HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்

Go down

	 ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்  Empty ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்

Post by மாலதி August 5th 2011, 20:25

	 ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்  J

வாழக்கை ஆனந்தமயமானது



*
வெளித்தோற்றத்தில் அப்பழுக்கில்லாமல் தூய்மையாகக் காட்சி தரும்
வாழ்க்கையையே மக்கள் நாடுகிறார்கள். ஆனால், வாழ்க்கையின் தராதரம் என்பது
ஒருவரின் மனத்தூய்மையால் தான் நிர்ணயிக்கப்படுகிறது.
* ஆன்மிகம் என்பது
விழிப்புணர்வுடன் கூடிய அறிவாற்றலுடன் வாழ்வதே! உடலையோ, மனதையோ, ஆற்றல்
மிக்க சக்திகளையோ அமைதியாக வைத்திருக்கத் தெரியாத வரை உலக அமைதி என்பது
வெறும் கேலிப் பேச்சாகவே இருக்கும்.
* அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
ஆகியவற்றால் நமக்கு நாமே ஆபத்தையும், அழிவையும் தேடிக் கொண்டு வாழ்கிறோம்.
உண்மையில், சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆன்மிகத்தில் ஈடுபட்டால்
மட்டுமே உலகமே உய்வடையும்.
* அடிப்படையில் வாழ்க்கை ஆனந்தமயமானது.
நீங்கள் ஆனந்தத்துடன் தொடர்பு கொள்வீர்களானால் உங்களைச் சார்ந்த அனைத்துமே
ஆனந்தமயமாகி விடும்.
* நாம் ஒவ்வொருவரும் தத்தமது சிறப்பு இயல்புகளை
வெளிப்படுத்திக் கொள்ள முயல்வதே மனிதகுலத்தின் அடிப்படைத் தேவையாகும். ஒரு
மரத்தைப் போல, சாதாரண இயல்புடன் இருந்தாலே போதும். வாழ்வின் உயர்ந்த
பரிமாணம் நமக்குப் புலப்படத் தொடங்கும்.

-சத்குரு ஜக்கிவாசுதேவ்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

	 ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்  Empty Re: ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்

Post by மாலதி August 5th 2011, 20:26

பணத்தை தலையில் சுமக்காதீர்!



*
உங்களைச் சுற்றியுள்ள உன்னதத்தை உணர நீங்கள் தவறி விட்டால், உங்கள் மூளை
ஒரு நரகத்தை உருவாக்கக் கூடும். ஒவ்வொரு நாளும் அது புதிது புதிதாய்
நரகங்களை உருவாக்கும்.
* சுவாசம் என்பது வெறும் காற்றை உள்வாங்கி
வெளிவிடும் அர்த்தமற்ற செயல் அல்ல. ஒவ்வொரு சுவாசத்திலும் இருக்கிற
படைப்பின் பரிமாணங்களையும் படைத்தவனையும் புரிந்து கொள்ளத் தவறி விட்டு,
மனதில் தேவையற்ற விஷயங்களுக்கு முக்கியமான இடம் கொடுத்து நேரத்தை
வீணடிக்கிறீர்கள்.
* உங்களால் முடியாத ஒன்றைச் செய்யவில்லை என்றால் ஒரு
பிரச்னையும் இல்லை. உங்களால் முடியக்கூடிய ஒன்றைச் செய்யாமல் விடுவதுதான்
துயரமான ஒன்று.
* அதிக செல்வம் துன்பத்தை தராது. சட்டைப்பையில் நிறைய
பணம் இருப்பது ஒரு விதத்தில் நல்லது. ஆனால், அந்தப்பணம் உங்களுடைய
சட்டைப்பையில் தங்காமல் தலைக்கு மேல் ஏறும் போதுதான் துன்பம் வரும். பணம்
அப்படி தலைக்கு மேல் ஏறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அதனுடைய இடம்
அது அல்ல.

-சத்குரு ஜக்கிவாசுதேவ்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

	 ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்  Empty Re: ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்

Post by மாலதி August 5th 2011, 20:26

சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்



*
உங்களின் வாழ்வின் அனுபவமே, நீங்கள் வாழ்க்கையில் ஆழமாக ஈடுபடுவதில் தான்
இருக்கிறது. ஈடுபாட்டுடன் நீங்கள் செய்பவை எல்லாம் எப்போதும் ஆனந்தமாக
உள்ளதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? ஆழமான ஈடுபாடு இருந்தாலொழிய
வாழ்க்கையின் அழகை உங்களால் அறிந்து கொள்ள முடியாது.
* யார்
வேண்டுமானாலும் கடவுளை நேசிக்கலாம். ஏனெனில் கடவுள் யாரிடமும் எதுவும்
கேட்பதில்லை. ஆனால், இந்தக்கணம் உங்கள் அருகில் இருப்பவரை நீங்கள்
நேசிப்பதற்கு நீங்கள் உங்கள் வாழ்க்கையையே விலையாகக் கொடுக்க
வேண்டியிருக்கிறது. அதுதான் சவால். இதைச் செய்வதற்கு மிகவும் தைரியம்
தேவைப்படுகிறது.
* மனிதராகப் பிறந்துவிட்டால் நீங்கள் எப்படிப்பட்ட
சூழ்நிலைகளில் வாழ்கிறீர்களோ, அதிலேயே சிக்கிவிடக்கூடாது. உங்களுக்கான
சூழ்நிலைகளை நீங்கள் தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சூழ்நிலைகளின்
தாக்கத்தில் வாழ்வது விலங்கின் தன்மை, மனிதரின் தன்மை, சூழ்நிலைகளை
உருவாக்குவது!
* உங்கள் வாழ்க்கையில் அழகான சூழ்நிலைகள் வருகின்றன.
கொடுமையான சூழ்நிலைகள் வருகின்றன. உங்களுக்கு ஒரே வாய்ப்பு தான். அந்தச்
சூழ்நிலையைப் பயன்படுத்தி நீங்கள் மேலும் சிறந்தவராக, வலிமையானவராக மாறலாம்
அல்லது உடைந்து நொறுங்கிப் போகலாம்!

சத்குரு ஜக்கிவாசுதேவ்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

	 ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்  Empty Re: ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்

Post by மாலதி August 5th 2011, 20:26

திருநீறு அணிவது ஏன்!



நாம்
வெளியில் செல்லும் போது, அங்கு இருக்கும் அதிர்வுகளை பலவழிகளில்நம் உடல்
ஏற்றுக் கொள்கிறது. இது நம் உடலின் ஏழு சக்கரங்கள் வழியாகநிகழ்கிறது.
அதனால் தான், நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும்விதமாக திருநீறு
இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் கலாசாரத்தில் இருந்துவருகிறது. பசுவின் சாணம்
மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள் கலந்தகலவையின் சாம்பல் தான் விபூதி
அல்லது திருநீறு. இதற்கு அதிர்வுகளைஉள்வாங்கும் திறன் உண்டு. விபூதி
இட்டுக் கொள்ளும் போது, வாழ்வின் உயர்ந்தஅம்சங்களை ஈர்த்துக் கொள்ளலாம்.
நம்மைச் சுற்றிலும் தெய்வீகத் தன்மைஉண்டாகும். இதனால், தீயவற்றைத் தவிர்க்க
முடியும்.
விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்
1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.
2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம்.
மேலும்,
விபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது.
ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச்சொல்லலாம்.
நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

சத்குரு ஜக்கிவாசுதேவ்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

	 ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்  Empty Re: ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்

Post by மாலதி August 5th 2011, 20:27

அமைதியே இறைத்தன்மை


*
மனிதமனம் பெரும்பாலும் போராட்டத்திலேயே இருக்கிறது. பலரும் சின்னச் சின்ன
விஷயங்களுக்காகக் கூட போராடிக் கொண்டிருக்கிறார்கள். மனதில் துயரம்
இருக்கிற வரைக்கும் இந்த போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

*
வாழ்க்கையை இயல்பாக அதன் எல்லாத் தன்மைகளையும் ஏற்றுக் கொண்டால்
ஏற்றத்தாழ்வுகள் மறைந்து விடும். ஆனந்தம் மட்டுமே அப்போது
நிலைத்திருக்கும். உள்ளத்தில் ஆனந்தம் நிலைத்திருக்குமானால் புறவுலக
வாழ்வின் இன்பதுன்பங்கள் நம்மை சிறிதும் பாதிப்பதில்லை.
* நாம் சில
விஷயங்களை வேண்டும், வேண்டாம் என்று சொல்லும் போதே நம் மனதில் சில
எதிர்பார்ப்புகள் தொடங்கி விடுகின்றன. எதிர்பார்ப்பு உண்டாகும்போது
வாழ்வில் விருப்பு, வெறுப்புகள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
*
மனிதர்கள் அன்பாகவும், ஆனந்தமாகவும் இருப்பது என்பது என்றோ எப்போதோ நிகழும்
அனுபவம் என்று எண்ணுகிறார்கள். அதற்கான வாய்ப்பு விநாடிக்கு விநாடி
இருக்கிறது. அன்பும், ஆனந்தமும் நிலையான உணர்வாக நம்மிடத்தில் இருக்க
வேண்டியவையாகும்.
* ஒரு மனிதர் தான் எண்ணுவது சரி என்று உணர்ந்து, மிக
அமைதியாக இருப்பாரேயானால் அவர் இறைத்தன்மைக்கு மிக நெருக்கமானவர். அவர்
வீண்விவாதங்கள், தேவையற்ற வாக்குவாதங்கள் போன்றவற்றில் சிறிதும்
ஈடுபடமாட்டார்.


-சத்குரு ஜக்கி வாசுதேவ்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

	 ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்  Empty Re: ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்

Post by மாலதி August 5th 2011, 20:27

கீழ்த்தரமாக நடத்தினாலும் அமைதி காப்போம்



*
மற்றவர்களிடம் கொள்ளும் அன்பாக இருக்கட்டும். உங்கள் தோட்டத்தில் மலரும்
பூக்களாகட்டும். வாழ்வில் நீங்கள் அடையும் வெற்றிகளாகட்டும். தகுந்த
சூழ்நிலையை உருவாக்கத் தவறிவிட்டால் அவை நிகழ்வதில்லை. ஒரு மலரை
உருவாக்குவதை விட, அதற்கான தகுந்த சூழ்நிலையை உருவாக்கத் தவறிவிட்டால் அவை
நிகழ்வதில்லை. ஒரு மலரை உருவாக்குவதைவிட, அதற்கான தகுந்த சூழ்நிலையை
உருவாக்குவதற்கே நாம் முனையவேண்டும். எனவே, தோட்டத்து பூக்களானாலும்,
உங்களுக்குள் மலரும் மாற்றமானாலும், அதற்குத் தேவையான சூழ்நிலையை
உருவாக்குவதே உங்கள் நோக்கமாக வேண்டும்.

* உங்களை கீழ்த்தரமாக
நடத்தும் ஒருவரை அதேபோல் நடத்த எந்த விழிப்புணர்வும் தேவை இல்லை. ஆனால்,
அந்தச் சூழ்நிலையிலும், அமைதி காப்பதற்கு ஏராளமான விழிப்பு உணர்வு இருத்தல்
அவசியம்.
* உயிர்ப்புடன் வாழ்தல் என்பது அற்பமான விஷயம் அல்ல.
அசாதாரணமான ஒரு நிகழ்வு அது. உயிர்ப்புடன் இருத்தல் இந்தப் பூமியில்
மட்டுமல்ல. பிரபஞ்சத்திலேயே அபூர்வமான ஒரு செயல்.

* எல்லாவற்றையும்
படைத்தவன் உங்களளுக்குள் இருக்கிறான். படைப்பின் மூலம் உங்களுக்குள் தான்
உயிர்ப்புடன் துடித்துக் கொண்டு இருக்கிறது. அதைக் கவனிக்காமல் வேறு
எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கிறீர்கள்?

-சத்குரு ஜக்கிவாசுதேவ்








மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

	 ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்  Empty Re: ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்

Post by மாலதி August 5th 2011, 20:27

முடிந்ததைச் செய்யுங்கள்

*
உங்களைச் சுற்றி உள்ள உன்னதத்தை உணர நீங்கள் தவறிவிட்டால், உங்கள் மூளை
ஒரு நரகத்தை உருவாக்கக்கூடும். ஒவ்வொரு நாளும் அது புதிது புதிதாய்
நரகங்களை உருவாக்கும்.

* உங்களால் இயலாத ஒன்றைச் செய்யவில்லை எனில்
ஒரு பிரச்னையும் இல்லை. உங்களால் முடியக்கூடிய ஒன்றைச் செய்யாமல் விடுவது
தான் துயரமான ஒன்று.

* மற்றவரிடம் கொள்ளும் அன்பாக இருக்கட்டும்.
உங்கள் தோட்டத்தில் மலரும் பூக்களாக இருக்கட்டும். வாழ்வில் நீங்கள்
அடையும் வெற்றிகளாக இருக்கட்டும். தகுந்த சூழ்நிலையை உருவாக்கத் தவறி
விட்டால் அவை நிகழ்வதில்லை.

* உங்களை கீழ்த்தரமாக நடத்தும் ஒருவரை
அதேபோல், நடத்த எந்த விழிப்பு உணர்வும் தேவை இல்லை. ஆனால், அந்தச்
சூழ்நிலையிலும் அமைதி காப்பதற்கு ஏராளமான விழிப்பு உணர்வுடன் இருத்தல்
அவசியம்.

* உயிர்ப்புடன் வாழ்தல் என்பது அற்பமான விஷயம் அல்ல.
அசாதாரணமான ஒரு நிகழ்வு அது. உயிர்ப்புடன் இருத்தல் இந்தப் பூமியில்
மட்டுமல்ல. பிரபஞ்சத்திலேயே அபூர்வமான ஒரு செயல்.

* மனம் என்பது
அதன் செயல்களில் மட்டுமே உயிர்த்திருக்கிறது. அதற்கென்று தனியாக வேறு இடம்
இல்லை. செயல்கள் நின்று போனால் மனம் என்று ஏதும் இல்லாது போய்விடும்.

-சத்குரு ஜக்கிவாசுதேவ்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

	 ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்  Empty Re: ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்

Post by மாலதி August 5th 2011, 20:28

முன்னோருக்கு திதி செய்யுங்கள்

*
பெற்றோர் மூலமாகத் தான் நாம் இந்த உலகிற்கு வந்தோம். அவர்கள் உயிரைக்
கொடுக்கா விட் டாலும் இந்த உடலைக் கொடுத்தவர்கள் அவர்களே. எனவே, நன்றி
உணர்வோடு திதி செய்ய வேண்டும்.
* மறைந்தவர்களின் புகைப் படத்தை சுவரில்
மாட்டி வைத்தால் மட்டும் போதாது. அவர்களை வருடத்திற்கு ஒரு முறையாவது
அவசியம் சிந்திக்க வேண்டும். அவர்கள் பெயரில் முடிந்த நல்லவற்றை
செய்யுங்கள். காகம், பசு போன்ற உயிர்களுக்கு உணவளியுங்கள். அதனால், நல்ல
மாற்றத்தை நீங்கள் காண்பீர்கள்.
* நினைவு நாளில் உணவுக்காக வாடும்
ஏழைகளுக்கு உணவளியுங்கள். உறவினர்களை மட்டும் அழைக்காமல் ஏழை,
எளியவர்களையும் அழைத்து உணவிடுவது தான் சிறந்தது.
* ஏழைகள் உண்பதால்
இறந்தவரின் ஆன்மா சாந்தி அடைகிறதோ இல்லையோ நிச்சயமாக நமக்கு நன்மையுண்டு.
நம் நிம்மதிக்காகவும், அமைதிக் காவும் இந்த நல்ல விஷயத்தை மேற்கொள்ள
வேண்டும்.







மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

	 ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்  Empty Re: ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்

Post by மாலதி August 5th 2011, 20:28

உறக்கத்தை விட முக்கியமானது


*
உங்களை ஆறுதலடையச் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. நீங்கள் நிம்மதியாக
உறங்குவது முக்கியம் அல்ல. விடியலில் வெளிச்சத்தைப் பார்ப்பது தான்
முக்கியம்.

* வழிபடுதல் என்பது ஒரு செயல் அல்ல. அது ஓர் இயல்பான
பண்பு. நீங்கள் சுவாசிக்கும் காற்று, அருந்தும் தண்ணீர், நடக்கும் பூமி,
காணும் தாவரம், ரசிக்கும் பறவை, உண்ணும் உணவு என்று உங்களைச் சுற்றியுள்ள
அனைத்தையும் ஆத்மார்த்தமாக வழிபடும் உணர்வுடன் அணுகினால், உங்கள் வாழ்வு
மிக அழகாக மாறும்.

* இந்த சமூகத்தின் ஆதிக்கம் உங்களிடம் மிக
அதிகமாக இருக்கிறது. உங்கள் சுயஇயல்பைப் பயன்படுத்தி நீங்கள் நடை
போடுவதில்லை. இந்தச் சமூகத்திலிருந்து ஒதுக்க பட்டுவிடக் கூடாது என்ற
அச்சத்தில் அதன் ஆதிக்கத்தி லிருந்து விடுபடாமல் வாழ்க்கைக்கு எதிரான பல
மூடத் தனமான செயல்களை மனிதர்கள் செய்து கொண்டு இருக்கின்றனர்.

*
எந்த உணவு உடலுக்குத் தேவைப்படுகிறதோ, அதைத் தான் உண்ணவேண்டும். எதை உண்ண
வேண்டும் என உடலைக் கவனித்து உண்ணக் கற்றுக் கொண்டால் தானாகவே நீங்கள்
சரியான உணவை உட்கொள்வீர்கள்.








மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

	 ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்  Empty Re: ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்

Post by மாலதி August 5th 2011, 20:30

குழப்பமும் நல்லதற்கே!


*
கற்றுக்கொள்ளுதல் என்பது இயற்கை யாகவே மனிதனிடம் இருக்கும் குணம். இது வரை
தெரியாத ஒன்றைக் கற்றுக்கொள்ளும் போது, அது உங்களை மகிழ்ச்சிப்படுத்த
வேண்டும். அப்படி இருக்கையில், கற்றுக் கொள்ளுதல் என்பது குழந்தைகளைத்
துன்பத்தில் ஆழ்த்தினால், எப்படி கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை நாம்
புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்!

* ஒவ்வொரு சுற்றுப்புறமும்
உங்களுக்கு எதிராக மாறும் வலிமை கொண்டதென நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அமைதியான மகிழ்ச்சியான சுற்றுப்புறத்தை நீங்கள் உருவாக்கத் தவறி விட்டால்,
ஒவ்வொரு நட்பும், சுற்றமும், வீடும், நாடும், நகரமும் உங்களுக்கு எதிரான
ஒரு போர்க்கள மாக மாறக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

* எங்கே
போதனைகள் இருக்கிறதோ, அங்கே வழிபடுதலும் வணங்குதலும் தான் இருக்கிறது.
எங்கே வழிமுறைகள் இருக் கிறதோ, அங்கே தான் மாற்றங்கள் நிகழச் சாத்தியம்
இருக்கிறது.

* உங்கள் வாழ்வுச் சூழலில் குழப்பம் இருந்தால், அதை
நல்லது எனச் சொல்வேன். குழப்பத்தின் அடிப்படை எதுவென அலசக் கிடைத்த அரிய
வாய்ப்பு அது. உண்மையில் நீங்கள் யார் என்பதை விடுத்து வேறுவிதமாகக் கற்பனை
செய்திருக்கும் அறியாமை தான் உங்கள் குழப்பத்தின் ஆணிவேர். ஆகவே, என்னிடம்
அச்சம் கொண்டீர்கள் என்றால், அதை முழுமையாக, சாதகமாகப் பயன்படுத்தி,
பிரச்னையின் மையத்துக்கு உங்களை அழைத்துச் செல்வேன்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

	 ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்  Empty Re: ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்

Post by மாலதி August 5th 2011, 20:31

சிறு விஷயங்களுக்கு பெரும் போராட்டம்

*
மனிதமனம் பெரும்பாலும் போராட்டத்திலேயே இருக்கிறது. பலரும் சின்னச் சின்ன
விஷயங்களுக்காகக் கூட போராடிக் கொண்டிருக்கிறார்கள். மனதில் துயரம்
இருக்கிற வரைக்கும் இந்த போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

*
வாழ்க்கையை இயல்பாக அதன் எல்லாத் தன்மைகளையும் ஏற்றுக் கொண்டால்
ஏற்றத்தாழ்வுகள் மறைந்து விடும். ஆனந்தம் மட்டுமே அப்போது
நிலைத்திருக்கும். உள்ளத்தில் ஆனந்தம் நிலைத்திருக்குமானால் புறவுலக
வாழ்வின் இன்பதுன்பங்கள் நம்மை சிறிதும் பாதிப்பதில்லை.

* நாம் சில
விஷயங்களை வேண்டும், வேண்டாம் என்று சொல்லும் போதே நம் மனதில் சில
எதிர்பார்ப்புகள் தொடங்கி விடுகின்றன. எதிர்பார்ப்பு உண்டாகும்போது
வாழ்வில் விருப்பு, வெறுப்புகள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

*
மனிதர்கள் அன்பாகவும், ஆனந்தமாகவும் இருப்பது என்பது என்றோ எப்போதோ நிகழும்
அனுபவம் என்று எண்ணுகிறார்கள். அதற்கான வாய்ப்பு விநாடிக்கு விநாடி
இருக்கிறது. அன்பும், ஆனந்தமும் நிலையான உணர்வாக நம்மிடத்தில் இருக்க
வேண்டியவையாகும்.

* ஒரு மனிதர் தான் எண்ணுவது சரி என்று உணர்ந்து,
மிக அமைதியாக இருப்பாரேயானால் அவர் இறைத்தன்மைக்கு மிக நெருக்கமானவர். அவர்
வீண்விவாதங்கள், தேவையற்ற வாக்குவாதங்கள் போன்றவற்றில் சிறிதும்
ஈடுபடமாட்டார்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

	 ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்  Empty Re: ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்

Post by மாலதி August 5th 2011, 20:32

வாழ்வின் அழகான தருணங்கள்

*
அமைதி என்பது நம் உள்ளம் சார்ந்த விஷயமே. எந்த இடத்தில் இருந்தாலும் மனம்
கூடவே தான் இருக்கும். அமைதியைத் தேடி மலைகளுக்குச் செல்கிறீர்கள் என்றால்,
மலை அமைதியாக இருப்பதாகத் தான் அர்த்தமே தவிர நீங்கள் அமைதியாக இருப்பதாக
அர்த்தம் அல்ல. இரைச்சல் மிக்க சந்தைக்கு நடுவிலும் அமைதியாக இருக்க
முடிந்தால் தான் நீங்கள் அமைதியானவராக இருப்பதாக அர்த்தம்.

*
மகிழ்ச்சியாக இருக்கும் போது, உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு நீங்கள்
அற்புதமான மனிதர் தான். ஆனால், மகிழ்ச்சியின்றி இருக்கும்போது, இந்த
உலகுக்கு நீங்கள் ஒரு ஆபத்தான மனிதர். நமது மனநிலை நாம் இருக்கும்
சூழ்நிலையை வெகுவாகப் பாதிக்கிறது.

* உங்கள் வாழ்வின் மிக அழகான
தருணங்கள் நீங்கள் மகிழ்ச்சியைத் தேடிக் கொண்டு இருந்த கணங்கள் அல்ல.
நீங்கள் மனமகிழ்ச்சியை வெளிப்படுத்திய நல்ல தருணங்களே. அமைதியும் ஆனந்தமும்
வாழ்வின் உச்சக்கட்ட நிலை அல்ல. அவை வாழ்வின் தொடக்கமே.
* அன்பு என்பது
வெறும் பேச்சளவில் இருக்கக் கூடாது. அது செயல் வடிவம் பெற வேண்டும்.
மற்றவர்களுக்காக பொறுப்பேற்றுக் கொள்வது தான் உண்மையான அன்பின் அடையாளம்
ஆகும். முழுமையான பொறுப்புணர்வில் தான் மனிதன் அற்புதமான அனுபவங்களைப்
பெறுகிறான்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

	 ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்  Empty Re: ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்

Post by மாலதி August 5th 2011, 20:32

விடியலைக் காண்போம்


*
உங்களை ஆறுதல் அடையச் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. நீங்கள்
நிம்மதியாக உறங்குவது முக்கியம் அல்ல. உறக்கத்திலிருந்து எழுந்து விடியலில்
வெளிச்சத்தைக் காண்பது தான் முக்கியம்.

* வழிபடுதல் என்பது ஒரு
செயல் அல்ல. அது ஓர் இயல்பான பண்பு. நீங்கள் சுவாசிக்கும் காற்று,
அருந்தும் தண்ணீர், நடக்கும் பூமி, காணும் தாவரம், ரசிக்கும் பறவை, உண்ணும்
உணவு< என்று அனைத்தையும் ஆத்மார்த்தமாக வழிபாட்டு உணர்வோடு அணுகினால்
உங்கள் வாழ்வு அர்த்தமுள்ளதாகும்.

* நீங்கள் இயல்பான சுபாவத்துடன்
நடைபோட முடியாது. ஏனெனில், இந்த சமூகத்தின் ஆதிக்கம் உங்களிடம் அதிகமாக
இருக்கிறது. அதனால், பல மூடத்தனமான செயல்களை மனிதர்கள் செய்து கொண்டு
இருக்கிறார்கள்.

* உணவு என்பது உடல் தொடர்பான விஷயம். எந்த உணவு
உடலுக்குத் தேவைப்படுகிறதோ, சுகம் தருகிறதோ அதையே நீங்கள் உண்ண வேண்டும்.
ஆனால், உங்கள் உணவை மனம் முடிவு செய்யும்படி விட்டுவிட்டீர்கள். உடலுக்குத்
தகுந்த உணவையே தேர்ந்தெடுங்கள்.

* உங்களால் இயலாத ஒன்றைச் செய்ய
முடியவில்லை எனில், அதனால் எந்த பிரச்னையும் இல்லை. உங்களால் முடியக்கூடிய
ஒன்றைச் செய்யாமல் விடுவது தான் துயரமான ஒன்று. அதனால், இயன்ற செயல்களை
செய்வதில் ஆர்வம் காட்டுங்கள்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

	 ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்  Empty Re: ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்

Post by மாலதி August 5th 2011, 20:33

உடலும் மனமும் இணையட்டும்!

*
ஆனந்தமாக இருப்பது தான் உங்கள் அடிப்படை இயல்பு என்பதை மறவாதீர்கள்.
நீங்கள் எந்தச் செயலை தேர்ந்தெடுத்தாலும், அதைச் செயல் படுத்தும் போது
தீவிரமாயிருங்கள். முழு ஈடுபாடு கொண்டு செயலாற்றுங்கள்.

*
உங்களுக்குள் இருக்கும் ஆக்க சக்தியை தட்டி எழுப்புங்கள். முழுஈடுபாடு
கொண்டு செயலாற்றும் போது மட்டுமே நமக்குள் இருக்கும் ஆக்கசக்தி வெளிப்படத்
தொடங்கும்.

* கரையை விட்டு விலகத் தைரியமில்லாமல் கரையோரமாகவே
கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்தால் இலக்கை அடைய முடியாது. அதனால்
திருப்பங்கள் வேண்டுமானால் வாழ்க்கையில் புதிய முயற்சிகளை எடுத்துத் தான்
ஆக வேண்டும்.

* இளைஞர்களுக்கான தகுதி வலுவான உடல் அமைப்பு மட்டும்
என்று தவறாக எண்ணுகிறோம். திடமான மனம் கொண்டவனே உண்மையில் இளமை உடையவன்.
எதிர்பாராததையும் எதிர்கொள்ளும் துணிச்சல் நமக்கு வேண்டும்.

*
பொறாமையும், அச்சமும் நம்முள் உண்டாகும் போது அடுத்தவரை எதிரியாக நினைக்கத்
தொடங்குகிறோம். பொறாமை இருக்கும் இடத்திலோ, அச்சம் இருக்கும் இடத்திலோ
திறமை மழுங்கிப்போகும். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
(முயற்சியும்) உங்களுக்காகவே என்று எண்ணுங்கள்.

* உங்கள் உடல், மனம்
இரண்டின் ஆற்றலையும் முழுமையாகப் பயன் படுத்துவதில் தான் உண்மையான வெற்றி
அடங்கி இருக்கிறது. அப்போது நம் திறமை முழுவதுமாக வெளிப்படும். வெற்றி
எளிதில் நம் வசமாகும்.







மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

	 ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்  Empty Re: ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்

Post by மாலதி August 5th 2011, 20:33

கனவை செயல்படுத்துவது கடினம்

*
நீங்கள் செய்யும் ஒரு செயல் ஒருவருக்கு நல்லதாகவும், இன்னொருவருக்கு
கெட்டதாகவும் தெரியும். நீங்கள் யாருடன் பழகுகிறீர்களோ, அதை வைத்துத் தான்
அந்தச் செயலின் நன்மை தீமை தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், இயற்கை ஒரு
போதும் எந்த மனிதனிடமும் பாரபட்சம் காட்டுவதில்லை.


* மனிதர்கள்
கனவு காண்பது சுலபம். கனவு காண்பதற்குப் போராட்டம் தேவையில்லை. வலியோ
வேதனையோ இல்லை. ஆனால், கனவை நிஜமாக்கிப் பார்க்க எதையும் இழக்கத் தயாராக
இருக்க வேண்டும்.


* பணிவு என்பது தலைகுனிவு அல்ல. பணிவினை
பலவீனத்தின் அடையாளமாக நீங்கள் கருதலாம். உண்மையில் பணிவு மேன்மையான
கவுரவத்தைத் தரும். அதுதான் உங்களின் அசைக்க முடியாத பலமாக மாறிவிடும்.
நாளடைவில் முன் எப்போதும் இல்லாததை விட சக்தி மிகுந்தவனாக நீங்கள்
உணர்வீர்கள்.


* ஒரு கருவி ஒழுங்காக இருந்தால் தான் அதை
முழுமையாகப் பயன்படுத்த முடியும். உங்கள் மனமும் ஒரு கருவி தான். அது
அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருந்தால் தான் உங்களால் மற்றவர்களுக்கு சேவை
செய்ய முடியும். உள்ளத்தில் மகிழ்ச்சியை முழுமையாக உணர்பவர்கள்,
சுற்றியுள்ள மனிதர்களுக்கு அவரவர்களின் திறமைக்கேற்றபடி முடிந்த உதவிகளைச்
செய்து கொண்டிருப்பார்கள்.


* வாழ்க்கையின் அழகு நீங்கள் என்ன
செயலைச் செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அமைவதில்லை. செய்யும் செயலில்
உங்களை எந்த அளவுக்கு இதயப்பூர்வமாக அர்ப்பணித்துக் கொள்கிறீர்கள் என்பதைப்
பொறுத்து தான் அமைகிறது.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

	 ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்  Empty Re: ஆன்மிக சிந்தனைகள் -சத்குரு ஜக்கிவாசுதேவ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum