HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



ஜூலை மாத பலன்கள்!

Go down

ஜூலை மாத பலன்கள்! Empty ஜூலை மாத பலன்கள்!

Post by மாலதி August 1st 2011, 07:38


ஜோதிட சந்திரசேகர பாரதி வழங்கும்





2011 ஜூலை 1 முதல் 31 வரை

[You must be registered and logged in to see this image.]மேஷம்:

ஜன்ம ராசியில் குரு உலவுவது கோசாரப்படி சிறப்பாகாது
என்றாலும் அவரது பார்வை 5, 7, 9-ஆம் இடங்களுக்கு அமைவதால் மதிப்புக்கும்
அந்தஸ்துக்கும் குறைவிராது. மக்களால் ஓரிரு எண்ணங்கள் ஈடேறும்.
வாழ்க்கைத்துணை நலம் சிறக்கும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். பொருளாதார
நிலை சீராகவே இருந்துவரும். கூட்டுத் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம்.
தொலைதூரத் தொடர்புகள் ஓரளவு பயன்படும். உடல்நலம் சீராகும். 2-ல்
செவ்வாயும் கேதுவும் இருப்பதால் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படும்.
வீண் வம்பு வேண்டாம். எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது
அவசியமாகும். இயந்திரங்கள், எரிபொருட்கள், மின்சாதனங்கள் ஆகியவற்றின்
பக்கம் நெருங்கும்போது எச்சரிக்கை தேவை. 3-ல் சூரியனும் சுக்கிரனும்
இருப்பதால் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள்
உதவி புரிவார்கள். அரசியல்வாதிகளுக்கு வரவேற்பு கூடும்.


அரசுப்பணியாளர்கள் பதவி உயர்வு, இடமாற்றம் பெறுவார்கள்.
கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். மாதர்களது நோக்கம்
நிறைவேறும். 4-ல் புதன் இருப்பதால் வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம்.
மாணவர்களது திறமை பளிச்சிடும். 6-ல் உள்ள சனி எதிர்ப்புக்களைச் சமாளிக்கும்
ஆற்றலை தருவார். தொழிலாளர்களது நிலை உயரும். விவசாயிகளுக்கு லாபம்
பெருகும். 8-ல் ராகு இருப்பதால் பயணத்தால் அனுகூலமிராது. 17-ஆம் தேதி முதல்
சூரியன் 4-ஆமிடம் மாறுவதால் உடல்நலனில் கவனம் தேவைப்படும். 20-ஆம் தேதி
முதல் புதன் 5-ஆமிடம் மாறுவதால் சொந்தத் தொழிலில் கவனம் தேவை. 2-ஆம் தேதி
முதல் சுக்கிரன் 4-ஆமிடம் மாறுவதால் புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும்.
கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகமாகும். 25-ஆம் தேதி முதல் செவ்வாய்
3-ஆமிடம் மாறுவதால் மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலான காரியங்களில்
ஈடுபடுவீர்கள். நிலபுலங்கள் சேரும். சர்ப்ப சாந்தி செய்து கொள்ளவும். பரணி,
கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு விசேடமான மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூலை 3, 7, 10, 18, 21, 22, 27.

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு.

எண்கள்: 1, 5, 6, 8.







[You must be registered and logged in to see this image.]ரிஷபம:

கோசாரப்படி சுக்கிரன் ஒருவரே அனுகூலமாக
இருக்கிறார். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் எதிலும்
ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது அவசியமாகும். பதற்றம் அடியோடு
கூடாது. சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். கோபம் அதிகரிக்கும். மனத்தில்
ஏதேனும் சலனம் இருந்துவரும். உடல் ஆரோக்கியம் சீராக இராது. உஷ்ணாதிக்கம்
கூடும். கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது. வரவைக் காட்டிலும்
செலவுகள் அதிகமாகும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரிகள்
அகலக்கால் வைக்கலாகாது. தொழிலாளர்களுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும்
விரும்பத்தகாத இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும். இயந்திரங்கள்,
எரிபொருட்கள், மின் சாதனங்கள், தளவாடங்கள், வெடிப்பொருட்கள ஆகியவற்றின்
பக்கம் நெருங்கும்போது எச்சரிக்கை தேவை. வீண் வம்பு வேண்டாம். மக்கள்
நலனில் அக்கறை தேவைப்படும். புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் கூடாது.
மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்தினால்தான் ஓரளவாவது முன்னேற
முடியும். 17-ஆம் தேதி முதல் சூரியன் 3-ஆமிடம் மாறுவதால் அரசு
விவகாரங்கள் நிறைவேறும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். 20-ஆம் தேதி முதல்
புதன் 4-ஆமிடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு வெளிச்சமான சூழ்நிலை உருவாகும்.
மாணவர்களுக்கு மந்த நிலை அகலும். 23-ஆம் தேதி முதல் சுக்கிரன் 3-ஆமிடம்
மாறுவதும் அனுகூலமாகும். இதனால் இம்மாதம் முழுவதுமே கலைஞர்களுக்கும்
மாதர்களுக்கும் நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். 25-ஆம் தேதி முதல் செவ்வாய்
2-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. இதனால் குடும்பத்தில் கூச்சல், குழப்பங்கள்
உண்டாகும். பேச்சில் சூடான வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது நல்லது.
கிருத்திகை, மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்களுக்கு அனுகூலமான மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூலை 3, 7, 10, 18, 21, 22, 27.

திசைகள்: தென்கிழக்கு.

எண்கள்: 6, 8.









[You must be registered and logged in to see this image.]மிதுனம்:

புதன், குரு, சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக
இருப்பதால் உங்கள் அறிவாற்றலும் தோற்றப்பொலிவும் கூடும். மனத்துக்கினிய
சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். தொட்டது பொன் ஆகும் நேரமிது என்பதால்
நேரத்தை நல்லவிதமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். திருமணம் போன்ற சுப
காரியங்கள் இப்போது நிகழும். பண வரவு கூடும். திடீர் அதிர்ஷ்ட
வாய்ப்புக்களும் கூடிவரும். நண்பர்கள், உறவினர்களும் உதவி புரிவார்கள்.
நிலபுலங்களின் மூலம் வருமானம் கிடைத்துவரும். குடும்ப நலம் திருப்தி தரும்.
கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் அனுகூலம் உண்டாகும். செய்து
வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். பதவி உயர்வு, ஊதிய உயர்வு, இடமாற்றம்
ஆகியவை கிடைக்கும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். மாதர்கள் நலம்
பெறுவார்கள். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத்
திரவியங்களின் சேர்க்கை நிகழும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும்.
பயணத்தால் அனுகூலம் உண்டாகும். பிற மொழி, மத, இனக்காரர்கள் உங்களுக்கு உதவி
புரிவார்கள். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம் வளர்ச்சி
அடையும். ஜன்ம ராசியில் சூரியனும், 4-ல் சனியும், 12-ல் செவ்வாய், கேது
ஆகியோரும் உலவுவதால் உடல்நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். உஷ்ணாதிக்கம்
கூடும். கால் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். இயந்திரப்பணியாளர்கள்
விழிப்புடன் செயல்படுவது நல்லது. 17-ஆம் தேதி முதல் சூரியன் 2-ஆமிடம்
மாறுவதும் சிறப்பாகாது. பேச்சில் நிதானம் தேவை. 20-ஆம் தேதி முதல் புதன்
3-ஆமிடம் மாறுவதால் வியாபாரிகள் பொறுப்புடன் செயல்படுவது
அவசியமாகும்.மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்தவும். 23-ஆம் தேதி
முதல் சுக்கிரன் 2-ஆமிடம் மாறுவதால் எதிர்பாராத பணவரவு உண்டாகும். மகப்பேறு
அல்லது மக்களால் பாக்கியம் கிடைக்கும். 25-ஆம் தேதி முதல் செவ்வாய்
ஜன்மராசிக்கு மாறுவது சிறப்பாகாது. எதிலும் பதற்றப்படாமல் நிதானமாக
யோசித்து ஈடுபடுவது அவசியமாகும். புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு சுப
பலன்கள் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு அயல்நாட்டுத்
தொடர்பால் நலம் கூடும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூலை 3, 7, 10, 18, 21, 22, 27.

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு, தென்மேற்கு.

எண்கள்: 3, 4, 5, 6.











[You must be registered and logged in to see this image.]கடகம்:

செவ்வாய், சுக்கிரன், சனி, கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக
இருப்பதாலும், குரு 10-ல் உலவினாலும் 2, 4, 6-ஆம் இடங்களைப் பார்ப்பதாலும்
உங்கள் செயல்திறமை பளிச்சிடும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். செந்நிறப்
பொருட்கள் லாபம் தரும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகமாகும்.
வழக்கில் வெற்றி கிட்டும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்களின்
சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். கலைத்துறையினருக்கு நல்ல
வாய்ப்புக்கள் கூடிவரும்.
பொது நலப்பணிகளில் ஈடுபாடு அதிகமாகும். ஆன்மிகப் பணியாளர்கள்
வளர்ச்சி காண்பார்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கணவன்
மனைவி உறவு நிலை சீராகவே இருந்துவரும். தொழிலாளர்களது கோரிக்கைகளின்
ஒன்றிரண்டு இப்போது நிறைவேறும். 5-ல் ராகுவும் 10-ல் குருவும் இருப்பதால்
மக்கள் நலனிலும், நடத்தையிலும் அக்கறை தேவைப்படும். திடீர் அதிர்ஷ்ட
வாய்ப்புக்களை எண்ணி ஏமாற வேண்டாம். 12-ல் சூரியன் இருப்பதால் சிலர்
குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிவரும். தந்தையாலும்,
அரசாங்கத்தாராலும் செலவுகள் ஏற்படும். கண், வயிறு சம்பந்தப்பட்ட
உபத்திரவங்கள் உண்டாகும்.

புத பலம் குறைந்திருப்பதால் வியாபாரிகளும் தொழில் அதிபர்களும்
அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது
அவசியமாகும். 17-ஆம் தேதி முதல் சூரியன் ஜன்ம ராசிக்கு மாறுவதால்
உஷ்ணாதிக்கத்தால் பாதிக்கப்பட நேரலாம். 20-ஆம் தேதி முதல் புதன் 2-ஆமிடம்
மாறுவதால் வியாபாரம் சூடு பிடிக்கும். 23-ஆம் தேதி முதல் சுக்கிரன் ஜன்ம
ராசிக்கு மாறுவதால் புதிய பொருட்சேர்க்கை நிகழும். 25-ஆம் தேதி முதல்
செவ்வாய் 12 -ஆமிடம் மாறுவதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். கைப்பொருளைப்
பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. தொழிலில் பிரச்னைகள் ஏற்படும்.
உடன்பிறந்தவர் நலனில் கவனம் தேவைப்படும்.

புனர்பூசம், ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு விசேடமான
நற்பலன்கள் உண்டாகும். பூச நட்சத்திரக்காரர்கள் விழிப்புடன் இருப்பது
அவசியமாகும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூலை 3, 7, 10, 21, 22, 27.

திசைகள்: மேற்கு, தெற்கு, வடமேற்கு, தென்கிழக்கு.

எண்கள்: 6, 7, 8, 9.











[You must be registered and logged in to see this image.]சிம்மம்:
ராசிநாதன் சூரியன் 11-ல் உலவுவதாலும், செவ்வாய், குரு,
சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதாலும் உங்கள் சுயபலம்
கூடும். அந்தஸ்தும் மதிப்பும் உயரும். நிர்வாகத்திறமையால் சாதனை பல
புரிவீர்கள். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். முக்கியஸ்தர்கள்
உங்களுக்கு உதவி புரிவார்கள். அரசாங்கத்தாரால் கெளரவிக்கப்படுவீர்கள்.
புதிய பதவி, பட்டங்களும் கிடைக்கும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில்
வெற்றி கிடைக்கும். மனத்தில் துணிவு கூடும். செயற்கரிய காரியங்களையும்
சுலபமாகச் செய்து முடிப்பீர்கள். நிலபுலங்கள் லாபம் தரும். பெற்றோரால்
மக்களுக்கும் மக்களால் பெற்றோருக்கும் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நிலை
உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். திருமணம் போன்ற
சுபகாரியங்கள் நிகழும். மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும்.
கலைஞர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள். உத்தியோகஸ்தர்களது நோக்கம்
நிறைவேறும். ஆசிரியர்கள் போற்றப்படுவார்கள். மருத்துவர்களுக்கு நற்பெயர்
கிடைக்கும். ஆன்மிகவாதிகள் மதிப்பு உயரப் பெறுவார்கள். மகப்பேறு பாக்கியம்
உண்டாகும். புதன், சனி, ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால்
குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படும். குடும்பத்தை விட்டுச் சிலர்
பிரிந்திருக்க நேரலாம். பேச்சில் நிதானம் தேவை. வீண் அலைச்சலைத் தவிர்ப்பது
நல்லது. 17-ஆம் தேதி முதல் சூரியன் 12-ஆமிடம் மாறுவதால் அரசு
விவகாரங்களில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியமாகும்.தந்தை நலம் கவனிக்கப்பட
வேண்டிவரும். 20-ஆம் தேதி முதல் புதன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவது
சிறப்பாகாது. வியாபாரத்தில் முழுக்கவனம் செலுத்துவது அவசியம். 23-ஆம் தேதி
முதல் சுக்கிரன் 12-ஆமிடம் மாறுவதால் நலமே உண்டாகும். சுபச் செலவுகள்
அதிகரிக்கும். வாழ்க்கை வசதிகள் பெருகும். 25ஆம் தேதி முதல் செவ்வாய்
11-ஆமிடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

பூர, உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு சுப பலன்கள் கூடும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூலை 3, 7, 10, 18, 27.

திசைகள்: வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, தெற்கு.

எண்கள்: 1, 3, 6, 7, 9.









[You must be registered and logged in to see this image.]கன்னி:
ராசி நாதன் புதன் 11-ஆமிடத்தில் உலவுவது சிறப்பாகும். சூரியனும்
அனுகூலமாக உலவுகிறார். இதனால் முக்கியமான ஓரிரு எண்ணங்கள் இப்போது
நிறைவேறும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். சொந்தமாகத் தொழில்
புரிபவர்கள் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள். கணிதம், எழுத்து, பத்திரிகை,
சிற்பம், ஓவியம், தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வருமானம் கூடும்.
மாணவர்களது திறமை வெளிப்படும். அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள்,
நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றமான சூழ்நிலை
நிலவிவரும். 3-ல் ராகு உலவுவதால் பிரச்னைகள் குறையும். வெளியூர்,
வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். பயணத்தின் மூலம் ஓரிரு எண்ணங்கள்
ஈடேறும். ஜன்ம ராசியில் சனியும், 8-ல் குருவும் இருப்பதால் அதிகம் உழைக்க
வேண்டிவரும். அலைச்சலும் அதிகமாகும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது.
9-ல் செவ்வாயும் கேதுவும் உலவுவதால் தந்தை நலம் பாதிக்கும். தொலைதூரத்
தொடர்பின்போது பாதுகாப்பு அவசியமாகும். முக்கியமான பணிகளில் வெற்றி காண
அரும்பாடுபட வேண்டிவரும். எதையும் சுலபமாகப் பெற முடியாமல் போகும்.


17-ஆம் தேதி முதல் சூரியன் 11-ஆமிடம் மாறுவது சிறப்பாகும்.
அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். 20-ஆம் தேதி முதல் புதன் 12-ஆமிடம்
மாறுவதால் செய்து வரும் தொழிலில் அதிகம் கவனம் தேவை. 23-ஆம் தேதி முதல்
சுக்கிரன் 11-ஆமிடம் மாறுவதால் பண வரவு சற்று அதிகரிக்கும். தந்தையால்
ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். 25-ஆம் தேதி முதல் செவ்வாய் 10-ஆமிடம் மாறுவதால்
துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்ப்புக்கள் குறையும்.
உடன்பிறந்தவர்களால் ஓரிரு காரியங்களில் வெற்றி கிட்டும்.

உத்திரம், சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு சங்கடங்கள் குறையும். ஹஸ்த நட்சத்திரக்காரர்களுக்குச் சோதனையான நேரமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூலை 3, 7, 10, 18, 21, 22, 27.

திசைகள்: கிழக்கு, வடக்கு, தென்மேற்கு.

எண்கள்: 1, 4, 5.









[You must be registered and logged in to see this image.]துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் 9-ல் உலவுவதாலும், புதன், குரு
ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதாலும் உங்கள் மதிப்பும் அந்தஸ்தும்
உயரும். உடல்நலம் சீராகவே இருந்துவரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.
கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். மாதர்களது எண்ணம்
ஈடேறும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள்
ஆகியவற்றின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைத்துவரும். மனத்தில்
மகிழ்ச்சி பெருகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக்
கூடிவரும். தெய்வப் பணிகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். எதிர்ப்புக்கள்
அடங்கியிருக்கும். பயணத்தால் நலம் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம்
பெருகும். மாணவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். கணிதம், எழுத்து, பத்திரிகை,
சிற்பம், ஓவியம், தரகு, கமிஷன் ஏஜன்ஸி போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள்
சுபிட்சம் காண்பார்கள். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். மக்களால் அனுகூலமும்
உண்டாகும். சுப காரியங்களுக்காகச் செலவு செய்வீர்கள். உத்தியோகஸ்தர்களது
நிலை உயரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை மாதப்
பின்பகுதியில் கிடைக்கும். சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோரது
சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.
இயந்திரப்பணியாளர்கள், இஞ்சினீயர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது
அவசியமாகும். சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். முன்பின் தெரியாதவர்களை நம்பி
ஏமாற வேண்டாம். 17-ஆம் தேதி முதல் சூரியன் 10-ஆமிடம் மாறுவதால் அரசு
விவகாரங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். முக்கியஸ்தர்களது தொடர்பு நலம்
தரும். 20-ஆம் தேதி முதல் புதன் 11-ஆமிடம் மாறுவதால் வியாபாரத்தில் அதிக
லாபம் பெறமுடியும். தந்தையால் நலம் உண்டாகும். 23-ஆம் தேதி முதல் சுக்கிரன்
10-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. 25-ஆம் தேதி முதல் செவ்வாய் 9-ஆமிடம்
மாறுவதும் சிறப்பாகாது. பிரச்னைகள் ஏற்படும் என்றாலும் குரு பலம்
இருப்பதால் எதையும் சமாளித்துவிடுவீர்கள்.

சித்திரை, விசாக நட்சத்திரக்காரர்களுக்கு சுப காரியங்கள்
நிகழும். பொருளாதார நிலை உயரும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும்.
சுவாதி நட்சத்திரக்காரர்களுக்குப் பண வரவு கூடும் என்றாலும் குடும்பத்தில்
அமைதி காண்பது அரிதாகும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூலை 3, 7, 10, 18, 21, 22, 27.

திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.

எண்கள்: 3, 5, 6.




[You must be registered and logged in to see this image.]விருச்சிகம்:
சுக்கிரன், சனி ஆகியோரது சஞ்சாரம்
அனுகூலமாக இருப்பதால் எவ்வளவுக்கெவ்வளவு உழைப்பீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு
பயன் பெறுவீர்கள். சோர்வுக்கும் சோம்பலுக்கும் இடம் தரலாகாது.
கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். புதிய ஆடை, அணிமணிகள்
சேரும். கேளிக்கை, உல்லாசங்களிலும்; விருந்து, உபசாரங்களிலும் கலந்து
கொள்வீர்கள். மாதர்களுக்கு அனுகூலமான போக்குத் தென்படும்.
தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை தொடர்ந்து
நீடிக்கும். பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் பொருட்கள் லாபம் தரும்.
பழைய பொருட்களாலும் ஆதாயம் கிடைத்துவரும்.


தோல் பொருட்கள், கறுப்பு நிறப்பொருட்கள், விளைபொருட்கள் ஆகியவை
லாபம் கொண்டுவரும். ஜன்ம ராசியில் ராகு இருப்பதால் அலைச்சலைத் தவிர்க்க
இயலாமல் போகும். உடல்நலனில் கவனம் செலுத்திவருவது நல்லது. 6-ல் குரு
இருப்பதால் பணம் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. நண்பர்களே கூட
விரோதிகளாகலாம். மக்களால் மன வருத்தம் ஏற்படும். வயிறு சம்பந்தப்பட்ட
உபாதைகள் ஏற்படும். 7-ல் செவ்வாயும் கேதுவும் உலவுவதால் எதிர்ப்புக்கள்
வலுக்கும். யாரிடத்திலும் வெளிப்படையாகப் பழகலாகாது. பயணத்தின்போது
பாதுகாப்பு அவசியம் தேவை. எதிலும் வேகம் கூடாது. 8-ல் சூரியன் இருப்பதால்
உஷ்ணாதிக்கம் கூடும். தந்தையாலும் அரசாங்கத்தாராலும் பிரச்னைகள் சூழும்.
புதன் 9-ல் இருப்பதால் நண்பர்கள், உறவினர்களால் அதிகம் நலமிராது. 17-ஆம்
தேதி முதல் சூரியன் 9-ஆமிடம் மாறுவதால் தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு
கூடும். தெய்வ காரியங்கள் நிகழும். 20-ஆம் தேதி முதல் புதன் 10 -ஆமிடம்
மாறுவதால் வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். மாணவர்கள்
வளர்ச்சி காண்பார்கள். 23 -ஆம் தேதி முதல் சுக்கிரன் 9-ஆமிடம் மாறுவதால்
கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் வெற்றிகள் குவியும். தொலைதூரத் தொடர்பு
பயன்படும். 25-ஆம் தேதி முதல் செவ்வாய் 8-ஆமிடம் மாறுவதால் உடல்நலம்
பாதிக்கும். மதிப்பு குறையும்.


மறைமுக உறுப்புக்களில் நோய் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில்
கவனம் தேவை. எக்காரியத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து, நிதானமாக
ஈடுபடுவது நல்லது. சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். விசாகம், கேட்டை
நட்சத்திரக்காரர்களுக்கு விசேடமான மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூலை 3, 7, 10, 18, 21, 22, 27.

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு.

எண்கள்: 6, 8.









[You must be registered and logged in to see this image.]தனுசு:

செவ்வாய், புதன், குரு, சனி, கேது
ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் அறிவாற்றல் பளிச்சிடும்.
எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். எதிர்ப்புக்கள் விலகும்.
மனத்துணிச்சல் கூடும். தன்னம்பிக்கை பெருகும். வழக்கில் வெற்றி கிட்டும்.
விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி காண்பீர்கள். வியாபாரிகளுக்கு லாபம்
அதிகரிக்கும். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு, கமிஷன்
ஏஜன்ஸி போன்ற இனங்களைச் சேர்ந்தவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையைக்
காண்பார்கள். மகப்பேறு பாக்கியம் கிட்டும். பெற்றோரால் மக்களுக்கும்
மக்களால் பெற்றோருக்கும் அனுகூலம் உண்டாகும். தெய்வப் பணிகள் நிறைவேறும்.
திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். பொருளாதார நிலை உயரும். திடீர்
அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள்
லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள்,
ஆன்மிகவாதிகள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். மனத்தில் தெளிவு
பிறக்கும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். 7-ல் சூரியனும் சுக்கிரனும்
உலவுவதால் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். அனுசரித்துப்
போவது நல்லது. கலைஞர்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியமாகும். 12-ல் ராகு
இருப்பதால் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. பயணத்தால் அதிகம்
அனுகூலமிராது. 17-ஆம் தேதி முதல் சூரியன் 8-ஆமிடம் மாறுவதால் அரசாங்கத்தின்
மூலம் பிரச்னைகள் சூழும். தந்தை நலம் பாதிக்கும். உஷ்ணாதிக்கம் கூடும்.
20-ஆம் தேதி முதல் புதன் 9-ஆமிடம் மாறுவதால் தர்மப்பணிகளிலும்
தெய்வப்பணிகளிலும் ஈடுபாடு கூடும். 23-ஆம் தேதி முதல் சுக்கிரன் 8 -ஆமிடம்
மாறுவதால் கலைஞர்களுக்குப் பிரச்னைகள் விலகும். நல்ல வாய்ப்புக்கள்
கூடிவரும். 25-ஆம் தேதி முதல் செவ்வாய் 7-ஆமிடம் மாறுவதால் எதிர்ப்புக்கள்
தலைதூக்கும். வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவை. பூராடம், உத்திராட
நட்சத்திரக்காரர்களுக்கு அனுகூலமான மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூலை 3, 7, 10, 18, 21, 22, 27.

திசைகள்: வடகிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு.

எண்கள்: 3, 5, 7, 8, 9.







[You must be registered and logged in to see this image.]மகரம்:

சூரியன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள்
நிர்வாகத்திறமை கூடும். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த சலுகைகள்
மற்றும் உதவிகள் கிடைக்கும். முக்கியஸ்தர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
எதிர்பாராத பொருள்வரவு உண்டாகும். பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள்
உங்களுக்கு உதவுவார்கள். அரசுப்பணியாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை
நிலவிவரும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். பயணத்தின் மூலம் ஓரிரு
எண்ணங்கள் கைகூடும். இதர கிரகங்களின் சஞ்சாரம் கோசாரப்படி அனுகூலமாக
இல்லாததால் அலைச்சல் அதிகமாகும். மக்களால் மன வருத்தம் ஏற்படும். வயிறு
சம்பந்தப்பட்ட உபாதைகள் உண்டாகும். கெட்ட பழக்க, வழக்கங்களுக்கு இடம்
தரவேண்டாம். கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. விட்டுக் கொடுத்து
பழகிவருவதன் மூலம் பிரச்னைகளைக் குறைத்துக் கொள்ளலாம். கூட்டுத் தொழிலில்
அதிகம் கவனம் தேவை. பெண்களுக்கும், கலைத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும்
சோதனையான நேரமிது. கெட்டவர்களின் தொடர்பு கூடாது.

17-ஆம் தேதி முதல் சூரியன் 7-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது.
வாழ்க்கைத்துணை நலம் பாதிக்கும். 20-ஆம் தேதி முதல் புதன் 8-ஆமிடம்
மாறுவதால் வியாபாரிகளுக்கு வெளிச்சமான சூழ்நிலை உருவாகும். 23-ஆம் தேதி
முதல் சுக்கிரன் 7-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகாது. 25-ஆம் தேதி முதல்
செவ்வாய் 6-ஆமிடம் மாறுவதால் மனத்துணிச்சல் கூடும். எதிரிகளின் கரம்
வலுக்குறையும். பிரச்னைகள் விலகும். எடுத்த காரியங்களில் திறம்பட ஈடுபட்டு
வெற்றி பெறுவீர்கள். நிலபுலங்கள் சேரும்.

உத்திராடம், அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூலை 3, 7, 10, 18, 21, 22, 27.

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு.

எண்கள்: 1, 4.









[You must be registered and logged in to see this image.]கும்பம்:

புதன், சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால்
உங்கள் அறிவாற்றலும் தோற்றப்பொலிவும் பளிச்சிடும். எதிர்ப்புக்கள்
குறையும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். கணிதம், எழுத்து, பத்திரிகை,
சிற்பம், ஓவியம், தரகு போன்ற இனங்கள் ஆக்கம் தரும். கலைத்துறையினருக்கு
சுபிட்சம் உண்டாகும். மாதர்கள் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள்.
கேளிக்கை, உல்லாசங்களிலும், விருந்து, உபசாரங்களிலும் ஈடுபாடு
அதிகரிக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் வலுக்கும். அதனால்
அனுகூலமும் உண்டாகும். பயணத்தின் மூலம் முக்கியமான காரியங்கள் நிறைவேறும்.
குரு 3-ல் இருப்பதால் பொருள் கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை.
திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழ ஜாதக பலம் தேவை. மக்களால் சிறுசிறு
பிரச்னைகள் ஏற்படும். தொழில் அதிபர்கள் புதிய துறைகளில் அதிகம் பொருளை
முதலீடு செய்யலாகாது. பிறரால் ஏமாற்றப்பட நேரலாம்; எச்சரிக்கை தேவை. 4-ல்
செவ்வாயும் கேதுவும் உலவுவதால் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள்
சூழும். அலைச்சல் அதிகரிக்கும். தாய் நலனில் கவனம் தேவைப்படும். சனி 8-ல்
இருப்பதால் எதையும் சிரமப்பட்டே நிறைவேற்ற வேண்டிவரும். சோர்வுக்கு இடம்
தரலாகாது. உழைப்புக்கு முக்கியத்துவம் தருவது அவசியமாகும். வீண் செலவுகளைத்
தவிர்க்கவும். 17-ஆம் தேதி முதல் சூரியன் 6-ஆமிடம் மாறுவதால் அரசு உதவி
கிடைக்கும். நிர்வாகத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். தந்தையால்
அனுகூலம் உண்டாகும். 20-ஆம் தேதி முதல் புதன் 7-ஆமிடம் மாறுவது
சிறப்பாகாது. 23-ஆம் தேதி முதல் சுக்கிரன் 6-ஆமிடம் மாறுவதும் குறை ஆகும்.
இதனால் வாழ்க்கைத்துணை நலம் பாதிக்கும். கூட்டாளிகளால் பிரச்னைகள் சூழும்.
25-ஆம் தேதி முதல் செவ்வாய் 5-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகாது. மக்கள் நலனில்
கவனம் செலுத்த வேண்டிவரும்.

அவிட்ட, பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு விசேடமான மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூலை 3, 10, 18, 21, 22, 27.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.

எண்கள்: 4, 5, 6.









[You must be registered and logged in to see this image.]மீனம்:

செவ்வாய், குரு, சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக
இருப்பதால் உங்கள் மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
எடுத்த காரியங்களில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். இயந்திரங்கள்,
எரிபொருட்கள், தளவாடங்கள், வெடிப்பொருட்கள், மின்சாதனங்கள் ஆகியவை லாபம்
தரும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். பேச்சாற்றலால்
மற்றையோரைக் கவருவீர்கள். எதிர்ப்புக்கள் விலகும். வழக்கில் வெற்றி
கிட்டும். விளையாட்டு விநோதங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் பரிசுகளையும்
பாராட்டுகளையும் பெறுவார்கள். பொருளாதார நிலை உயரும். எதிர்பாராத திடீர்
அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். கடன் உபத்திரவம் குறையும். பிரச்னைகள்
எளிதில் தீரும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். முக
வசீகரம் கூடும். குடும்பத்தார் உங்களுக்கு உதவுவார்கள். கணவன் மனைவி உறவு
நிலை சீராகவே இருந்துவரும். மருத்துவம், ரசாயனம், விஞ்ஞானம், ஆன்மிகம்
போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். கொடுத்த வாக்கை
காப்பாற்றுவீர்கள். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும்.
மாதர்கள் நலம் கூடப் பெறுவார்கள். புதிய ஆடை, அணிமணிகள் சேரும்.கேளிக்கை,
உல்லாசங்களிலும்; விருந்து, உபசாரங்களிலும் பங்கு கொள்வீர்கள். 4-ல்
சூரியனும் 5-ல் புதனும், 7-ல் சனியும், 9-ல் ராகுவும் இருப்பதால் அலைச்சல்
அதிகமாகும். உடல்நலனில் கவனம் தேவைப்படும். கெட்டவர்களின் சகவாசம்
கூடாது. தொலைதூரத் தொடர்பின்போது விழிப்புத் தேவை. 17-ஆம் தேதி முதல்
சூரியன் 5-ஆமிடம் மாறுவதால் மக்கள் நலனில் கவனம் தேவைப்படும். 20-ஆம் தேதி
முதல் புதன் 6-ஆமிடம் மாறுவதால் வியாபாரம் பெருகும். 23-ஆம் தேதி முதல்
சுக்கிரன் 5-ஆமிடம் மாறுவதால் கலைஞானம் பெருகும். 25-ஆம் தேதி முதல்
செவ்வாய் 4-ஆமிடம் மாறுவதால் நிலபுலங்களால் வருமானம் கிடைக்கும். என்றாலும்
அலைச்சலைத் தவிர்க்க இயலாமல் போகும். தாய் நலனில் கவனம் தேவைப்படும்.
பெற்றோருக்கும் உங்களுக்குமிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு
விலகும்.

பூரட்டாதி, ரேவதி நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்களுக்கு சுப பலன்கள் கூடும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூலை 3, 7, 18, 21, 22, 27.

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, தெற்கு, வடமேற்கு.

எண்கள்: 3, 6, 7, 9.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum