HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



சூட்சுமம் திறந்த திருமந்திரம்!

Go down

சூட்சுமம் திறந்த திருமந்திரம்! Empty சூட்சுமம் திறந்த திருமந்திரம்!

Post by மாலதி December 11th 2010, 19:13

திருமந்திரத்தில் மரபியல் தத்துவம்
நவீன உயிரியல் விஞ்ஞானத்தின் மிக மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் இரண்டு.
1. பரிணாம வளர்ச்சித் தத்துவம்.
2. மரபியல் தத்துவம்.
டார்வின் கண்டுபிடித்த பரிணாம வளர்ச்சித் தத்துவம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். சுருக்க மாகச் சொல்வதெனில், “குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான்’ என்று விளக்குவதே பரிணாம வளர்ச்சித் தத்துவம்.
முதன் முதலில் அமீபா போன்ற ஒரு செல் உயிரினங்கள் தோன்றின. பல கோடி வருடங் களில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியால் படிப் படியாக உயர் வளர்ச்சி பெற்ற உயிரினங்கள் தோன்றின. கடைசியாக மனிதன்! பரிணாம வளர்ச்சியின் உச்சாணிக் கொம்பில் தற்போது இருப்பவன் மனிதனே! பரிணாம வளர்ச்சித் தத்துவம் மதங்கள் கூறும் படைப்புத் தத்துவத் திற்கு எதிராக இருப்பதால், ஆரம்ப காலத்தில் டார்வினின் தத்துவத்திற்குக் கடுமையான எதிர்ப்பு இருந்தது. ஆனால் விஞ்ஞானம் வளர வளர, டார்வினின் தத்துவம் உண்மை என்பது புரிந்ததால் இன்று உலகம் முழுவதும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
டார்வினின் பரிணாம வளர்ச்சித் தத்துவத்தில் இன்னமும் விடை தெரியாத பல கேள்விகளும் புதிர்களும் உள்ளன. அவை குறித்த ஆராய்ச்சி களும் விவாதங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தாய், தந்தையரின் சாயல்களும் தன்மைகளும் எவ்வாறு அவர்களின் குழந்தைகளை வந்து சேர்கின்றன என்பதை விளக்குவதே மாண்டெலின் மரபியல் தத்துவமாகும். ஜொகான் கிரகொரி மாண்டெல் (1822-1884) ஆஸ்திரியா நாட்டைச் சார்ந்த ஒரு கிறிஸ்துவத் துறவி. கணிதம், விஞ்ஞானம் ஆகியவற்றை கற்றுத் தேறிய இவர் ஒரு மிகச் சிறந்த தோட்டக் கலை வல்லுநராகவும் இருந்தார். தனது மடத்திலுள்ள தோட்டத்தில் பலவகையான செடிகளை ஒட்டு செய்து இவர் நடத்திய திறமையான ஆராய்ச்சிகளே மரபியல் எனும் மிகப்பெரிய விஞ்ஞானத் துறை யின் கதவுகளைத் திறந்தது.
இன்று மரபியலின் தந்தை என்று மாண் டெல் போற்றப்படு கிறார். அவர் உயிரோ டிருந்த காலத்தில் அவரது மரபியல் தத்துவத்தை விஞ்ஞான உலகம் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. 1884- ஆம் ஆண்டு மாண்டெல் இறந்த பின்னர், அவரது தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு வேறு பல விஞ்ஞானி கள் தொடர்ந்து ஆராய்ச்சிகளை நடத்தினர்.
1890-ஆம் ஆண்டில்தான் மாண்டெல் கண்டு பிடித்த மரபியல் தத்துவம் முழுக்க முழுக்க உண்மை என்பதை விஞ்ஞான உலகம் ஏற்றுக் கொண்டது. அதன் பின்னர் கடந்த 120 ஆண்டுகளில் நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு மரபியல் விஞ்ஞானம் வளர்ச்சி பெற்றுவிட்டது. இன்று குளோனிங் முறையில் ஆடு, பன்றி, முயல் என உருவாக்க முடிகிறது.
நவீன மரபியல் விஞ்ஞானத்தின் வயது 120 ஆண்டுகள்தான். ஆனால் மாண்டெல் மரபியல் தத்துவத்தைக் கண்டறிவதற்கு முன்னரே பாமர மனிதன்கூட தனது அனுபவத்தில் அதை உணர்ந்திருந்தான். ஏன்? எதற்கு? எப்படி என்பவைதான் அவனுக்குத் தெரிந்திருக்க வில்லை.
குழந்தை பிறந்த வீடுகளில் இந்த உண்மையை இன்றும்கூட கண்கூடாகக் காணலாம். குழந்தை யைக் காண வருகிறவர்கள் ஆளாளுக்கு ஒரு அபிப்பிராயம் கூறுவார்கள். “அப்பனை அப்படியே உரிச்சு வச்சிருக்கான்’, “அவ அம்மா கண்ணு அப்படியே வந்திருக்கு’ “காது இரண்டும் அவன் அப்பத்தா மாதிரியே தூக்கிட்டு இருக்கு’, “அவன் மாமன் மாதிரியே திருட்டு முழி முழிக்கி றான்’ என பல வகையான அபிப்பிராயங்கள் வெளிவரும். மூதாதையரின் சாயல் சந்ததியி னருக்கு வரும் என்பது பன்னெடுங்காலமாகவே அறியப்பட்டிருந்த ஒரு உண்மைதான்.
120 ஆண்டுகளே ஆன நவீன மரபியலின் சாராம்சத்தை 6-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர் தனது திருமந்திரத்தில் அற்புதமாக விளக்கியுள்ளார். விந்துவிலுள்ள ஆண், பெண் குரோமோசோம்கள் (ல, வ) குறித்து திருமூலர் கூறியுள்ளதை ஏற்கெனவே கண்டோம். இனி மரபியல் குறித்த மற்றொரு பாடலைக் காணலாம்.

“ஏய் அங்கு அலந்த இருவர்தம் சாயத்துப்

பாயும் கருவும் உருவாம் எனப் பல

காயம் கலந்தது காணப் பதிந்தபின்

மாயம் கலந்த மனோபலம் ஆனதே’.

-திருமந்திரம் பாடல் எண்-268.

இந்தப் பாடலின் பொருளை சுருக்கமாகக் காணலாம்.

“பல பிறவிகள் எடுத்து வருந்திய அந்த ஆன்மாவானது, தந்தையின் சுக்கிலம் வழியாகத் தாயின் கருப்பையிலுள்ள கரு முட்டையை அடைந்து ஒரு கருவாக உயிர்கொள்ளும்போது, தாய், தந்தை இருவரின் உடலிலுள்ள பலவகை தத்துவங்களும் விகாரங்களும் அந்தக் கருவினுள் பதிவதோடு, கருவில் அவர்களது சாயலும் பதியும். அதுமட்டுமின்றி, அவர்களது மனதிலுள்ள எண்ணங்கள், உணர்வுகள் போன்றவையும்கூட சேர்ந்து பதியும்.’
மரபியலின் தந்தை மண்டெல் 120 ஆண்டு களுக்குமுன் கண்டுபிடித்ததை நமது திருமூலர் 1600 ஆண்டுகளுக்கு முன்னரே எவ்வளவு அற்புதமாக விளக்கியிருக்கிறார்!
இனி இந்தத் திருமந்திரப் பாடலில் பொதிந் துள்ள சில சூட்சுமமான விஷயங்களை சற்றே அலசிப் பார்க்கலாம்.
தாய், தந்தையரின் சாயல் குழந்தைகளுக்கு வரும் என்பது அனைவரும் அறிந்த உண்மை தான். ஆனால் திருமூலர் இங்கு தரும் புதிய செய்தி- தாய், தந்தையரின் மனதிலுள்ள எண்ணங்களும் உணர்வுகளும்கூட கருவிலுள்ள குழந்தையிடம் வந்து பதியும் என்பதுதான்!
கருவுற்ற காலத்தில் பெண்ணின் மனநிலையும் எண்ணங்களும் உணர்வுகளும் நல்ல நிலையில் இருப்பது அவசியம் என்பதை இன்று நவீன மருத்துவ விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கிறது. கருவைச் சுமக்கும் காலத்தில் பெண்ணின் மன நிலையில் ஏற்படும் எதிர்மறையான மாற்றங்கள் கருவிலிருக்கும் குழந்தையையும் பாதிக்கும் என்பதைப் பல ஆய்வுகளின் மூலம் நிரூபித்திருக் கிறார்கள்.
ஆனால் திருமூலர் அதற்கு மேலும் ஒரு படி சென்று, கரு உருவாகும் வேளையிலேயே தாய், தந்தை இருவரின் மனதிலுள்ள எண்ணங்களும் உணர்வுகளும் (விந்தின் வழியாகவும், கருமுட்டையின் வழியாகவும்) கருவில் பதிந்து விடுகின்றன என்கிறார். ஆக, ஒரு ஆணும் பெண்ணும் நல்ல உணர்வுகள், நல்ல நினைவுகள், எண்ணங்கள் ஆகியவற்றால் நிரம்பியிருந்தால் மட்டுமே அவர்களின் கூடலால் உருவாகும் கருவும் நல்ல நிலையில் பிறக்கும். நல்லவனாக வளரும்.
“தினை விதைத்தால் தினை முளைக்கும்- வினை விதைத்தால் வினை முளைக்கும்’ என்ற பழமொழிக்கு இது ஒரு சரியான உதாரணம்.
அடுத்ததாக, பாடலின் முதல் வரியில் ஒரு சூட்சுமம் உள்ளது. அதைக் காண்போம். பாடலின் துவக்கமே, ‘பல பிறவிகள் எடுத்து வருந்திய ஆன்மா’ என்றே துவங்குகிறது. இந்தப் பாடலில் முந்தைய பிறவிகள் குறித்துப் பேச வேண்டிய அவசியம் என்ன?
மரபணுக்கள் எனப்படும் ஜீன்களின் வழியாகவே மூதாதையர்களின் சாயல், குண நலன்கள் போன்றவை குழந்தையை வந்தடை கின்றன என்பது உண்மைதான். ஆனால் கருவிலிருக்கும் ஆன்மா ஏற்கெனவே பல பிறவிகளைக் கடந்து வந்துள்ளது. ஒவ்வொரு பிறவியிலும் பல அனுபவங்களை அது சந்தித்திருக்கும். பல உணர்வு நிலைகளை எதிர்கொண்டிருக்கும். ஒவ்வொரு பிறவியிலும் பல புதிய விஷயங் களைக் கற்றுக்கொண்டிருக்கும் அல்லவா? இந்த முன்ஜென்மத்து நினைவுகளும் உணர்வுகளும் அனுபவங்களும் கற்றுக் கொண்ட விஷயங்க ளும்கூட அந்த ஆன்மா கருவினுள் நுழையும் போது கூடவே வந்து பதிந்து விடுகின்றன.
இந்த உண்மையை நவீன மரபியல் விஞ்ஞானம் இதுவரையில் அறிந்து கொள்ள வில்லை. பூர்வ ஜென்மங்களின் நினைவுகளும் கருவில் வந்து பதியும் என்பதை சூட்சுமமாக உணர்த்தவே திருமூலர் இப்பாடலில் பூர்வ ஜென்மங்களைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.
விஞ்ஞானத்தால் இதுவரையில் உணரப் படாத இந்தக் கருத்து ஏற்புடையதுதானா? உண்மையாக இருக்க முடியுமா என்ற சந்தேகம் இயல்பாகவே எழும். இது உண்மையே என்பதற்குப் பல சான்றுகளை அடுக்க முடியும்.
சாயல், தன்மைகள், குணநலன்கள் ஆகியவை பரம்பரை பரம்பரையாக ஜீன்களின் வழியே சந்ததியினரை வந்தடைகிறது. சரி; ஆனால் ஒரு குழந்தை பிறந்தவுடனேயே தாயின் மார்பில் பால் குடிக்க அதற்குக் கற்றுத் தந்தது யார்?
மனிதர்கள் மட்டுமின்றி, அனைத்து உயிரினங் களிலும் இதைக் காண முடியும். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த அனைத்துமே பிறந்த உடனேயே தாயின் மடியில் பாலுண்ணத் துவங்கி விடுகின்றன.
அடுத்ததாக, உயிர் வாழும்முனைப்புஎன்பது அனைத்து உயிரினங் களிலுமே காணப்படும் ஒரு அடிப்படையான தன்மை. உயிர் வாழ்வதற்கான போராட்ட உணர்வு பிறக்கும்போதே உயிரினங்களிடம் காணப்படுகிறது. பாலுண்ணுவது, உயிர் வாழப் போராடுவது போன்றவை அனைத்துமே அனிச்சையாக நடைபெறுகின்றன. இவற்றிற் கான “மென்பொருள்’ ஜீன்களில் இருப்பதாக இதுவரையில் கண்டறியப்படவில்லை.
அப்படியானால், இத்தகைய செயல் களுக்கான பதிவுகள் ஆன்மாவில்தான் இருக்க வேண்டும் அல்லவா? கடந்த ஜென்மங்களில் கற்றுக் கொண்ட அனைத்தின் பதிவுகளும் ஆன்மாவில் உண்டு. இது தவிர கடந்த ஜென்மங்களில் செய்த பாவ புண்ணியங்களின் கணக்கும் (கர்மா) ஆன்மாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு ஆன்மா புதிய பிறவி எடுப்பதற்காக ஒரு கருவினுள் நுழையும்போது, அந்த ஆன்மாவில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்தும் சேர்ந்தே கருவினுள் நுழைகின்றன. இவை ஆழ்மனதிலும் (நன்க்ஷ ஸ்ரீர்ய்ள்ண்ர்ன்ள் ஙண்ய்க்), சக்தி உடல்களிலும் பதிவாகிவிடுகின்றன. இதை சூட்சுமமாக உணர்த்தவே “பல பிறவிகள் எடுத்த ஆன்மா’ என்பதை இப்பாடலில் வலியுறுத்துகிறார் திருமூலர்!
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum