HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



இந்து சமயம் - சிறு வரலாற்று குறிப்பு

Go down

இந்து சமயம் - சிறு வரலாற்று குறிப்பு Empty இந்து சமயம் - சிறு வரலாற்று குறிப்பு

Post by மாலதி December 31st 2011, 07:49

நாம்
பல விடயங்களை அறிந்து கொள்ள வேண்டி உள்ளது. முதலில் இந்து மதத்தின்
பின்னணி தகவல்களுடனும் அதனது முக்கியமான அடிப்படை தத்துவம் குறித்து பார்ப்போம்.



விடயங்கள், அறுவை இல்லாத வகையிலும், இலகுவாகவும், சுவையானதாகவும் இருக்கும் என உறுதி அளிக்கின்றோம்.



நீங்கள் தயாரா?..

  • இந்து மதம் உலகின் முக்கிய மதங்களில் ஒன்றாக உள்ளது. இதனை ஏறத்தாழ 1.4பில்லியன் மக்கள் பின் பற்றுகின்றனர். இந்தியாவும் ஓரளவுக்கு இலங்கையும் இந்து மதம் செழித்து வளர்ந்த நாடுகள் என்று கூற முடியும்.இந்து சமயம் - சிறு வரலாற்று குறிப்பு C3_0712


  • பண்டைய இந்தியாவின் பெயரான பாரதமும், லங்கா என இலங்கையும் பழம் பெரும் இதிகாசமான ராமாயணம்' எனும் காவியத்தில் குறிப்பிடப் படுகின்றன. இந்த இரண்டு நாடுகளில் இருந்து இந்து மதம்உலகம் முழுவதும் பரவிவிட்டது


  • இந்து மதம் யாரால் எப்போது ஸ்தாபிக்கப்பட்டது என்று யாருக்குமே தெரியாது. இந்த முக்கிய தனித்துவமான அம்சமானது மற்றைய, யாரால் எப்போது ஸ்தாபிக்கப்பட்டது என தெளிவாக குறிப்பிடக்கூடிய உலகின் வேறு மதங்களில் இருந்து, இந்து மதத்தினை வேறு படுத்துகின்றது.

இதன் காரணமாக இந்துகள், இந்து மதமானது கடவுளால் தமக்கு நேரடியாக தரப்பட்டதாக நம்புகின்றனர்


  • பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு அதிகாரியாக இருந்த , Charless Massan என்பவருக்கு செய்யும் வேலை சலிப்பாக இருந்தது. 1826ல் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு பின்னர், ஆப்கானிஸ்தான் - பலுச்சிஸ்தான் பகுதியில் ஒரு மலையேற்றபயணத்தை தொடங்கினார்.




இந்து சமயம் - சிறு வரலாற்று குறிப்பு Lord%20shiva




  • தற்போதைய பாக்கிஸ்தானில்
    ஓடி கொண்டிருக்கும் 'சிந்து' நதியின் கிளை நதியான 'ரவி' எனும் நதியின்
    இடது புறமாக நடந்து சென்ற போது, அழிவடைந்த நிலையில் இருந்த ஒரு நகரத்தினை
    இவர் கண்டு கொண்டார்.


இந்து சமயம் - சிறு வரலாற்று குறிப்பு River%20sindu%201


  • தனது குறிப்புகளில் 'ஹரப்பா' என்ற பகுதியில் காணப்பட்ட 'ஒரு அழிவடைந்த செங்கல் கோட்டை' என குறித்து வைத்தார். இதுவே 'ஹரப்பா' பற்றிய முதல் தகவல் குறிப்பாகும்.

இந்து சமயம் - சிறு வரலாற்று குறிப்பு Bricks%20castle







  • 1833 இல், மற்றொரு ஆய்வாளர், Sir Alexander Burns இப்பகுதியில்
    ஆய்வுக்கு சென்றிருந்தார். அரசனின் கொடும் செயல்களுக்கு இறைவன் கொடுத்த
    தண்டனை தான், இடிபாடுகள், மற்றும் அழிவுகளுக்கு காரணம் என உள்ளூர் மக்கள்
    கூறியதாக பதிவு செய்திருந்தார்.


இந்து சமயம் - சிறு வரலாற்று குறிப்பு Yogi%201


  • 1850 இல் இரண்டு ஸ்காட்டிஷ் பொறியாளர்கள் Branton சகோதரர்கள்(John Branton மற்றும் Robert Branton) கராச்சி மற்றும் லாகூர் இடையே ரயில் தடங்களை உருவாக்க இப்பகுதியில் முகாமிட்டிருந்தார்கள்.




  • தொழிலாளர்கள் தமது ரயில் பாதை
    வேலைகளுக்காக 'ஹரப்பா ' பகுதியில் அபரிதமாக கிடைத்த செங்கற்களை
    பயன்படுத்துவதை அவதானித்தனர். எனினும் அக்கற்கள் மிகப் பழைய காலத்துக்கு
    உரியன என ஆய்வு செய்து அறிந்து அதனை பயன் படுத்துவதனை தடுத்து விட்டனர்.





  • இவர்கள் அனுப்பி வைத்த தகவல் அறிக்கையினால் புதிதாக நிறுவப்பட்ட'இந்திய தொல்பொருள் ஆய்வு துறை' பிரிவின் முதல்அதிகாரியான AlexanderCunningam 1850 இன் ஆரம்பத்தில் இப் பகுதியினை பார்வையிட்டு அதனை ' தொல்பொருள் ஆய்வுக்கு' உரிய பகுதியாக பிரகடனம் செய்து குறியீடு செய்வித்தார்.



  • 1870 ல் ஓய்வு பெற்ற பிறகுஅப் பகுதியில தனது ஆய்வுகளை தொடங்கினார். 'இந்தியதொல்பொருள் ஆய்வு துறை' அவரது முடிவுகளை வெளியிட்டது.


  • அதில், ஹரப்பாவில் கண்டு எடுக்கப்பட்டனவற்றில் மிகவும் ஆர்வமேற்படுத்தும் ஒன்றாக, 'எருது ஒன்றின் மேலாக ஆறு புரியாத எழுத்துக்களுடன்' இருந்ததோர் முத்திரை விளங்கியது என குறிப்பிட்டுள்ளார்.
இந்து சமயம் - சிறு வரலாற்று குறிப்பு Bull


  • 1911 ஆம் ஆண்டில் D R Bhandarka என்பார், ஹரப்பாவில் இருந்து தென்மேற்கு திசையில் 400 மைல் தொலைவில் 'இறந்தோர் புதைக்கப்பட்ட குன்று' பகுதி ஒன்றில் ஆய்வு செய்தார். இந்த பகுதி பின்னர் மொகெஞ்சதாரோ என அறியப்பட்டது.
இந்து சமயம் - சிறு வரலாற்று குறிப்பு Animal




  • Sir John Marshall (1923 – 1934) என்பாரே 'சிந்து சமவெளி நாகரிகம்' எனும் வார்த்தை பிரயோகத்தினை ஆரம்பித்து வைத்தார். சிந்து நதியின் தீரத்தில் காணப்பட்ட ஹரப்பா மற்றும் மொகெஞ்சதாரோ ஆகிய பகுதிகளே 'சிந்து சமவெளி நாகரிகம்' நிலவிய பகுதிகள் என்பது அவரது முடிவாக இருந்தது.


  • வரலாற்றாசிரியர்கள் 'சிந்து சமவெளி நாகரிகம்' 4000ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கிமு 2600 முதல் 1600 கிமு வரை நிலைத்திருந்ததாக கணிப்பிடுகின்றனர். அதே காலப்பகுதியில் தான் எகிப்திய, சுமேரிய நாகரீகங்கள் இருந்தன.
இந்து சமயம் - சிறு வரலாற்று குறிப்பு Boar




  • சிந்து சமவெளி மக்கள் இடையே மிகவும் வளர்ந்த நாகரிகம் இருந்தது . அவர்கள் பார்லி, கோதுமை, எள்ளு, மற்றும் தானியங்களை உணவுக்காக பயிர் செய்திருக்கிறார்கள். மேலும் அவர்கள் வீடுகள் அமைக்க செங்கற்களையும், காற்றோட்டத்திற்காக ஜன்னல்களையும் பயன்படுத்தினார்கள். குடிநீர் பெற கிணறுகள் இருந்தன.
இந்து சமயம் - சிறு வரலாற்று குறிப்பு Deer




  • மற்றொரு ஆராய்ச்சியாளர் Dr Mackey 'சிந்து சமவெளி நாகரிகம்', சுமேரிய நாகரிகத்தினை விடவும் மேம்பட்ட நிலையில் இருந்ததாக கருதினார். அங்கே பயன்படுத்த பரந்த சாலைகள், மிகவும் சிறந்த முறையில் அமைந்து இருந்த நிலத்தடி வடிகால் மற்றும் கழிவுநீர் அமைப்பு என்பனவற்றினை உதாரணமாக சுட்டிக்காட்டுகின்றார்.
இந்து சமயம் - சிறு வரலாற்று குறிப்பு Harappah
சுட்ட செங்கற்களால் ஆன வீடுகள்.
இன்றைய கிராமத்து வீடுகள் கூட 4000 ஆண்டுகளுக்கு முந்தைய வீட்டு வசதி இல்லாமல் இருகின்றார்கள்.


  • குடியிருப்பு வீடுகள் தவிர பொது இடங்கள் பல அங்கே இருந்தன.


  • மேலும் எருது, யானை, குதிரை மற்றும் நாய்கள் போன்றனவும் சிந்து வெளி நாகரிகத்தில் காணப்பட்டன. அவர்களது குழந்தைகளுக்கு களிமண்ணில் செய்யப்பட்ட பொம்மைகள் பயன்படுத்தி இருந்தனர். தாமிரம், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களும் அவற்றினால் செய்யப்பட்ட நகைகள் கூட இருந்தன.

இந்து சமயம் - சிறு வரலாற்று குறிப்பு Pots



  • அந்த
    ப்
    பெரிய நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது என்ற புதிர் இன்னும் தீர்க்கப்பட வேண்டும். அந்த நகரங்களில் வாழ்ந்த மக்கள், வெள்ள பெருக்கினாலோ, பூமி அதிர்வாலோ அல்லது நோய், வறட்சி போன்றவற்றினால் அழிந்து போனார்களா?

எனினும் ஏற்று கொள்ளக் கூடிய ஒரு விளக்கமாக, சிந்து நதியின் நீரோட்டம்,
ஒரு பெரிய பூமி அதிர்வு அல்லது எரிமலை காரணமாக தடைப்பட்டு வேறு புதிய பாதை
மூலமாக தொடர்ந்து சென்றதால், சிந்து வெளி நாகரிக பகுதியில் இருந்த பயிர்
நிலங்கள், நீர் இல்லாமல் வறண்டு மக்கள் பசி, பட்டினி காரணமாக மாண்டோ அல்லது
நகர்ந்தோ இருக்கலாம்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

இந்து சமயம் - சிறு வரலாற்று குறிப்பு Empty Re: இந்து சமயம் - சிறு வரலாற்று குறிப்பு

Post by மாலதி December 31st 2011, 07:50


  • சிந்து சமவெளி மக்கள் வழிபாட்டு முறைகள் பற்றி இதுவரை வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை. தொல்பொருள் ஆய்வுகள் இன்னும் தொடருகின்றன.


  • சிந்து சமவெளி மக்கள் வழிபாட்டு முறைகள் பற்றி இதுவரை வலுவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தொல்பொருள் ஆய்வுகள் இன்னும் தொடருகின்றன.


  • கோவில்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் இதுவரை தோண்டியெடுக்கப்பட்ட முத்திரைகள், உருவங்கள் மற்றும் மட்பாண்ட பொருட்கள் என்பன வரலாற்றாசிரியர்களை ஹரப்பா மக்கள் இந்துக்கள் என்ற முடிவுக்கு வர வைத்துள்ளது.
இந்து சமயம் - சிறு வரலாற்று குறிப்பு Yogi2


  • பாதிக்
    கண்ணை மூடியவாறு தியானத்தில் அமர்ந்திருக்கும் ஒரு யோகியின் கல்லால் ஆன
    உருவம் ஒன்று கண்டு எடுக்கப்பட்டுள்ளது. உடலில் இருந்து இடது தோல்
    மீதாக கயிற்றில் இழுத்துப் போர்த்தப்பட்ட ஆடை அணிந்த நிலையில் அப்புனித உருவம் காணப்படுகின்றது.

இந்து சமயம் - சிறு வரலாற்று குறிப்பு Bangles


  • இங்கே எடுக்கப்பட்ட பல மட்பாண்டங்களில்
    காணப் பட்ட உருவங்கள் இந்து சமயத்திலுள்ள பெண் தெய்வங்கள் போல
    இருகின்றன. இந்த உருவங்களின் கைகள் வளையல்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. எனவே இங்கே பெண் தெய்வங்கள் வழிபாடு இருந்திருக்ககூடும் என முடிவக்கு வரமுடிகிறது.


  • கிடைத்த மேலும்ஆதாரங்கள், அங்கே சிவன், மற்றும் அவரது துணை சக்தி வழிபாடு, விநாயகர் வழிபாடு இருந்தது என்றும் அவர்களுடன் யானை, புலி, எருது, பாம்பு ஆகியன கூட வணக்கப்பட்டன எனவும் உறுதி செய்கின்றன.
இந்து சமயம் - சிறு வரலாற்று குறிப்பு Hariharan


  • மேலும் இங்கே காணப் பட்ட நான்கு கைகள் கொண்ட உருவம் பிரம்மாஅல்லதுவிஷ்ணு
    ஆக இருக்கலாம் எனவும், வேறு ஒரு உருவம் கழுத்தில் சங்கிலி போன்ற கழுத்தணி
    ஒன்றை அணிந்ததாக காணப்படுகின்றது. இது இன்றைய இறையுருவ வழிபாட்டுடன் ஒத்து
    போவதனையும் கவனிக்கலாம்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

இந்து சமயம் - சிறு வரலாற்று குறிப்பு Empty Re: இந்து சமயம் - சிறு வரலாற்று குறிப்பு

Post by மாலதி December 31st 2011, 07:50


  • வரலாற்று ஆய்வாளர்கள் சிந்து சமவெளிநாகரிகத்தில் இந்து மதம் செழித்து வளர்ந்து, அங்கிருந்து மக்கள் இந்தியதீபகற்பம் மற்றும் இலங்கைதீவு நோக்கி பல்வேறு காரணங்களுக்காக தெற்கு திசையில் நகர்ந்த போது இந்து மதமும் அவர்களுடன் எடுத்து செல்லப்பட்டிருக்கலாம் என கருதுகின்றனர்.


  • இங்கே மிக முக்கியமாக கவனிக்கப் பட வேண்டிய விடயமானது, உலகில் இன்று இருக்கும் எந்த பெரிய மதமும் சிந்து சமவெளி நாகரிகம்' நிலவிய காலத்துக்கு பல நூறாண்டுகளுக்கு பின்னரே அமைக்கப்பட்டன என்பதாகும்.


  • ஆகவே சிந்து வெளி மக்கள் இந்து மதம் தவிர வேறு மதம் ஒன்றினை பின் பற்றி இருக்க முடியாது என்பதனை நாம் உறுதியாக சொல்ல முடியும்.
இந்து சமயம் - சிறு வரலாற்று குறிப்பு C4_0946
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

இந்து சமயம் - சிறு வரலாற்று குறிப்பு Empty Re: இந்து சமயம் - சிறு வரலாற்று குறிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum