HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



நாகதோஷம்,சர்பதோஷம் பற்றிய உண்மை விளக்கம் !

Go down

நாகதோஷம்,சர்பதோஷம் பற்றிய உண்மை விளக்கம் !  Empty நாகதோஷம்,சர்பதோஷம் பற்றிய உண்மை விளக்கம் !

Post by மாலதி February 28th 2013, 18:29


[You must be registered and logged in to see this link.]


ஆண்,
பெண் இருவர் ஜாதகங்களிலும், லக்னம், சந்திரன்
இருக்கும் இடங்களிலிருந்து 2,4,5,7,8,12வது இடங்களில், ராகு அல்லது கேது
இருப்பது நாகதோஷம். இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்கள், இந்த பாவக காராக வழியில்
100 சதவிகித தீமையான பலனை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்றும் , உலகத்தில்
உள்ள அனைத்து துன்பங்களும் அனுபவிக்க பிறந்தவர்கள்
என்ற ரீதியில் கருத்தை
ஒரு வலை பதிவில் கண்ட பொழுது ராகு கேது பற்றிய இப்படி தவறான கருத்தை
மக்களிடம் பரப்பும் பொழுது இதனால் பாதிப்படைபவர்கள் அதிகம், என்பதை இவர்கள்
உணரமாட்டார்களா என்ற எண்ணமே தோன்றியது.



மேலும் சரியான காலத்தில்
திருமணம் நடக்க வேண்டிய இளம் பெண்களுக்கும், இளம் ஆண்களுக்கும் ராகு கேது
தோஷம் , நாக தோஷம் , களத்திர தோஷம் , காலசர்ப்பதோஷம், செவ்வாய் தோஷம் ,
என்று பல ஜோதிடர்கள் வாயில் வந்ததையெல்லாம் உளறுவதால் சரியான காலத்தில்
நடக்க வேண்டிய திருமணம், காலதாமதம் ஆவதற்கு தாங்களே காரணம் என்பதையும்,
இதனால் ஏற்ப்படும் வினை பதிவினை ஜோதிடன் ஆகிய தாமே அனுபவிக்க வேண்டும்
என்பதை உணர மறுக்கின்றனர்.


இனியும் இது போன்ற
குழப்பங்கள் மக்களுக்கு ஏற்ப்படக்கூடாது என்ற எண்ணமும் , இந்த பதிவு
மக்களுக்கு சரியான ஜோதிட ஆலோசனையும் , ஜோதிடத்தில் விழிப்புணர்வையும்
ஏற்ப்படுத்தும் என்ற நோக்கிலும் நாங்கள் இந்த பதிவை மக்கள் அனைவருக்கும்
வழங்குகிறோம்
.

முதலில் ராகு கேது எனும் இரு கிரகங்களும்
லக்னம்,
சந்திரன்
இருக்கும் இடங்களிலிருந்து 2,4,5,7,8,12வது இடங்களில், இருந்தாலே அவை
பாதிப்பை மட்டும் செய்யும் என்று கணிப்பது முற்றிலும் தவறு. ஒருவருடைய
ஜாதகத்தில்
ராகு கேது எனும் இரு கிரகங்கள் முறையே ஏதாவது ஒன்று எந்த லக்கினத்திற்கு 2,4,5,7,8,12 ம் வீடுகளில் அமர்ந்தால் நன்மை செய்யுமா தீமை செய்யுமா என்பதை பற்றி பார்ப்போம்.



மேஷலக்கினத்திர்க்கு


2 ம் வீடு ரிஷபத்தில் ராகு
அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும்
தனம் , குடும்பம் வாக்கு என்ற அமைப்பில் ,



4 ம் வீடு கடகத்தில்
ராகு அல்லது கேது அமர்ந்தால், வளர்பிறை சந்திரன் ஆனால் 100 சதவிகித தீமையான பலனையே தரும் தாய் , வீடு, வண்டி ,வாகனம் , சுகம் என்ற அமைப்பில், இதுவே தேய்பிறை சந்திரன் ஆனால் 100 சதவிகித நன்மையான பலனையே தரும் தாய், வீடு, வண்டி ,வாகனம் , சுகம் என்ற அமைப்பில்.

5 ம் வீடு சிம்மத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் பூர்வ புண்ணியம் , குழந்தை பாக்கியம் ( ஆண் வாரிசு மட்டும் இல்லாத நிலை ), பரம்பரை சொத்து என்ற அமைப்பில் ,

7 ம் வீடு துலாம் ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் களத்திரம், கூட்டு , கூட்டாளி என்ற அமைப்பில் ,


8 ம் வீடு விருச்சகத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் நீண்ட ஆயுள் , திடீர் அதிர்ஷ்டம் ,ஆரோக்கியம் என்ற அமைப்பில் ,

12
ம் வீடு மீனத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் விரயம் , இழப்பு மனநிம்மதி , துக்கம் மற்றும் தூக்கம் என்ற அமைப்பில் ,




ரிஷப லக்கினத்திற்கு


2
ம் வீடு மிதுனத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், சூரியனுடன் 14 பாகைக்கு மேல் இருக்கும் புதன் ஆனால் ஜாதகருக்கு 100
சதவிகித தீமையான பலனையே தரும் தனம் , குடும்பம் வாக்கு என்ற அமைப்பில் ,
சூரியனுடன் 14 பாகைக்கு உள் இருக்கும் புதன் ஆனால் ஜாதகருக்கு 100
சதவிகித
நன்மையான பலனையே தரும் தனம் , குடும்பம் வாக்கு என்ற அமைப்பில் ,

4 ம் வீடு சிம்மத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் தாய், வீடு, வண்டி ,வாகனம் , சுகம் என்ற அமைப்பில்.

5 ம் வீடு கன்னியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், சூரியனுடன் 14 பாகைக்கு உள் இருக்கும் புதன் ஆனால் ஜாதகருக்கு 100
சதவிகித
நன்மையான பலனையே தரும் பூர்வ புண்ணியம் , குழந்தை பாக்கியம்,ரம்பரை சொத்து என்ற அமைப்பில் , சூரியனுடன் 14 பாகைக்கு உள் இருக்கும் புதன் ஆனால் ஜாதகருக்கு 100
சதவிகித
தீமையான பலனையே தரும் பூர்வ புண்ணியம் , குழந்தை பாக்கியம் ( ஆண் வாரிசு மட்டும் இல்லாத நிலை ), பரம்பரை சொத்து என்ற அமைப்பில்.

7 ம் வீடு விருச்சக ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் களத்திரம், கூட்டு , கூட்டாளி என்ற அமைப்பில் ,

8 ம் வீடு தனுசு ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் நீண்ட ஆயுள் , திடீர் அதிர்ஷ்டம் ,ஆரோக்கியம் என்ற அமைப்பில் ,

12 ம் வீடு மேஷத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் விரயம் , இழப்பு மனநிம்மதி , துக்கம் மற்றும் தூக்கம் என்ற அமைப்பில்




மிதுன லக்கினத்திற்கு

2
ம் வீடு
கடகத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், வளர்பிறை சந்திரன் ஆனால் 100 சதவிகித தீமையான பலனையே தரும் தாய் , வீடு, வண்டி ,வாகனம் , சுகம் என்ற அமைப்பில், இதுவே தேய்பிறை சந்திரன் ஆனால் 100 சதவிகித நன்மையான பலனையே தரும் தாய், வீடு, வண்டி ,வாகனம் , சுகம் என்ற அமைப்பில்.


4 ம் வீடு கன்னியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், சூரியனுடன் 14 பாகைக்கு மேல் இருக்கும் புதன் ஆனால் ஜாதகருக்கு 100
சதவிகித தீமையான பலனையே தரும் தனம் , குடும்பம் வாக்கு என்ற அமைப்பில் ,
சூரியனுடன் 14 பாகைக்கு உள் இருக்கும் புதன் ஆனால் ஜாதகருக்கு 100
சதவிகித
நன்மையான பலனையே தரும் தனம் , குடும்பம் வாக்கு என்ற அமைப்பில் ,


5 ம் வீடு துலாம் ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100
சதவிகித
நன்மையான பலனையே தரும் பூர்வ புண்ணியம் , குழந்தை பாக்கியம்,ரம்பரை சொத்து என்ற அமைப்பில் ,

7 ம் வீடு தனுசு ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் களத்திரம், கூட்டு , கூட்டாளி என்ற அமைப்பில் ,

8 ம் வீடு மகரத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் நீண்ட ஆயுள் , திடீர் அதிர்ஷ்டம் ,ஆரோக்கியம் என்ற அமைப்பில் ,


12 ம் வீடு ரிஷபத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் விரயம் , இழப்பு மனநிம்மதி , துக்கம் மற்றும் தூக்கம் என்ற அமைப்பில் ,




குறிப்பு :


சுய ஜாதகத்தில் நடப்பு திசை, புத்தி, அந்தரம், சூட்சமம் ஆகியவைகள்


2,4,5,7,8,12 வீடுகளின்
பலன்களை நடத்தினால் மட்டுமே, மேற்கண்ட பலன்கள் நடக்கும் இல்லை எனில்
மேற்கண்ட பலன்கள் ஜாதகரை எவ்விதத்திலும் பாதிக்காது என்பதை கவனத்தில்
கொள்க.


மேலும்
மற்ற கிரகங்களின் பார்வை ராகு கேது அமரும் வீட்டிற்கு இருந்தால் பலன்கள்
வேறுபடுமா என்ற சந்தேகம் ஏற்ப்படலாம் , உண்மையில் ராகு கேது எந்த வீடுகளில்
அமருகிறர்களோ அந்த வீடுகளின் பலன்களை தான் மட்டுமே முழுவதும் உரிமையுடன்
எடுத்துகொண்டு, செய்ய ஆராம்பிப்பார்கள் அது நன்மையாகவும் இருக்கலாம் ,
தீமையாகவும் இருக்கலாம் , இதில் மற்ற கிரகங்களின் பார்வை ஒன்றும் செய்ய
இயலாது , உதாரணமாக பொம்மை முதல்வர் என்ற அமைப்பில்சம் பந்தபட்ட வீட்டுக்கு
அதிபதி மற்றும் சம்பந்தபட்ட பாவகம் ஆகியன பொம்மை முதல்வர் , அங்கு அமரும்
ராகு கேதுவே முழுவதும் ஆட்சி செய்யும் .

மேலும் இது
2,4,5,7,8,12
ஆகிய வீடுகளுக்கு மட்டும் தான் பலன் பொருந்தும் என்றில்லை லக்கினம் முதல்
அனைத்து பாவகங்களுக்கும் பொருந்தும் என்பதை இந்த இடத்தில் நினைவில் கொள்வது
அவசியம். உண்மையில் மாற்ற கிரகங்களை விட ராகு கேதுவுக்கே ஜாதகத்தில் பலன்
நடத்துவதில் அதிக பங்கு உண்டு , ஒருவருக்கு ஏற்ப்படும் தொடர்புகளை (
நல்லவர் சேர்க்கை, தீயவர் சேர்க்கை ) நிர்ணயக்கும் தன்மை இந்த சாயா
கிரகங்களுக்கு மட்டும் உண்டு என்பதை இந்த இடத்தில் குறிப்பிட
விரும்புகிறேன் .


பலன்களை தருவதிலும் நன்மையோ தீமையோ எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை இந்த சாயா
கிரகங்கள் . இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் மின்னஞ்சலில் கேள்விகளை
அனுப்பி வையுங்கள் . நமது வலை பூவை காண்பவர்களுக்கு நிச்சயம் ராகு கேது
நன்மையை தந்து கொண்டு இருக்கும் என்பது ஜோதிடதீபத்தின் கருத்து, காரணம்
நல்ல விஷயங்களை தொடர்பு படுத்துவதில் ராகு கேதுவை மீற ஆளில்லை .



தொடரும் ....
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாகதோஷம்,சர்பதோஷம் பற்றிய உண்மை விளக்கம் !  Empty Re: நாகதோஷம்,சர்பதோஷம் பற்றிய உண்மை விளக்கம் !

Post by மாலதி February 28th 2013, 18:30


நாகதோஷம்,சர்பதோஷம் பற்றிய உண்மை விளக்கம் ! பகுதி 2









[You must be registered and logged in to see this link.]







ராகு கேது எனும் இரு கிரகங்களும் லக்னம்,
சந்திரன்
இருக்கும் இடங்களிலிருந்து 2,4,5,7,8,12வது இடங்களில், இருந்தாலே அவை
பாதிப்பை மட்டும் செய்யும் என்று கணிப்பது முற்றிலும் தவறு. ஒருவருடைய
ஜாதகத்தில்
ராகு கேது எனும் இரு கிரகங்கள் முறையே ஏதாவது ஒன்று லக்கினத்திற்கு 2,4,5,7,8,12 ம் வீடுகளில் அமர்ந்தால் நன்மை செய்யுமா தீமை செய்யுமா என்பதை பற்றி பார்ப்போம்.









கடக லக்கினத்திற்கு









2
ம் வீடு
சிம்மத்தில் ராகு
அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு பூர்விக அமைப்புகளில் இருந்து நல்ல
வருமானம் பெரும் அமைப்பை தடையின்றி கொடுக்கும் , ஜாதகருக்கு வாக்கு பலிதம்
ஏற்ப்படும், அரசு துறைகளில் பணியாற்றும் வய்ய்பினை ஜாதகர் பெறுவார்.
100 சதவிகித நன்மையான பலனையே தரும்
தனம் , குடும்பம் , வாக்கு என்ற அமைப்பில் .






4 ம் வீட துலாம் ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால் ஜாதகர் களத்திர வழியிலும் கூட்டு அமைப்பிலும் தாய் , வீடு, வண்டி ,வாகனம் , சுகம் என்ற அமைப்பில்,100 சதவிகித தீமையான பலனையே தரும்.











5 ம் வீடு விருச்சக ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100
சதவிகித தீமையான
பலனையே தரும் பூர்வ புண்ணியம் , குழந்தை பாக்கியம், பரம்பரை சொத்து என்ற அமைப்பில் திடீர் இழப்பு என்ற வகையில்.

7 ம் வீடு மகர ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் களத்திரம், கூட்டு , கூட்டாளி என்ற
அமைப்பில், மேலும் மனைவி வழி சொத்துகள் ஜாதருக்கு அதிகம் கிடைக்கும்
திருமண வாழ்க்கையில் அதிக சந்தோஷமாக வாழ்க்கை நடத்தும் நபர்கள் இவர்களே.



8
ம் வீடு கும்பத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100
சதவிகித நன்மையான பலனையே தரும் நீண்ட ஆயுள் , நீடித்த அதிர்ஷ்டம்
,ஆரோக்கியம் மற்றும் இருதார அமைப்பு , வங்கியில் அதிக சேமிப்பு
வெளிநாடுகளில் இருந்து அதிக வருவாய் என்ற
அமைப்பில் ,







12 ம் வீடு மிதுனத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், சூரியனுக்கு 14 பாகைக்கு மேல் சூரியனுடன் சேராமல் இருக்கும் புதன் என்றால் ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் விரயம் , இழப்பு மனநிம்மதி , துக்கம் மற்றும் தூக்கம் என்ற அமைப்பில் ,






சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்திருக்கும் புதன் எனில் ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் சுப விரயம் , மனநிம்மதி , நல்ல தூக்கம் என்ற அமைப்பில் ,








சிம்ம லக்கினத்திற்கு






2
ம் வீடு கன்னியில்
ராகு
அல்லது கேது அமர்ந்தால்,
சூரியனுக்கு 14 பாகைக்கு மேல் சூரியனுடன் சேராமல் இருக்கும் புதன் என்றால் ஜாதகருக்கு
100 சதவிகித தீமையான பலனையே தரும் முதலீடுகளால் லாபம் அற்ற நிலை ,
எதிரிகள் தொந்தரவு , நோய் நொடி , கடன் பெறுவதாலும் , கடன் கொடுப்பதாலும்
தொல்லை மற்றவர்களுடன் பகைமை பாராட்டுவதால் ஏற்ப்படும் துன்பம், என்ற
அமைப்பில் தீமையான பலனே நடக்கும்.









சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்திருக்கும் புதன் எனில் ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் முதலீடுகளால் லாபம், கடன்
பெறுவதாலும் , கடன் கொடுப்பதாலும்அதிக நன்மை , வட்டி தொழில் நல்ல
முன்னேற்றம் , எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக ஜாதகர் விளங்குவார் ,
எடுக்கும் முயற்ச்சிகளில் எல்லாம் வெற்றி என்ற நிலையே ஜாதகருக்கு தரும்.















4
ம் வீடு விருச்சக ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால் ஜாதகர் நல்ல
குணமும் , செயல்பாடுகளும் கொண்டவராக காணப்படுவார் , தாய் வழியில் அதிக
நன்மை பெரும் தன்மை ஜாதகருக்கு ஏற்ப்படும் , நல்ல வசதியான வீடு , சொகுசான
வண்டி வாகனம் சொத்து சுகம் அனைத்தும் ஜாதகருக்கு தீடிர் என கிடைக்கும் இந்த
அமைப்பு
100 சதவிகித நன்மையான பலனையே தரும்.










5
ம் வீடு தனுசு ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100

சதவிகித நன்மையானபலனையே தரும் பூர்வீகத்தில் செய்யும் தொழில்களில் வெற்றி ,
குழந்தை பாக்கியம், பரம்பரை சொத்து அதிக வருமானம், விரைவான முன்னேற்றம் ,
பல தொழில் நிர்வாகிக்கும் தன்மை, அனைவரிடமும் நல்ல பெயர் , அதிகார பதவி
என்ற அமைப்பில்.






7
ம் வீடு கும்ப ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100
சதவிகித நன்மையான பலனையே தரும் களத்திரம், கூட்டு , கூட்டாளி
என்ற
அமைப்பில், மேலும் மனைவி வழி சொத்துகள் ஜாதருக்கு அதிகம் கிடைக்கும்
திருமண வாழ்க்கையில் அதிக சந்தோஷமாக வாழ்க்கை நடத்தும் நபர்கள் இவர்களே.



8 ம் வீடு மீனத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100

சதவிகித தீமையான பலனையே தரும் ஆயுள் , ஆரோக்கியம் மற்றும் உடல் நிலை, மன
நிலை பாதிப்பு, திடீர் இழப்பு , வாகன விபத்து செய்தொழில் முடக்கம் என்ற
அமைப்பில்,

12 ம் வீடு கடகத்தில் ராகு
அல்லது கேது அமர்ந்தால், வளர் பிறை சந்திரன் என்றால் ஜாதகர் அதிக மன
உளைச்சலுக்கும் , கடும் கோபத்திற்கும் ஆளாகும் சூழ்நிலை ஏற்ப்படும் , மன
நிம்மதி என்பது ஜாதகருக்கு கிடைப்பது அரிது , தேவையில்லாமல் மற்றவர்கள்
விஷயங்களில் மூக்கை நுழைத்து மன நிம்மதி இழக்கும் சூழ்நிலை ஜாதகருக்கு
ஏற்ப்படும் இதுவே ஜாதகருக்கு முதல் ஜென்மம் இந்த அமைப்பு ஜாதகருக்கு
100
சதவிகித தீமையான பலனையே தரும்.








தேய்பிறை சந்திரன்
என்றால் ஜாதகர் மிகுந்த பாக்கியசாலி, மறு ஜென்மம் கிடையாது இதுவே கடைசி
ஜென்மம் , சமுதாயத்திற்கு சிறந்த சேவைகளை செய்யும் தன்மை , மக்கள்
செல்வாக்கு இதனால் அதிக வருமானம் , நல்ல நிம்மதியான தூக்கம், சிறு வயதிலேயே
ஞானம் கிடைக்க பெறுபவர்கள் , சிறந்த அரசியல் தலைவர்கள் , ஆன்மீக வாதிகள் ,
மத தலைவர்கள் மத குருமார்கள் என்று எப்பொழுதும் மக்களிடம் அதிக தொடர்புகளை
கொண்டவர்கள் அனைவரும் இவர்களே. இந்த அமைப்பு ஜாதகருக்கு
100
சதவிகித நன்மையான பலனையே தரும்.






















கன்னி லக்கினத்திற்கு








2
ம் வீடு துலாம் ராசியில்
ராகு

அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் தனம், குடும்பம் , வாக்கு , களத்திரம் ,
கூட்டு தொழில் , நண்பர்கள் மக்கள் ஆதரவு அற்ற நிலை , முன்னேற்றம் இல்லாத
அமைப்பு தன் வாயாலே தானே கெட்டு
போகும் நிலை , மற்றவர்களை புரிந்துகொள்ளும் தன்மை அற்ற நிலை என இந்த அமைப்பு ஜாதகருக்கு 100
சதவிகித தீமையான பலனையே தரும்.










4
ம் வீடு தனுசு ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் தனது
பெற்றோர்கள் வழியில் அதிக துன்பத்தை அனுபவிக்க வேண்டி வரும் , மேலும்
வாழ்கை என்பதே போராட்டமாக மாறிவிடும் , வசிப்பதற்கு நல்ல இருப்பிடம்
அமையாது , நல்ல வீடு வண்டி வாகன யோகம் அமையாது , சொத்து சுக அமைப்பில் அதிக
தொந்தரவுகளை அனுபவிக்க வேண்டி வரும் , இந்த அமைப்பு ஜாதகருக்கு
100
சதவிகித தீமையான பலனையே தரும்.





5
ம் வீடு மகர ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் தனது
பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவு சென்று வசிப்பது அதிக நலம் தரும் , இல்லை
எனில் ஜாதகருக்கு ஜீவனம் என்பதே அமைய வாய்ப்பு இல்லை , முன்னேற்றம் என்பது
சிறிதேனும் கூட ஏற்ப்பட வாய்ப்பு இல்லை, அனைத்தும் தாமதமாக அமையும்,
ஆண்வாரிசு கிடைப்பது மிக அரிதான ஒன்றாகும் , உதவி செய்ய யாரும்
வரமாட்டார்கள். இந்த அமைப்பு ஜாதகருக்கு
100
சதவிகித தீமையான பலனையே தரும்.






7 ம் வீடு மீன ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால்,
ஜாதகர் மனைவி வழியில் அதிக துன்பம் அனுபவிக்க வேண்டி வரும் நித்தியகண்டம்
பூர்ண ஆயுசாக திருமண வாழ்க்கை அமைந்து விடும் , மன நோயால் ஜாதகர் அதிகம்
பாதிக்கும் வாய்ப்பு உண்டு, கூட்டாளிகளிடம் , நண்பர்களிடம் மிகவும் கவனமாக
இருக்க வேண்டிவரும் திடீர் என அவர்களே பரம வைரியாக மாறிவிடும் அபாயம்
ஏற்ப்படும்.
இந்த அமைப்பு ஜாதகருக்கு 100
சதவிகித தீமையான பலனையே தரும்.








8
ம் வீடு மேஷ ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் உடல் நிலையில்
அதிக கவனம் செலுத்த வேண்டும் இல்லை எனில் அதிக துன்பம் ஜாதகரை வாட்டி
வதைக்கும் , வெப்ப நோய்களால் அதிகம் துன்ப பட வேண்டி வரும் அல்லது திடீர்
இழப்புகளை சந்திக்க வேண்டி வரும் , ஜாதகர் முன் பின் யோசிக்காமல் செய்யும்
அனைத்து காரியங்களும் கெடுதலையே தரும், ஆக இந்த அமைப்பு ஜாதகருக்கு
100
சதவிகித தீமையான பலனையே தரும்.








12
ம் வீடு சிம்ம ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் மிகசிறந்த
முன்னேற்றங்களை பெறுவார், வெளிநாடுகளில் இருந்து செல்வ வளம் , அதிக முதலீடு
செய்வதால் லாபம் , சகல துறைகளிலும் முன்னேற்றம் , இன்சுரன்ஸ் துறைகளில்
அதிக லாபம் , அரசு துறைகளில் அதிக லாபம், ஒப்பந்த தொழில்களில் நல்ல
முன்னேற்றம் அதிக வருமானம் என
இந்த அமைப்பு ஜாதகருக்கு 100
சதவிகித நன்மையான பலனையே தரும்.



குறிப்பு :

சுய ஜாதகத்தில் நடப்பு திசை, புத்தி, அந்தரம், சூட்சமம் ஆகியவைகள்


2,4,5,7,8,12 வீடுகளின்
பலன்களை நடத்தினால் மட்டுமே, மேற்கண்ட பலன்கள் நடக்கும் இல்லை எனில்
மேற்கண்ட பலன்கள் ஜாதகரை எவ்விதத்திலும் பாதிக்காது என்பதை கவனத்தில்
கொள்க.


மேலும்
மற்ற கிரகங்களின் பார்வை ராகு கேது அமரும் வீட்டிற்கு இருந்தால் பலன்கள்
வேறுபடுமா என்ற சந்தேகம் ஏற்ப்படலாம் , உண்மையில் ராகு கேது எந்த வீடுகளில்
அமருகிறர்களோ அந்த வீடுகளின் பலன்களை தான் மட்டுமே முழுவதும் உரிமையுடன்
எடுத்துகொண்டு, செய்ய ஆராம்பிப்பார்கள் அது நன்மையாகவும் இருக்கலாம் ,
தீமையாகவும் இருக்கலாம் , இதில் மற்ற கிரகங்களின் பார்வை ஒன்றும் செய்ய
இயலாது , உதாரணமாக பொம்மை முதல்வர் என்ற அமைப்பில்சம் பந்தபட்ட வீட்டுக்கு
அதிபதி மற்றும் சம்பந்தபட்ட பாவகம் ஆகியன பொம்மை முதல்வர் , அங்கு அமரும்
ராகு கேதுவே முழுவதும் ஆட்சி செய்யும் .

மேலும் இது
2,4,5,7,8,12
ஆகிய வீடுகளுக்கு மட்டும் தான் பலன் பொருந்தும் என்றில்லை லக்கினம் முதல்
அனைத்து பாவகங்களுக்கும் பொருந்தும் என்பதை இந்த இடத்தில் நினைவில் கொள்வது
அவசியம். உண்மையில் மாற்ற கிரகங்களை விட ராகு கேதுவுக்கே ஜாதகத்தில் பலன்
நடத்துவதில் அதிக பங்கு உண்டு , ஒருவருக்கு ஏற்ப்படும் தொடர்புகளை (
நல்லவர் சேர்க்கை, தீயவர் சேர்க்கை ) நிர்ணயக்கும் தன்மை இந்த சாயா
கிரகங்களுக்கு மட்டும் உண்டு என்பதை இந்த இடத்தில் குறிப்பிட
விரும்புகிறேன் .


பலன்களை தருவதிலும் நன்மையோ தீமையோ எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை இந்த சாயா
கிரகங்கள் . இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் மின்னஞ்சலில் கேள்விகளை
அனுப்பி வையுங்கள் . நமது வலை பூவை காண்பவர்களுக்கு நிச்சயம் ராகு கேது
நன்மையை தந்து கொண்டு இருக்கும் என்பது ஜோதிடதீபத்தின் கருத்து, காரணம்
நல்ல விஷயங்களை தொடர்பு படுத்துவதில் ராகு கேதுவை மீற ஆளில்லை .

மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum