Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
இழப்பு ? ! ?
2 posters
Page 1 of 1
இழப்பு ? ! ?
ராதேக்ருஷ்ணா
இழப்பு !
எப்பொழுது பார்த்தாலும்
ஏதேனும் இழந்ததைப்பற்றியே
பேசும் முட்டாள் கூட்டம் !
இருக்கும் வாழ்வை
ரசிக்கத்தெரியாத
பைத்தியக்காரக் கூட்டம் !
இழந்ததை நினைத்தே
இப்பொழுதிருக்கும் ஆனந்தத்தை
அனுபவிக்காத அசட்டுக்கூட்டம் !
அடுத்தவரிடம் தான்
இழந்ததைப் பற்றியே பேசி
வீணாகும் வீணர்கள் கூட்டம் !
அப்பப்பா . . .
தினமும் இந்த ஜனங்கள்
ஏதேனும் ஒரு இழப்பைப்பற்றியே
புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் !
ஒன்றுமில்லாத விஷயங்களை
இழந்ததற்கெல்லாம்
ஒரு பெரிய அழுகை,ஒப்பாரி எல்லாம் !
இழப்பையே யோசிப்பவர்கள்,
இருப்பதை ஏன் யோசிப்பதில்லை !
நாம் மிகப்பெரிய
அற்புதங்கள் பலவற்றை
இழந்துவிட்டோம் . . .
ஒரு கவலையுமில்லாத
நம்முடைய குழந்தைப் பருவத்தை
இழந்துவிட்டோம் . . .
எத்தனை இரவுகளை
தூக்கத்திலேயே தெரியாமல்
இழந்துவிட்டோம் . . .
எத்தனை பகல் பொழுதை
ஓட்டத்திலும்,உழைப்பிலும்
இழந்துவிட்டோம் . . .
கோபத்தினால் எத்தனை முறை
நல்ல ஆனந்தத்தை
இழந்துவிட்டோம் . . .
குழப்பத்தினால் எவ்வளவு
நல்ல சந்தர்ப்பங்களை
இழந்துவிட்டோம் . . .
அவசரத்தினால் எத்தனை
நல்ல விஷயங்களை
இழந்துவிட்டோம் . . .
முட்டாள்தனத்தினால்
எத்தனை தடவை
நிம்மதியை இழந்துவிட்டோம் . . .
அல்ப விஷயங்களில்
மனதை கொடுத்துவிட்டு
எத்தனை முறை தெய்வதரிசனத்தை
இழந்துவிட்டோம் . . .
பாசத்தினால் எத்தனை
முறை கோயிலுக்குப் போகும்
வாய்ப்புகளை இழந்துவிட்டோம் . . .
இதையெல்லாம் விட
நீ என்ன பெரியதாக இழந்துவிட்டாய் ?
சும்மா புலம்பாதே . . .
பணத்தை இழந்ததற்கு
ஒரு புலம்பல் . . .
உன்னை விட பணம் பெரியதல்ல . . .
தங்கத்தை இழந்ததற்கு
ஒரு ஒப்பாரி . . .
உன்னை விட தங்கம் சிறந்ததல்ல . . .
பிடித்த ஆடையை தொலைத்ததற்கு
ஒரு அழுகை . . .
உன்னை விட ஆடை உயர்ந்ததல்ல . . .
சில நாள் தூக்கம் கெட்டதற்கு
ஒரு வருத்தம் . . .
உன்னை விட தூக்கம் அழகமல்ல . . .
வீட்டை இழந்ததற்கு
ஒரு சோகம் . . .
உன்னை விட வீடு பெரியதல்ல . . .
செருப்பை இழந்ததற்கு
ஒரு பெரிய துன்பம் . . .
உன்னை விட செருப்பு அற்புதமல்ல . . .
சேர்த்த சொத்தை இழந்ததற்கு
கப்பல் கவிழ்ந்தார் போல்
முகம் முழுக்க சோகம் . . .
உன்னை விட சொத்து
விலைஉயர்ந்ததல்ல . . .
இன்னும் பல நான் சொல்வேன் . . .
போதுமே . . .
உன் புலம்பல் . . .
உன் அழுகை . . .
உன் சோகம் . . .
உன் வருத்தம் . . .
உன் ஒப்பாரி . . .
ஒன்றை நீ ஞாபகம் வைத்துக்கொள் !
நீ இழந்ததை விட
நீ பெரியவன்/பெரியவள் . . .
இதை புரிந்துகொள் !
இழப்பை விட
நம்மிடம் இருப்பது அதிகம்தான் . . .
நாம் இழக்காதவற்றை சொல்கிறேன் !
நாம் ஒரு நாளும் க்ருஷ்ணனை
இழக்கவில்லை . . .
நாம் இன்று வரை நம்
வாழ்வை இழக்கவில்லை . . .
நம் வாழ்க்கை நாம் இழந்ததை
எல்லாம் நமக்கு திருப்பித்தரும்
ஆற்றல் உடையது . . .
நாம் இழந்த மனிதர்களின்
அரவணைப்பைத் தர
நம் க்ருஷ்ணன் இருக்கிறான் . . .
இப்போது வாழ் . . .
உனக்காக வாழ் . . .
உன் வாழ்க்கைக்காக வாழ் . . .
நீ எதையெல்லாம்
இழந்தாயோ அதையெல்லாம்
உன் க்ருஷ்ணனுக்கு அர்ப்பணித்து விடு !
இனி இழப்பை சிந்திக்காதே . . .
இனி இருப்பதை மட்டும் யோசி . . .
இனி வாழ்வை நேசி . . .
இனி உன்னைச் சுற்றி இருப்பதை ரசி . . .
இனி உன்னிடம் இருப்பதை அனுபவி . . .
இழந்ததை நினைத்து ஏங்காதே . . .
இருப்பதை ரசிக்காமல் புலம்பாதே . .
Read more: http://vedhaththamizh.blogspot.com/2010/09/blog-post_4783.html#ixzz0zkg9XiVp
Under Creative Commons License: Attribution
இழப்பு !
எப்பொழுது பார்த்தாலும்
ஏதேனும் இழந்ததைப்பற்றியே
பேசும் முட்டாள் கூட்டம் !
இருக்கும் வாழ்வை
ரசிக்கத்தெரியாத
பைத்தியக்காரக் கூட்டம் !
இழந்ததை நினைத்தே
இப்பொழுதிருக்கும் ஆனந்தத்தை
அனுபவிக்காத அசட்டுக்கூட்டம் !
அடுத்தவரிடம் தான்
இழந்ததைப் பற்றியே பேசி
வீணாகும் வீணர்கள் கூட்டம் !
அப்பப்பா . . .
தினமும் இந்த ஜனங்கள்
ஏதேனும் ஒரு இழப்பைப்பற்றியே
புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் !
ஒன்றுமில்லாத விஷயங்களை
இழந்ததற்கெல்லாம்
ஒரு பெரிய அழுகை,ஒப்பாரி எல்லாம் !
இழப்பையே யோசிப்பவர்கள்,
இருப்பதை ஏன் யோசிப்பதில்லை !
நாம் மிகப்பெரிய
அற்புதங்கள் பலவற்றை
இழந்துவிட்டோம் . . .
ஒரு கவலையுமில்லாத
நம்முடைய குழந்தைப் பருவத்தை
இழந்துவிட்டோம் . . .
எத்தனை இரவுகளை
தூக்கத்திலேயே தெரியாமல்
இழந்துவிட்டோம் . . .
எத்தனை பகல் பொழுதை
ஓட்டத்திலும்,உழைப்பிலும்
இழந்துவிட்டோம் . . .
கோபத்தினால் எத்தனை முறை
நல்ல ஆனந்தத்தை
இழந்துவிட்டோம் . . .
குழப்பத்தினால் எவ்வளவு
நல்ல சந்தர்ப்பங்களை
இழந்துவிட்டோம் . . .
அவசரத்தினால் எத்தனை
நல்ல விஷயங்களை
இழந்துவிட்டோம் . . .
முட்டாள்தனத்தினால்
எத்தனை தடவை
நிம்மதியை இழந்துவிட்டோம் . . .
அல்ப விஷயங்களில்
மனதை கொடுத்துவிட்டு
எத்தனை முறை தெய்வதரிசனத்தை
இழந்துவிட்டோம் . . .
பாசத்தினால் எத்தனை
முறை கோயிலுக்குப் போகும்
வாய்ப்புகளை இழந்துவிட்டோம் . . .
இதையெல்லாம் விட
நீ என்ன பெரியதாக இழந்துவிட்டாய் ?
சும்மா புலம்பாதே . . .
பணத்தை இழந்ததற்கு
ஒரு புலம்பல் . . .
உன்னை விட பணம் பெரியதல்ல . . .
தங்கத்தை இழந்ததற்கு
ஒரு ஒப்பாரி . . .
உன்னை விட தங்கம் சிறந்ததல்ல . . .
பிடித்த ஆடையை தொலைத்ததற்கு
ஒரு அழுகை . . .
உன்னை விட ஆடை உயர்ந்ததல்ல . . .
சில நாள் தூக்கம் கெட்டதற்கு
ஒரு வருத்தம் . . .
உன்னை விட தூக்கம் அழகமல்ல . . .
வீட்டை இழந்ததற்கு
ஒரு சோகம் . . .
உன்னை விட வீடு பெரியதல்ல . . .
செருப்பை இழந்ததற்கு
ஒரு பெரிய துன்பம் . . .
உன்னை விட செருப்பு அற்புதமல்ல . . .
சேர்த்த சொத்தை இழந்ததற்கு
கப்பல் கவிழ்ந்தார் போல்
முகம் முழுக்க சோகம் . . .
உன்னை விட சொத்து
விலைஉயர்ந்ததல்ல . . .
இன்னும் பல நான் சொல்வேன் . . .
போதுமே . . .
உன் புலம்பல் . . .
உன் அழுகை . . .
உன் சோகம் . . .
உன் வருத்தம் . . .
உன் ஒப்பாரி . . .
ஒன்றை நீ ஞாபகம் வைத்துக்கொள் !
நீ இழந்ததை விட
நீ பெரியவன்/பெரியவள் . . .
இதை புரிந்துகொள் !
இழப்பை விட
நம்மிடம் இருப்பது அதிகம்தான் . . .
நாம் இழக்காதவற்றை சொல்கிறேன் !
நாம் ஒரு நாளும் க்ருஷ்ணனை
இழக்கவில்லை . . .
நாம் இன்று வரை நம்
வாழ்வை இழக்கவில்லை . . .
நம் வாழ்க்கை நாம் இழந்ததை
எல்லாம் நமக்கு திருப்பித்தரும்
ஆற்றல் உடையது . . .
நாம் இழந்த மனிதர்களின்
அரவணைப்பைத் தர
நம் க்ருஷ்ணன் இருக்கிறான் . . .
இப்போது வாழ் . . .
உனக்காக வாழ் . . .
உன் வாழ்க்கைக்காக வாழ் . . .
நீ எதையெல்லாம்
இழந்தாயோ அதையெல்லாம்
உன் க்ருஷ்ணனுக்கு அர்ப்பணித்து விடு !
இனி இழப்பை சிந்திக்காதே . . .
இனி இருப்பதை மட்டும் யோசி . . .
இனி வாழ்வை நேசி . . .
இனி உன்னைச் சுற்றி இருப்பதை ரசி . . .
இனி உன்னிடம் இருப்பதை அனுபவி . . .
இழந்ததை நினைத்து ஏங்காதே . . .
இருப்பதை ரசிக்காமல் புலம்பாதே . .
Read more: http://vedhaththamizh.blogspot.com/2010/09/blog-post_4783.html#ixzz0zkg9XiVp
Under Creative Commons License: Attribution
radhekrishna- Posts : 7
Join date : 16/09/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum