HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



நவக்கிரகளை தனித்தனியே வழிபாடு செய்யும் முறைகள்:

Go down

நவக்கிரகளை தனித்தனியே வழிபாடு செய்யும் முறைகள்: Empty நவக்கிரகளை தனித்தனியே வழிபாடு செய்யும் முறைகள்:

Post by மாலதி July 6th 2011, 14:02



சூரியபகவான் வழிபாடு (ஞாயிறு)
சூரியனுக்குரிய
நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதமிருந்து வணங்க
வேண்டும். இதனை ஆதி விரதமென்றும் கூறுவார்கள். சூரியனுக்கு அதிபதி சிவன்
என்பதால் சிவன் கோவில்களில் அர்ச்சனை செய்து வழிபடுவதோடு நவக்கிரக
சந்நிதியை வலம்வந்து சூரிய பகவானை நோக்கி

காசினி இருளை நீக்கும் கதிரொளி ஆகியெங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்போடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி !

என்று
தோத்திரம் சொல்லி வணங்க வேண்டும். இவ்வாறு வணங்குவதால் உடற்பிணி கண்களில்
ஏற்படும் நோய்கள் நீங்குமென்று கூறப்படுகிறது. சாதகத்தில் கிரக
தோசமுள்ளவர்களும் மற்றும் சூரிய திசை நடப்பவர்களும் ஞாயிறு விரதமிருத்தல்
வேண்டும்.


சந்திரன் வழிபாடு (திங்கள்)
சந்திர தோசம்
உள்ளவர்கள் இவ்விரதத்தை அனுட்டித்தால் தோசம் நீங்கப்பெறுவார்கள். சிவன்
கோவில்களில் நவக்கிரகங்களை வணங்கி சந்திர பகவான் முன் நின்று

அலைகடல் அதனில் நின்றும் அன்று வந்துதித்த போது
கலைவளர் திங்களாகிக் கடவுளென் றெவரும் ஏத்தும்
சிலைமுதல் உமையாள் பங்கன் செஞ்சடைப் பிறையாய்மேரு
மலைவல மாகவந்த மதியமே போற்றி போற்றி !

என்று தோத்திரம் சொல்லி வணங்குபவர்கள் ஆயுள் விருத்தியும் சகல செல்வ போகங்களும் பெறுவார்களென்று சொல்லப்படுகிறது.

செவ்வாய் வழிபாடு (அங்காரகன்)
செவ்வாய்
தோசமுள்ளவர்கள் செவ்வாய் திசை நடப்பவர்கள் இவ்விரதத்தை மேற்கொள்ளுவதால்
குறைபாடுகள் நீங்க வாயப்பு உண்டென்று சொல்லப்படுகிறது. காலையில்
அம்மனையும் மாலையில் முருகனையும் வழிபடுவதோடு நவக்கிரகத்தை வலம்வந்து
செவ்வாய் கிரகத்தின் முன்னின்று

வசனநல் தைர்யத்தோடு மன்னவர் சபையில் வார்த்தை
புசபல பராக்ர மங்கள் போர்தனில் வெற்றி ஆண்மை
நிசமுடன் அவரவர்க்கு நீள்நிலம் தனில் அளிக்கும்
குசன் நிலமகனாம் செவ்வாய் குரைகழல் போற்றி போற்றி !

என்று
தோத்திரம் சொல்லி வணங்கினால் மேற்கூறியபடி தோசநிவாரணம் ஏற்படுவதோடு
அம்மனின் அருள் கிடைக்கும், இரத்த சம்பந்தமான நோய்களும் நீங்கும் . வெற்றி
கிட்டும். குறிப்பாக இவ்விரதத்தை அனுட்டிக்கும் கன்னிப்பெண்கள் மஞ்சள்,
குங்குமம், வெற்றிலை போன்ற மங்கலப் பொருட்களை சுமங்கலிப் பெண்களுக்கு
வழங்க வேண்டும்.

புதன் வழிபாடு
புதன் விரதத்தினை
மேற்கொள்ளுபவர்களுக்கு கல்வி, ஞானம், தனம் போன்றவை பெருகுமென்பதால்
ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் அனைவரும் அனுட்டிக்கலாம். புதன்
கிழமையன்று நாராயணனை வழிபட்டு பின்னர் நவக்கிரகங்களை வணங்கி புத பகவான்
முன்

மதனநூல் முதல்நான்கு மறைபுகல் கல்வி ஞானம்
விதமுடன் அவரவர்க்கு விஞ்சைகள் அருள்வோன் திங்கள்
சுதன்பசு பாக்கியம் சுகம்வபல கொடுக்க வல்லான்
புதன் கவி புலவன் சீர்மமால் பொன்னடி போற்றி போற்றி !

என்று தோத்திரம் பாடி வணங்குவதால் சகல சிறப்புக்களும் பொருந்தி வருமென்று கூறப்படுகிறது.

குரு வழிபாடு (வியாழன்)
குரு
தோசமுள்ளவர்கள் மட்டுமன்றி ஏழ்மையில் இருப்பவர்கள், திருமணம் ஆகாதவர்கள்,
குடும்பத்தைப் பிரிந்தவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் அனைவரும்
இந்த விரதத்தை மேற்கொண்டால் நல்ல பலன் கிட்டுமென்று கூறப்பட்டுள்ளது.
நவக்கிரகங்களை வலம்வந்து வியாழ பகவானை நோக்கி

மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க் கரசன் மந்திரி
நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக் கதிபனாகி
நிறைதனம் சிவிகை மண்ணில் நீடு போகத்தை நல்கும்
இறையவன் குரு வியாழன் இருமலர்ப்பாதம் போற்றி !

என்னும் தோத்திரம் பாடி வணங்க வேண்டும். இவ்வாறு விரதத்தை மேற்கொள்ளுவதன் பலனாக
நல்வாழ்க்கை, நன்மக்கட்பேறு என்பன கிட்டும்.

சுக்கிரன் விரதம் (வெள்ளி)
இவ்விரதத்தை
சுக்கிரவார விரதமென்றும் கூறுவார்கள். அம்பாளையும் முருகனையும் வணங்கி
விரதம் அனுட்டிக்கப்படவேண்டும். சிலர் அவர்களது இட்டதெய்வங்களை வணங்கி
மேற்கொள்ளுவதுமுண்டு. நவக்கிரக சந்நிதியை வலம்வந்து சுக்கிர பகவானை வணங்கி

மூர்க்கவான் சூரன் வாணன் முதலினோர் குருவாய் வையம்
காக்கவான் மழை பெய்விக்கும் கவிமகன் கனகம் ஈவோன்
தீர்கவா னவர்கள் போற்றச் செத்தவர் தமை எழுப்பம்
பார்க்கவன் சுக்கிரன் தன் பாத பங்கயங்கள் போற்றி !

என்ற
தோத்திரத்தைப் பாடி வணங்குவதனால் புகழ், செல்வங்கள் பெருகுவதோடு
பாவக்கிரகங்களின் பார்வையினால் பலமிழந்திருக்கக்கூடிய சுக்கிர பகவான்
தொல்லைகள் நீங்கப் பெற்று நற்பலன்களை அளிப்பதற்கு வாய்ப்புண்டாகும்.

சனீஸ்வரன் விரதம் (சனி)
அட்டமத்தில்
சனி இருப்பவர்களும் ஏழாண்டுச் சனி இருப்பவர்களும் இந்த விரதத்தை
மேற்கொள்ளுவதால் தொல்லைகள் குறைவதோடு நன்மையுமுண்டாகும். பெருமாளை வணங்கி
நவக்கிரக சந்;நிதியிலே நவக்கிரகங்களை வலம்வந்து சனீஸ்வரனுக்கு எள்ளை
துணியிலே கட்டி நல்லெண்ணெய் ஊற்றித் தீபம் ஏற்றி

முனிவர்கள் தேவ ரேமும் மூர்த்திகள் முதலி னார்கள்
மனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது அல்லால் உண்டோ
கனிவுள தெய்வம் நீயே கதிர்சேய காகம் ஏறுஞ்
சனியனே உனைத்துதிப்பேன் தமியேனுக் கருள் செய்வாயே !

என்று
தோத்திரம் சொல்லி வணங்குவதால் சகல துன்பங்களும் நீங்கப்பெற்று நீண்ட ஆயுள்
கிட்டும். இந்த சனீஸ்வர விரதத்தை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அனுட்டிக்க
முடியாதவர்கள் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் மட்டுமாவது
அனுட்டிக்க வேண்டும்.


இராகுபகவான் விரதம்
இராகு
தோசமுள்ளவர்கள் சனிக்கிழமைகளில் இவ்விரதத்தை அனுட்டிக்கலாம். காளி
கோவிலுக்குச் சென்று வேப்பெண்ணெய் விளக்கேற்றி நவக்கிரக சந்நிதியில் இராகு
பகவானை வேண்டி

வாகுசேர் நெடுமான் முன்னம் வானவர்க்கு அமுதம் ஈயப்
போகும் அக்காலை உன்றன் புணர்ப்பினால் சிரமே அற்றுப்
பாகுசேர் மொழியன் பங்கன் பரன் கையில் மீண்டும் பெற்ற
ராகுவே உனைத் துதிப்பேன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே !

என்ற தோத்திரம் பாடி வணங்குவதால் சகல நோய்களும் நீங்கி ஆரோக்கியமுண்டாகும்.


கேதுபகவான் விரதம்
இவ்விரதம் அனுட்டிப்பவர்கள் செவ்வாய்க் கிழமைகளில் விநாயரை வணங்கி பின்னர் நவக்கிரக சந்நிதியை வழிபட்டு கேது பகவானை வணங்கி

பொன்னையின் னுரத்திற் கொண்டோன் புலவர்தம் பொருட்டால் ஆழி
தன்னையே கடைந்து முன்னம் தண் அமுது அளிக்கல் உற்ற
பிள்ளை நின் கரவால் உண்ட பெட்பினிற் சிரம் பெற்றுயர்ந்தாய்
என்னையாள் கேதுவே இவ்விருநிலம் போற்றத் தானே !

என்று தோத்திரம் சொல்லி வணங்கிவர செல்வம், ஞானம், வெற்றி, புகழ் அனைத்தும் வந்து சேரும்.


நவக்கிரஹ ஸ்லோகம்

சூரிய காயத்ரி

அஸ்வத் வஜாய வித்மஹே! பத்மஹஸ்தாய தீமஹி!

தந்நோ சூர்ய ப்ரசோதயாத் !!

சந்திர காயத்ரி

நிசாகராய வித்மஹே! கலாநாதாய தீமஹி!!

தந்நோ ஸ்சந்த்ர ப்ரசோதயாத்!!

அங்காரக (செவ்வாய்) காய்த்ரீ

அங்காரகாய வித்மஹே! பூமி பாலாய தீமஹி!1

தந்நோ குஜ ப்ரசோதயாத்!!

புதன் காயத்ரீ

ஆத்ரேயாய வித்மஹே! இந்து புத்ராய தீமஹி!!

தந்நோ புத ப்ரசோதயாத்!!

குரு (வியாளன்) காயத்ரி

ஆங்கீரஸாய வித்மஹே! சராசார்யாய தீமஹி!!

தந்நோ குரு ப்ரசோதயாத்!!

சுக்கிர (வெள்ளி) காயத்ரி

ராஜதாபாய வித்மஹே! ப்ருகு கதாய தீமஹி!!

தந்நோ சுக்ர ப்ரசோதயாத்!!

சனி காயத்ரி

பங்கு பாதாய வித்மஹே! சூர்ய புத்ராயா தீமஹி!!

தந்நோமந்த ப்ரசோதயாத்!!

ராகு காயத்ரி

ஸூக தந்தாய வித்மஹே! உக்ரரூபாய தீமஹி!!

தந்நோ ராகு ப்ரசோதயாத்!!

கேது காயத்ரி

சிதர வர்ணாய வித்மஹே! ஸர்பரூபாய தீமஹி!!

தந்நோ கேது ப்ரசோதயாத்!!


நவக்கிரகளை ஒன்றாக வழிபடும் போது:



சூரியன், சோமன், செவ்வாய், சொற்புதன், வியாழன், வெள்ளி
காரியும் இராகு, கேது கடவுளர் ஒன்பதாமத்
தாரியில் சக்கரத்தைத் தரித்திரர் பூசித்தாலும்
பாரினில் புத்திரருண்டாம் பாக்கியம் நல்கும் தானே !

என்று தோத்திரம் சொல்லி வணங்கவேண்டும்.

நன்றி பனிப்புலம் இணையத்தளம்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum