகவான் 26.09.2009
முதல் 21.12.2011 முடிய உள்ள காலகட்டங்களில் அட்டமத்துச் சனியாக இருந்து
செயல்படப் போகிறார்.


அட்டமத்துச் சனி ஆரம்பமாகிறதே! இனி தினந்தோறும் அவஸ்தை தான்.
அகப்பட்டவனுக்கு அட்டமத்துச் சனி என்பார்களே! இனி வீண் பழி எல்லாம் வருமே
என்றெல்லாம் கலங்காதீர்கள். உங்கள் ராசிநாதனான சனிபகவான் நட்பு கிரகமான
புதனின் வீட்டில் அமர்வதாலும் குரு பார்வையை அவ்வப்போது பெற இருப்பதாலும்
நல்லதே நடக்கும்.


இதுவரை 7இல் நின்ற சனி எந்தச் செயலையும் முழுமையாக முடிக்க முடியாமல்
தடுத்தார். திறமையிருந்தும் தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளப்பட்டீர்களே!
எவ்வளவோ சிக்கனமாக இருந்தும் எதுவும் சேமிக்க முடியவில்லையே! இனி அந்த நிலை
மாறும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பனிப்போர் விலகும். இனி புரிந்து
நடந்துக் கொள்வீர்கள்.


பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கி இருந்ததை தந்து முடிப்பீர்கள். அநாவசிய, ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கப் பாருங்கள்.


சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் சப்தமாதிபதியான சூரியனின்
உத்திரம் நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனிபகவான்
செல்வதால் எதிர்ப்புகள் நீங்கும். வி.ஐ.பி.க்களின் நட்பு கிடைக்கும்.
மனைவிவழி உறவினருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும்.


உங்களின் சஷ்டமாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திர சாரத்தில் 20.09.2010
முதல் 14.10.2011 வரை சனிபகவான் செல்வதால் வயிற்றுவலி,சைனஸ் தொந்தரவு
மற்றும் கடன் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.


உங்களின் திருதிய&ஜீவனாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திர
சாரத்தில் 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனிபகாவன் செல்வதால் தைரியமாக
சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.


வரும் 10.1.2010 முதல் 8.05.2010 வரை வக்ரத்தில் செல்வதால் தந்தையாருடன்
கருத்து மோதல்கள் வரும். செலவுகள் அதிகரிக்கும். மீண்டும் 23.01.2011 முதல்
15.06.2011 வரை வக்ரத்தில் செல்வதால் வழக்கில் வெற்றி,திடீர் பணவரவு
உண்டு.


பிள்ளைகளின் நடவடிக்கையில் நல்ல மாற்றம் உண்டாகும். இனி பொறுப்பாக
நடந்துகொள்வார்கள். மகளுக்கு நல்ல மணமகன் அமைவார். லோன் மூலம் சொந்த வீடு,
புது வண்டி வாங்குவீர்கள். உங்களின் வாக்கு ஸ்தானத்தை சனி பார்ப்பதால்
மற்றவர்களைப் பற்றிய விமர்சனம் வேண்டாம்.


வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். நண்பர்கள், உறவினர்களில் சிலர் பணம் கேட்டு
நச்சரிப்பார்கள். வழக்கு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை வழக்கறிஞரின்
ஆலோசனையின்றி முடிவெடுக்காதீர்கள்.


வியாபாரத்தில் பணத்தட்டுபாட்டால் விரிவுபடுத்த முடியாமல் தடுமாறினீர்களே!
இனி இந்த நிலைமாறும். பண உதவி கிடைக்கும். புது ஒப்பந்தங்கள்
கையெழுத்தாகும். உணவு, நீசப் பொருட்களால் ஆதாயம் உண்டு.


உத்யோகத்தில் உங்களை விட வயதில்,தகுதியில் குறைவானவர்களுக்கெல்லாம் பதவி
உயர்வு கிடைத்ததே! இனி பதவி , சம்பள உயர்வு உங்களைத் தேடி வரும்.


கன்னிப்பெண்களே! உற்சாகம் பிறக்கும். உணவில் காய், கீரைகளை அதிகம்
சேர்த்துக் கொள்ளுங்கள். கல்யாணம் சிறப்பாக நடந்து முடியும். மாணவ,
மாணவிகளே! நினைவாற்றல் அதிகரிக்கும். தெரியாதவற்றை ஆசிரியர்களிடம் கேட்டுத்
தெரிந்து கொள்ளுங்கள். கலைஞர்களே! புதிய வாய்ப்புகளால் பரபரப்புடன்
காணப்படுவீர்கள்.


இந்தச் சனிப்பெயர்ச்சி மாற்றம் உடலாலும், மனதாலும் உடைந்திருந்த உங்களை உற்சாகப்படுத்தி உருவேற்றுவதாக அமையும்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

சனி பெயர்சி பலன் Empty Re: சனி பெயர்சி பலன்

Post by மாலதி November 3rd 2011, 21:36

சனி பெயர்சி பலன் 12

மீனம்
சனி பெயர்சி பலன்


அயராது உழைத்து சிகரத்தின்
எல்லைக்கே சென்றாலும் பெரியோர்களை மதித்து நடந்துக் கொள்ளும்
குணமுடையவர்கள் நீங்கள்தான்.

இதுவரை உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் அமர்ந்து அடிப்படைய வசதி வாய்ப்புகளை
அதிகப்படுத்தியதுடன், அதிகாரப் பதவியில் இருப்பவர்களுடன் நெருக்கமாகப்
பழகும் சூழலையும் உருவாக்கித் தந்த சனி பகவான் வரும் 26.09.2009 முதல்
21.12.2011 வரை உங்கள் ராசிக்கு 7வது வீட்டில் நுழைந்து பலன் தரப்போகிறார்.


7வது வீட்டுக்கு சனி வருகிறாரே என்று பதற்றப்படாதீர்கள். இனி எதையும்
திட்டமிட்டு செய்யப் பாருங்கள். கணவன்-மனைவிக்குள் சின்னச்சின்ன சந்தேகம்
வரக்கூடும். பணம் வரும். வீண் செலவுகளை குறைத்து சேமிக்கப் பாருங்கள்.
பிள்ளைகளால் செலவுகளும், அலைச்சலும் வரும்.


மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். நீங்களும் அயல்நாடு சென்று
வருவீர்கள். மகளின் கல்யாணத்தை போராடி முடிப்பீர்கள். சகோதர வகையில் அதிக
உரிமையெடுத்துக் கொள்ள வேண்டாம். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் தலை
தூக்கும்.


சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் சஷ்டமாதிபதியான சூரியனின்
உத்திரம் நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனிபகவான்
செல்வதால் இக்கால கட்டத்தில் பணப் பற்றாக்குறை, வீண் அலைச்சல், நெஞ்சுவலி,
வீண் பழி வந்து செல்லும்.


உங்களின் பூர்வ புண்யாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திர சாரத்தில்
20.09.2010 முதல் 14.10.2011 வரை சனிபகவான் செல்வதால் குழந்தை பாக்கியம்
கிட்டும். பணவரவு உண்டு. சொத்து வாங்குவீர்கள். நீண்ட நாள் ஆசைகள்
நிறைவேறும். பிள்ளைகளுக்கு நல்ல வருங்காலத்தை அமைத்துத் தருவீர்கள்.


உங்களின் தன பாக்யாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில்
15.10.2011 முதல் 21.12.2011 வரை சனிபகாவன் செல்வதால் குடும்பத்தில்
மகிழ்ச்சியும், விருந்தினர் வருகையும் உண்டு. உடன் பிறந்தவர்கள்
உதவுவார்கள்.


வரும் 10.1.2010 முதல் 08.05.2010 வரை சனி பகவான் வக்ரத்தில் செல்வதால்
வழக்கில் வெற்றி, சித்தர் தொடர்பு, வெளிநாட்டுப் பயணங்கள் வரக்கூடும்.
23.01.2011 முதல் 15.06.2011 வரை வக்ரத்தில் செல்வதால் வீண்
அலைச்சல்,சிறுசிறு நஷ்டங்கள் வந்து செல்லும்.


சனி பகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம்
அதிகரித்தல், இரும்பு, சுண்ணாம்புச் சத்து குறைவு ஏற்படக்கூடும்.
மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ளுங்கள். மறதியால் பொருட்களை இழக்க
நேரிடும்.


பெற்றோரின் உடல்நிலை பாதிக்கும். வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு
வரும். மற்றவர்களுக்காக எதிலும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம்.
வி.ஐ.பி.கள் தக்க நேரத்தில் உதவுவார்கள். நெருங்கிய உறவினர் அல்லது நண்பர்
ஒருவரின் இழப்பு உங்களை வாட்டும். லேசாக கால் வலி, உடல் அசதி, தோலில்
நமச்சல் வந்து நீங்கும்.


பழைய வாகனத்தை விற்றுவிட்டு நவீன வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில்
மற்றவர்களை நம்பி புது முதலீடுகள் வேண்டாம். அயல்நாட்டுத் தொடர்புடைய
நிறுவனங்கள் மூலம் லாபம் உண்டாகும். கறாராக இருங்கள். வேலையாட்கள் முரண்டு
பிடிப்பர். கமிசன், கன்சல்டன்ஸி, கட்டிட உதிரி பாகங்களால் ஆதாயம் உண்டு.


உத்தியோகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம்.
சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கன்னிப் பெண்களே, பெற்றோருடன்
அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் வரும். திருமணம் தாமதமாக முடியும்.


மாணவ-மாணவிகளே! கணிதம், வேதியியல் பாடங்களில் அலட்சியம் வேண்டாம். ஆசிரியர்
ஒத்துழைப்பார். கலைஞர்களே! தனி நபர் விமர்சனத்தைத் தவிர்க்கவும். அரசு
பாராட்டும். இந்தச் சனிப் பெயர்ச்சி ஒருபுறம் அலைச்சலுடன் அனுபவ அறிவையும்,
மறுபுறம் செல்வாக்கையும் தருவதாக அமையும்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

சனி பெயர்சி பலன் Empty Re: சனி பெயர்சி பலன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum