HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)

Go down

திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2) Empty திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)

Post by vpoompalani October 3rd 2015, 12:55

திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2) 12119026_1638529143086818_6155334917816147016_n
திரு வாதவூரடிகள் எனும் மாணிக்கவாசக பெருமான் தமிழ் நாட்டில் உ்ள்ள கோவில்கட்குப் புனிதப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள சிவலாயத்தலங்களில் பதிகங்கள் பாடிக் கொண்டு வரும் நாளில் தில்லை வந்தார். ஊருக்கு புறத்தே ஓரிடத்தில் தங்கினார். அவ்வேளையில் ஈழத்து மன்னன் தீட்சிதர்கைள வாதுக்கு அழைத்தான். அது கண்டு பயந்து கலங்கிய தீட்சிதர்கள் அருள்மிகு நடராஜரை வேண்டி வணங்கினர். இறைவன் அசரிரி வாக்காக " வாதவூரரை அடைந்து வெல்லுங்கள் " என உரைத்தான்.  
    அதன் படி மாணிக்கவாசகர் புத்த மதத்தினரின் ஆங்காரத்தை அடக்க ஈழ மன்னரின் மகளை பேச வைத்தும், புத்த மதத்தினர் இறைவரின் தன்மையினை பற்றி கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் முகத்தான் திருச்சாழல் என்ற பதிகத்தின் வாயிலாக மீதமுள்ள 10 பாடல்களில் வாயிலாக இங்கே காண்ேபாம்.

பாடல் எண் : 11

நங்காய் இதென்னதவம்
நரம்போ டெலும்பணிந்து
கங்காளம் தோள்மேலே
காதலித்தான் காணேடீ
கங்காளம் ஆமாகேள்
காலாந்த ரத்திருவர்
தங்காலஞ் செய்யத்
தரித்தனன்காண் சாழலோ.

பொழிப்புரை :

நரம்போடு கூடிய எலும்புக் கூட்டினை அணிந்து முழுவெலும்பைத் தோளில் சுமந்தான். இது என்ன தவமோ? என்று புத்தன் வினாவ முழுவெலும்பு வந்த விதத்தைக் கேள். கால, கால வேற்றுமையால் பிரம விட்டுணுக்கள் இறக்க, அவர்கள் எலும்புக் கூட்டினை தரித்தான் என்று ஊமைப்பெண் விடை சொன்னாள்.

பாடல் எண் : 12

கானார் புலித்தோல்
உடைதலைஊண் காடுபதி
ஆனால் அவனுக்கிங்
காட்படுவார் ஆரேடீ
ஆனாலுங் கேளாய்
அயனுந் திருமாலும்
வானாடர் கோவும்
வழியடியார் சாழலோ.

பொழிப்புரை :

புலித்தோலே ஆடையும், தலைஒடே உண் கலமும், மயானமே இடமும் ஆனால், அவனுக்கு அடிமைப் படுவோர் யாவர்? என்று புத்தன் வினாவ, புலித்தோல் முதலியவற்றை உடைய வனாயினும் பிரமன், திருமால், இந்திரன் என்பவர் அவனுக்கு வழித் தொண்டர் என்று ஊமைப் பெண் கூறினாள்.

பாடல் எண் : 13

மலையரையன் பொற்பாவை
வாள்நுதலாள் பெண்திருவை
உலகறியத் தீவேட்டான்
என்னுமது என்னேடீ
உலகறியத் தீவேளா
தொழிந்தனனேல் உலகனைத்துங்
கலைநவின்ற பொருள்களெல்லாங்
கலங்கிடுங்காண் சாழலோ.

பொழிப்புரை :

மலையரசன் மகளாகிய உமாதேவியை, உலகம் அறியத் தீ முன்னே மணம் செய்தனன் என்பது என்ன காரியம்? என்று புத்தன் வினாவ, இறைவன் உலகமறிய மணம் செய்து கொள்ளாது ஒழிந்தால் உலகம் முழுதும் சாத்திரப் பொருள்களும் நிலைமாறிவிடும் என்று ஊமைப் பெண் விடை சொன்னாள்.

பாடல் எண் : 14

தேன்புக்க தண்பணைசூழ்
தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம்
பயிலுமது என்னேடீ
தான்புக்கு நட்டம்
பயின்றிலனேல் தரணியெல்லாம்
ஊன்புக்க வேற்காளிக்
கூட்டாங்காண் சாழலோ.

பொழிப்புரை :

தில்லைச் சிற்றம்பலத்தான் நடனம் செய்தற்குக் காரணம் யாது? என்று புத்தன் வினாவ, இறைவன் நடனம் செய்யாது ஒழிந்தால், உலகம் முழுதும் காளிக்கு உணவாய் விடும் என்று ஊமைப் பெண் விடை சொன்னாள்.

பாடல் எண் : 15

கடகரியும் பரிமாவும்
தேரும்உகந் தேறாதே
இடபம்உகந் தேறியவா
றெனக்கறிய இயம்பேடீ
தடமதில்கள் அவைமூன்றுந்
தழலெரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான்
திருமால்காண் சாழலோ.

பொழிப்புரை :

மதயானை குதிரை தேர் இவற்றின் மீது ஏறாமல் இடபத்தின் மீது சிவபெருமான் ஏறினதற்குக் காரணம் யாது என்று புத்தன் வினாவ, முப்புரங்களை எரித்த காலத்தில் தேரின் அச்சு முறியத் திருமால் இடப உருவாய்த் தாங்கினான் என்று ஊமைப்பெண் சொன்னாள்.

பாடல் எண் : 16

நன்றாக நால்வர்க்கு
நான்மறையின் உட்பொருளை
அன்றாலின் கீழிருந்தங்
கறமுரைத்தான் காணேடீ
அன்றாலின் கீழிருந்தங்
கறமுரைத்தான் ஆயிடினும்
கொன்றான்காண் புரமூன்றுங்
கூட்டோடே சாழலோ.

பொழிப்புரை :

சனகர் முதலிய நால்வருக்கும் நான்கு வேதங் களின் உட்பொருள்களை ஆலமர நீழலிருந்து சொன்னான், அது என்ன? என்று புத்தன் வினாவ, அன்று ஆலநீழலிருந்து அறங்கூறினா னாயினும் முப்புரங்களை வேரோடு அழித்தான் என்று ஊமைப் பெண் சொன்னாள்.

பாடல் எண் : 17

அம்பலத்தே கூத்தாடி
அமுது செயப் பலிதிரியும்
நம்பனையுந் தேவனென்று
நண்ணுமது என்னேடீ
நம்பனையும் ஆமாகேள்
நான்மறைகள் தாமறியா
எம்பெருமான் ஈசாவென்
றேத்தினகாண் சாழலோ.
பொழிப்புரை :

அம்பலத்தில் கூத்தாடி, பிச்சை எடுத்துண்டு உழல் கின்ற சிவனையும் தேவனென்று அடைவது என்ன அறியாமை? என்று புத்தன் வினாவ, அவனை நான்மறைகள் அறியாதவைகளாய் எம் பெருமானே! ஈசனே! என்று துதித்தன என்று அவள் கூறினாள்.

பாடல் எண் : 18

சலமுடைய சலந்தரன்றன்
உடல்தடிந்த நல்லாழி
நலமுடைய நாரணற்கன்
றருளியவா றென்னேடீ
நலமுடைய நாரணன்தன்
நயனம்இடந் தரனடிக்கீழ்
அலராக இடஆழி
அருளினன்காண் சாழலோ.
பொழிப்புரை :

சலந்தரன் உடம்பைச் சேதித்த சக்கரத்தைத் திருமாலுக்குக் கொடுத்தற்குக் காரணம் யாது? என்று புத்தன் வினாவ, திருமால் தன் கண்ணைப் பறித்து மலராகத் திருவடியிற் சாத்தினதால் கொடுத்தான் என்று ஊமைப் பெண் விடை கூறினாள்.

பாடல் எண் : 19

அம்பரமாம் புள்ளித்தோல்
ஆலாலம் ஆரமுதம்
எம்பெருமான் உண்டசதுர்
எனக்கறிய இயம்பேடீ
எம்பெருமான் ஏதுடுத்தங்
கேதமுது செய்திடினும்
தம்பெருமை தானறியாத்
தன்மையன்காண் சாழலோ.
பொழிப்புரை :

புலித்தோல் ஆடையாகும்; அமுது ஆலகால விடம் ஆகும்; இது என்ன தன்மை? என்று புத்தன் வினாவ, எம் பெருமான் எதை உடுத்து எதை அமுது செய்தாலும், தன் பெருமையைத்தான் அறியாத தன்மையன் என்று ஊமைப் பெண் கூறினாள்.

பாடல் எண் : 20

அருந்தவருக் காலின்கீழ்
அறமுதலா நான்கனையும்
இருந்தவருக் கருளுமது
எனக்கறிய இயம்பேடீ
அருந்தவருக் கறமுதல்நான்
கன்றருளிச் செய்திலனேல்
திருந்தவருக் குலகியற்கை
தெரியாகாண் சாழலோ.
பொழிப்புரை :

சனகாதியர்க்கு ஆல மர நீழலிருந்து அறம் முதலியவற்றை அருள் செய்த வரலாறு எற்றுக்கு? என்று புத்தன் வினாவ, அறம் முதலியவற்றை இறைவன் அருள் செய்யாவிடின் அவர்கட்கு உலக இயற்கைகள் தெரியமாட்டா என்று அப்பெண் கூறினாள்.



சிவபுராணத்தால் இறைவனைத் துதிக்கும் முறையை வகுத்தும், கீர்த்தித் திருவகவலில் அவன் பலவிடத்தும் பலருக்கும் செய்த திருவருட் சிறப்புக்களையெல்லாம் தொகுத்தும், திருவண்டப் பகுதியில் அவனது ஏனை இயல்புகளை எல்லாம் விளக்கியும், இதனுள் புறச்சமயங்கள் பற்றியாதல், தமக்கே யாதல் நன்மக்கட்கு நிகழும் ஐயங்களைத் தடைவிடைகளால் அகற்றி, சிவபெருமானது முதன்மையை நிறுவியும், திருக்கோவையால் அகப்பொருள் வகையிலெல்லாம் சிவபெருமானைப் பாட்டுடைத் தலைவனாக்கிப் புகழ்ந்தும், மற்றும் பலவாற்றானும் பெரியதோர் இலக்கியக் கரு வூலத்தை அருளிச்செய்து, சிவநெறிக்குப் பெரியதோர் ஆக்கம் விளைத்தமையின், இந்நெறியின் பண்டைப் பேரருளாசிரியராய் விளங்குதலும், அவர்வழியே பின்னை ஆசிரியர்களும் சிவநெறியை நன்கு வளர்த்தமையும் ஈண்டு ஓர்ந்துணர்ந்து கொள்ளத் தக்கனவாம்.

இதன் மூலம் நாம் அறியும் உண்மை, தில்லைவாழ் அந்தணர்கள் வாழ்கை வளம் ெபறவும், எதிர்ப்பை முறியடிக்கவும், தமிழனும், தெய்வத்தமிழும் தேவை.  திருவாசகமும், அடியார்களும்,  அழகிய சிற்றம்பல முடையானின் இரு கண்கள். திருவாசகத்தை சிற்றம்பல முைடயானே தன் மணிவாசகர் சொல்லச் சொல்ல தன் கைச் சாத்தால் எழுதப்பட்டு, அந்த ஏட்டில் இதை கைசாத்திட்டது இறைவரே என்று கைசாத்திட்டு தில்லையம்பல வாயிலில் வைக்கப்பட்டு மறைந்து விட்டார், இதைக் கண்ட தில்லைவாழ் அந்தணர்கள் இதன் பொருள் என்ன என்று மாணிக்க வாசகரிடம் கேட்க, அதற்கு மணிவாசக ெபருமானார், அவர்களை அழைத்துச் சென்று
அம்பலவாணர் முன் நிறுத்தி, இதற்கு பொருள் இவரே என்று கூறி மறைந்தார்.இந்த கைச்சாத்து ஏடு இன்னும் புதுச்சேரி அம்பலத் தாடி மடத்தில் பூசை உளளது.  திருவாசகமே மனிதனால் கூறப்பட்டு இறைவனால் எழுதப்பட்ட சரித்திரம் கொண்டது. சம்பந்தருக்கும், சுந்தரருக்கும் இறைவர் முதல் அடி எடுத்துக் கொடுத்து மனிதனால் பாடப்பட்டது.

கீதை இறைவனால் மனிதனுக்கு கூறப்பட்டது
திருவாசம் மனிதனால் கூற இறைவரால் எழுதப்பட்டது

திரு வாசகம் ஒன்றுதான் மாணிக்க்வாசகர் கூறப்பட்டு அம்பல  வாணரால் கைப்பட கைசாத்திட்டு  எழுத்பட்ட தெய்வத்தமிழ் ஏடு. எனவே இப்பதிகத்தை அறிந்து, தெளிந்து ஓதினால், வழக்கறிஞர்கள் வழக்காடும் திறமை திறம் படுவார்கள். மாணவ மாணவியர்கள் திக்குவாயர்கள், நன்கு பேசவும் அறிவு பெறவும் உதவும் பதிகம், இது உண்மை.
   
திருச்சிற்றம்பலம்
ேமலும் ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
vpoompalani
vpoompalani

Posts : 50
Join date : 16/07/2015
Location : Sundarapandiam

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum